நீக்குக நீக்குக - அடுக்கு, துணிவுப்பொருளது, ஸ்ருதி என்ற வடசொல் - எழுதாக்கிளவியாய்க் குருசிஷ்ய கிரமத்திலே கர்ணபரம்பரையாக வழங்குவ தென்று காரணப் பொருள்படும். (546) 72.-ஒருத்தியை ஐவர்மணத்தற்குக் காரணங் கேட்பாயென்று வியாசர் கூறலுறல். தொழுதுபொற் றவிசி னேற்றிச் சூழ்ந்தன னிருந்துகேட்ப முழுதுணர் கேள்வி ஞான முனிகுலத் தரசு போல்வான் பழுதறு கன்னி தன்னைப் பாண்டவ ரைவ ருக்கும் எழுதரு மறையின் வேள்வி யியற்றுதற் கியற்கை கேண்மோ. |
பதினாறுகவிகள் - ஒருதொடர். (இ-ள்.) (இங்ஙனம் எழுந்தருளிய வேதவியாசமுனிவனைத் துருபதராசன்), தொழுது - நமஸ்கரித்து, பொன் தவிசின் ஏற்றி- பொன்மயமான சிங்காசனத்தில் எழுந்தருளப்பண்ணி, சூழ்ந்தனன் இருந்து-(அவனைப்) பிரதக்ஷிணஞ்செய்து இருந்துகொண்டு, கேட்ப-கேட்க,-முழுது உணர் கேள்வி ஞானம் முனி குலத்து அரசுபோல்வான் - எல்லாவற்றையும் அறிந்த நூற்கேள்வியையும் தத்துவஞானத்தையுமுடைய முனிவர்கூட்டத்துக்கு ஓர் அரசன்போல் தலைமைபெற்றவனான அம்முனிவன்,-பழுது அறு கன்னிதன்னை - குற்றமற்ற கன்னிகையான இந்தத்திரௌபதியை, பாண்டவர் ஐவருக்குஉம் - பாண்டவர்கள் ஐந்துபேருக்கு, எழுது அரு மறையின் - எழுதுதற்கு அரிய (எழுதாக்கிளவியாகிய) வேதத்தின் விதிப்படி, வேள்வி இயற்றுதற்கு - மணஞ்செய்வித்தற்கு(க்காரணமான), இயற்கை - இயல்பை, கேண்மோ - கேட்பாயாக; (எ- று.)- 'சூழ்ந்தனரிருந்து' என்றும் பாடம். இச்செய்யுளில், கேட்ப, போல்வான் என்றவற்றிக்கு முடிக்குஞ்சொல், மேல் 87-ஆங்கவியில் வருகிற 'என்று' என்பது. (547) வேறு. 73.- இனி, 15-கவிகள்-திரௌபதியின் முற்பிறப்புவரலாறு கூறும். மூளா ரழலுற் பவித்தாளிவண் முற்ப வத்தில் நாளா யணியென் றுரைசால்பெரு நாம மிக்காள் வாளார் தடங்க ணவட்காரண வாணர்க் கென்றும் கேளான மௌற்கல் லியனென்பவன் கேள்வ னானான். |
(இ-ள்.) மூள்-மூண்டெரிகிற, ஆர்-நிறைந்த, அழல்-யாகாக்கினியில், உற்பவித்தாள் - தோன்றியவளான, இவள் - இத்திரௌபதி, முன் பவத்தில்- முற்பிறப்பில், நாளாயணி என்று உரை சால் பெரு நாமம்மிக்காள் - நாளாயணியென்றுபுகழ் நிறைந்தபெருமையையுடைய பெயரினாற் சிறந்தவள்; வாள் ஆர் தட கண் அவட்கு - வாட்படைபோன்றபெரிய கண்களையுடைய அவளுக்கு, ஆரணவாணர்க்கு என்றும் ஆன மௌற்கல்லியன் என்பவன் - அந்தணர்களுக்கு எப்பொழுதும் தலைவனான மௌத்கல்ய னென்னும் முனிவன், கேள்வன் ஆனான்- கணவனாயினான்; (எ - று.) |