பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்303

மற்றை அவனுடன்பிறந்தவர்களும், - ஆன வெம் போர்வென்று-நிழந்தத கொடிய
போரிற்பகைவென்றபின், நோற்றவையோடுஒக்கும் மின் இடை பொன்உம் தாம்உம் -
வீரலஷ்மியோடு ஒத்தமின்னல்போன்ற இடையையுடைய செல்வப் பெண்ணான
திரௌபதியும் தாங்களும், சென்று - போய், மண் கலம் செய் கம்மி செழுமனை
முன்றில் எய்தி - மட்பாத்திரங்களைச்செய்யுந்தொழிலையுடையகுயவனது
செழுமையான வீட்டின் முற்றத்தை யடைந்து, (அவ்வீட்டினுள்ளே யிருந்த தங்கள்
தாயைக் குறித்து), 'இன்று ஓர் ஐயம் பெற்றனம் - இன்றையத்தினத்தில்
நுகரப்படும்பொருளொன்றைப் பெற்றுவந்தோம்; இதனை என் செய்வது -
இதனைஎன்ன செய்வது?' என்றார்;(எ-று.)

     சிலகாலமாய் அந்தணவடிவங்கொண்டுள்ள இவர்களில் அருச்சுனனும்
வீமனும்நாள்தோறும் வெளிச்சென்று தமது சாதிக்கு உரிய இரத்தல் தொழிலால்
உணவைஈட்டிக்கொணர்ந்து மீண்டுவந்தடனே தம்தாயை நோக்கி
'இன்றுபிக்ஷைகொணர்ந்தோம்' என்றுசொல்லி அவளனுமதிபெற்று அதனைத்
தமையன் தம்பியருடன் உண்ணும் வழக்கத்தின்படி, திரௌபதியைக் கொணர்ந்த
தினத்தலும் கூறுகின்றார்களாதலால், 'இன்று பெற்றனமோரையம் ' என்றார்.
பகைவென்று கைக்கொள்ளப்பட்டமையின் திரௌபதிக்குக் கொற்றவை உவமை
கூறப்பட்டனள்,- 'கன்மிசெழுமனை' என்றும்பாடம்.                  (539)

65.- அதனை அனைவரும் உண்ணும் ' என்று கூறியபின், குந்தி
திரௌபதியைப் பார்த்தல்.

உள்ளிருந்தன்னைமைந்த ருரைத்தசொற்கேட்டுத்தேவர்
தெள்ளமுதென்னமக்காள் சேரநீரருந்துமென்னாப்
புள்ளினமொடுங்குமாலைப் பொழுதவள்புறம்பரெய்திக்
கள்ளவிழ்கூந்தலாளைக் கரும்பெனவிரும்பிக்கண்டாள்.

     (இ-ள்.) மைந்தன் உரைத்த சொல் - (தன்) பிள்ளைகளான பாண்டவர்கள்
சொன்ன வார்த்தையை, அன்னை - தாயாகியகுந்தி,  உள் இருந்து கேட்டு -
(தான்) உள்ளே யிருந்துகொண்டே கேட்டு, (அப்பிள்ளைகளை நோக்கி),
'மக்காள் - புத்திரர்களே! நீர் - நீங்கள், தெள்தேவர் அமுது என்ன -
தெளிவானதேவாமிருதத்தைப்போல  (மிகவும் இனிமையாக), சேர அருந்தும் -
ஒருங்குஉண்ணுங்கள்,'  என்னா -என்றுசொல்லி, (பின்பு), அவள்-அந்தக்குந்தி
தேவியானவள், புள் இனம் ஒடுங்கும் மாலைபொழுது - பறவைக்கூட்டங்கள்
(தம் தம் கூடுகளில்) ஒடுங்கும்படியான (அந்த) மாலைக்காலத்திலே, புறம்பர்
எய்தி - (உள்ளிருந்து) வெளியே வந்து, கள் அவிழ்கூந்தலாளை - 
(சூடியமலர்களின்று) தேள்சொரியுங் கூந்தலையுடைய திரௌபதியை, கரும்பு என -
கரும்பைப்போல, விரும்பிகண்டாள் - மகிழ்ந்துகாண்பவளானாள்; (எ-று.)
'பொழுதிவன்' என்றும்பாடம்.

66.-கழிவிரக்கமுற்ற குந்திக்குத் தருமன்தேறுதல்கூறல்.

என்னினைந் தென்சொன்னேன்மற்றென்செய்தேனென்றுசோரும்
அன்னை யைவணங்கிநின்சொ லாரணப்படியதாகும்
நின்னினை வன்றாலெங்க ணெஞ்சிலுநினைவுண்டென்றான்
தன்னிகரிலாதகேள்வி சான்றசீர்த்தருமனென்பான்.