ஸ்திதி சங்காரங்கள் பிரவாகம் போல அவிச்சிந்நமாக நடந்து வருதலும், உயிர்கள் மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து இருந்து இறத்தலும், முன் இரண்டு அடிகளில் விளங்கும். முகுந்தன்- முத்தியுலகவின்பத்தையும் இவ்வுலகவின்பத்தையும் (தன் அடியார்க்குத்) தருபவ னென்று பொருள்படும். (494) 20.- அந்நகரத்து வீதிகளில் நாட்டிய துவசங்களின் வருணனை. குழைப்புறங்கடந்தசெங்கட் குறுநகைக்கொவ்வைச்செவ்வாய் இழைப்பொலிமுலையினாளுக் கிற்றைநாள்வதுவையென்று மழைப்புறமாடமேறி வருநரைமலர்க்கைகாட்டி அழைப்பனபோன்றவீதி யணிகொடியாடையெல்லாம். |
(இ - ள்.) வீதி அணி கொடி ஆடைஎல்லாம் - அந்நகரத்து வீதிகளின் அலங்காரமாக நாட்டப்பட்ட துவசங்களின் சீலைகளெல்லாம்,-குழை புறம் கடந்த - காதின்புறத்தைக் கடந்து சென்ற [மிகநீணட,]. செம் கண் - சிவந்தகண்களையும், குறுநகை - புன்சிரிப்பையும், கொவ்வை செம்வாய் - கொவ்வைப் பழம்போலச் சிவந்த வாயையும், இழை பொலி முலையினாளுக்கு -(தம்மிடத்து அணிந்த) ஆபரணங்கள் விளங்குதற்குக் காரணமான தனங்களையுமுடைய திரௌபதிக்கு, இற்றை நாள் வதுவை என்று-இன்றைத்தினம் சுயம்வரமென்று தெரிவித்து, மழை புறம் மாடம் ஏறி - மேகங்களைத் தம்மேலுடையனவான [மிகவுயர்ந்த] மேல்மாளிகைகளின்மீது ஏறி, வருநரை மலர் கை காட்டி அழைப்பன போன்ற- (அவ்விவாகத்தின்பொருட்டு) வருகின்றபாண்டவர்களை (விரைந்து வருமாறு) மலர்போன்ற கைகளைக்காட்டியழைப்பன போன்றன; இங்கு ஆடைகளைக் கைகளாகவும், கொடிகளை அக்கைகளையுடையராகவும் கொள்க. தற்குறிப்பேற்றவணி. திரௌபதியின் கண்கள் மிக நீண்டுள்ளன என்ற கருத்தை விளக்க, 'குழைப்புறங் கடந்த செங்கண்' என்றார். குழை-ஒருவகைக் காதணி; இலக்கணையாய், காதை யுணர்த்திற்று. (495) 21.- பாண்டவர் அவ்வூரில் ஒருகுயவன்வீட்டில் இடங்கொள்ளுதல். விண்டலம்புதைத்தபைம்பொற் றுகிலிடுவிதானநீழல் மண்டகிற்புகையின்மூழ்கி யாவணமறுகிற்செல்வம் கண்டுகண்டரியேறானின் கவினுடைநெடுந்தோல்போர்த்துக் கொண்டனசெயலாராங்கோர் குலாலனதிருக்கைசேர்ந்தார். |
(இ - ள்.) அரி ஏறு - ஆண்சிங்கம், ஆனின் கவின் உடை நெடு தோல் போர்த்துக்கொண்டு அன-பசுவினுடைய அழகுள்ள நெடியதோலைப் போர்த்துக்கொண்டாற் போன்ற, செயலார்-செய்கையையுடையவர்களாகிய பாண்டவர்கள்,- விண்தலம்புதைத்த- ஆகாயத்தினிடம்முழுதையும் மூடிய, பைம் பொன் துகில் - பசும்போன்சீலையினால், இடு - இடப்பட்ட,விதானம் மேற்கட்டியின் நீழல்-நிழலிலே (கடந்துசென்ற), மண்டு அகில் புகையில் மூழ்கி- (அங்கு) நெருங்கியஅகிற்புகையிலே, முழுகி, ஆவணம் மறுகில் செல்வம் கண்டு கண்டு - கடைவீதியிலுள்ள செல்வங்களைப் பார்த் |