ரிலேநமன் (போர்க்கு) வந்தாலும் (அவளை நான்) பிளந்துவிடுவேன் ' என்று (அவர்கட்குத் துணிவு) கூறிநின்றவனாய்,-புகைத்த கனல் விழி கன்னன்- புகைகின்ற கோபாக்கினியை வெளிப்படுத்துகின்ற கண்களையுடைய கர்ணன், தருக்கால்எள்ளி-செருக்கினால் இகழ்ந்து, பூசுரன் என்று அவமதித்து- பிராமணனென்று(தன்னை) அலட்சியஞ்செய்து, புனை வில் வாங்கி- அழகியவில்லை வளைத்து,உகைத்த- (தன்மேற்) செலுத்தின, பகழிஉம் - அம்புகளையும், உகைத்தான் உரன்உம்- (அம்பு) செலுத்தினவனான அவனுடைய மார்பையும், தன் கை ஒரு கணையால் -தனதுகையினா லெய்யப்பட்ட ஓரம்பினால், உடன் பிளந்தான் - ஒருசேரப்பிளந்திட்டான்; (எ-று.)- 'மிகைத்து' என்றும் பாடம்; அளவுகடந்து என்றுபொருள். (536) 62.-வீமன் சல்லியனை வெல்ல, அவனும் கர்ணன் போலவே ஓடுதல். குன்றான்மெய்வகுத்தனையவீமன்றன்மேற்கொல்லியல்செய்சல்லி யனைக்குத்திவீழ்த்திக், கன்றான்முன்விளவெறிந்தகண்ணனென்னக்கான்முடியோடுற வளைத்து வான்மேல்வீசி, நின்றான்மற்றவனயலேதெறித்துவீழ்ந்துநெஞ்சொடிந்தா னிருவருமுன்னில்லாராகி, வென்றாலுத் தோற்றாலும் வசையே வெம்போர் வேதியரோ டுடற்றலெனமீண்டு போனார் |
(இ-ள்.) குன்றால் மெய் வகுத்து அனைய வீமன் - மலையினால் உடம்பைச் செய்தமைத்தாற்போன்ற (மிகவலிய பேருடலையுடைய) வீமசேனன், தன்மேல் கொல் இயல் செய் சல்லியனை குத்திவீழ்த்தி - தன்னைஎதிர்த்துப் பெரும்போரைசெய்த சல்லியனைக் (கையினாற்) குத்திக்கீழேதள்ளி, கன்றால்முன் விளவுஎறிந்த கண்ணன்என்ன - (முன்பு பசுவின்) கன்றைக்கொண்டு விளாமரத்தின்மே லெறிந்த கிருஷ்ணன் போல, கால் முடியோடு உற வளைத்து வான்மேல் வீசி நின்றான் - கால்தலையோடு பொருந்த அவனுடம்பை வளைத்து அதனை வானத்தில் வீசிநின்றான்;(அதனால்), அவன் - அச்சல்லியன், அயல் தெறித்து வீழ்ந்து - பக்கத்திலே தெறித்துவிழுந்து, நெஞ்சு ஒடிந்தான் - நெஞ்சமுறிந்தான்: (உடனே), இருவர்உம் -(அந்தக்கர்ணண்சல்லியன் என்ற) இரண்டுபேரும், முன் நில்லார் ஆகி - எதிரில்நிற்கமாட்டாதவர்களாய், வென்றால்உம் தோற்றால் உம் வெம்போர் வேதியரோடுஉடற்றல் வசைஏ என - 'சயிப்பதானாலும் தோற்பதானாலும் கொடியபோரைஅந்தணர்களோடுசெய்தல் இகழ்ச்சியேயாம்' என்றுசொல்லிக் கொண்டே,மீண்டுபோனார் - திரும்பிச்சென்றார்கள்; (எ-று.)- மற்ற - அசை. அந்தணவடிவத்தி லிருக்கும் வீமார்ச்சுனரிடம் தம்வலிமையைக் காட்டமாட்டாதுதோற்ற சல்லியகர்ணர்கள் வெம்போர் வேதியரோடுடற்றலால் வென்றாலும் தோற்றலும்வசையே என்று முன் நில்லாராகிச் சென்றனரென்க. 'குன்றால் மெய் வகுத்தனைய' என்றது - தன்மைத்தற்குறிப்பு. 'கொல்லியல்' என்றது - கொல்லுந்தன்மையுடையதென வினைத்தொகையன்மொழியாய்ப் போரைக் குறிக்கும். இங்குப்பாலபாரதத்தில், கர்ணனோடு அருச்சுனனும் சல்லியனோடு வீமனும்,பொருகையில், மற்றையரசர் அவர்கள் திறத்தைக்கொண்டாடியவண்ணம்வானவரைப்போலப் போரைக் |