பக்கம் எண் :

260பாரதம்ஆதி பருவம்

சரணமடைந்து 'இனி என் செய்வது?' என்று வினாவ, அவன் தனது
ஞானக்கண்ணால் உண்மையையுணர்ந்து 'அவர் இறந்திலர்' என்று கூறித்
துருபதனைத் தேற்றியமையும்; பாண்டவர்மிக்க பலசாலிகளாதலால் பகைவர்களால்
எவ்வகையாலும் எளிதில் அழிக்கப்படுவரல்ல ரென்று துருபதன் துணிந்தமையும்
- இங்குக் குறிக்கப்பட்ட விஷயங்கள். 'இன்னம்' என்றதனால், துருபதன் செய்த
முயற்சி ஒன்றினாலும் அவர்கள் கிடைத்தில ரென்பது பெறப்படும்.
இங்ஙனமிருக்கவும் துருபதன் ஆஸ்திக னாதலால், வரம், வான் மொழி,
குருமொழி இவற்றில் மிக்கநம்பிக்கை கொண்டு அதனால் இன்னும் இவள்
அருச்சுனனையே மணஞ்செய்து பெயர் - உலூகமுனிவனென்ப.
'வான்மொழிகேட்ட வாறும்,' 'தேசிகருரைத்தவாறும்,' 'உரத்தினாற் கெடாதவாறும்
என்று பிரதிபேதம்.                                           (477)

3.- துருபதன் சுயம்வரநாள் குறித்தலும், அரசர் திரளலும்.

தான்வரித்தவற்கேயெய்த வுரியளென்றனயையென்று
கான்வரிச்சுரும்புண்மாலைக் காவலர்க்கோலைபோக்க
மான்வரிக்கண்ணிக்கேற்ற வதுவைநாண்மலர்ப்பூவொன்றைத்
தேன்வரித்தென்னவந்து திரண்டதுகுமரர்சேனை.

    (இ-ள்.) 'என் தனயை - எனதுமகள், தான்வரித்தவற்குஏ எய்தஉரியன் -
(சுயம்வரத்தில்) அவள் தானாக விரும்பிக்கொள்ளும் புருஷனுக்கே பெறுதற்கு
உரியள், ' என்று-, கான் வரி சுரும்பு உண் மாலை காவலர்க்கு ஓலைபோக்க-
இசைப்பாட்டையும் உடம்பிற் புள்ளிகளையு முடைய வண்டுகள் (மொய்த்துத்)
தேனுண்ணுகிற பூமாலையைத் தரித்த அரசர்களுக்கு (த் துருபதன்) திருமுகம்
அனுப்ப,- மான் வரி கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள் - மானின் பார்வைபோன்ற
செவ்வரிபரந்த கண்களையுடைய அத்திரௌபதிக்கு இயைந்த அந்தச் சுயம்வர
தினத்தில்,- மலர் பூ ஒன்றை தேன் வரித்து என்ன - மலர்ந்த ஒருபூவை
வண்டுக்கூட்டம் (தனித்தனி தம்தமக்கென்று கொண்டு)
விரும்பிவந்துமொய்த்தாற்போல, குமரர்சேனை - இராசகுமாரர்களுடையகூட்டம்,
(திரௌபதியொருத்தியை விரும்பி), வந்துதிரண்டது -; (எ-று.)

     திரௌபதிக்குச் சுயம்வரமென்று உலகமெங்குந்தெரிவித்தால் அவளைப்
பெறும்விருப்பத்தாற் பலரும் வரும்போது பாண்டவரும் வருவ ரென்று கருதிச்
சுயம்வரம்நாட்டி அதற்குஉரிய பத்திரிகையைத் தூதர்மூலமாக
எல்லாத்தேசத்தரசர்க்கும் அனுப்பினனென்க. சுயம்வரமாவது - (ஓர்
இராசகன்னிகை ஓரிடத்திலே வருவித்துச் சேர்க்கப்பட்ட இராசகுமாரர்பலருள்
தனக்குப்பிரியமான ஒருவனைத்) தானே கணவனாக ஏற்படுத்திக்கொள்ளுதல்.
பெருந்திரளென்பதை உணர்த்தற்கு 'சேனை' என்றார்.           (478)

4.-சுயம்வரத்தைச் செவியுற்றவுடன் பாண்டவர்
பிரயாணப்படுதல்.

ஆங்கதுநிகழ்ந்தமாற்ற மந்தணனொருவன்வந்தோன்
ஈங்கிவர்க்குரைப்பமைந்த ரைவரும்யாயுங்கேட்டுப்