தன்மங்கலந்தமானத்தோனையத் தையலோடுந் தென்மங்கலச்செஞ்சுடர்த்தீவலஞ் செய்வித்தாரே. |
(இ-ள்.) பல் மங்கலம்உம்-பலமங்களங்களும்,உடன் வைகிய-ஒரு சேரத் தங்கிய,பண்பினாளை - தன்மையையுடையளான திரௌபதிக்கு, துகிலோடு - புதியபட்டாடையுடனே, நல் மங்கலம் பூண் - திரு மங்கலியத்தை, நயந்துசாத்தி - விரும்பியணிவித்து, தன்மம் கலந்த மனத்தோனை -தருமம் பொருந்தியமனத்தையுடையனான தருமபுத்திரனை, அ தையலோடுஉம் - அந்தப்பெண்ணினுடனே, தென்மங்கலம்செம்சுடர் தீவலம்செய்வித்தார்- அழகியமங்களகரமான சிவந்த சுவாலையையுடைய ஓமாக்கினியைப்பிரதட்சிணஞ்செய்வித்தார்கள்; பாணிக்கிரகணத்தின்பின் மணமகன் தன்கையால்மணமகளது கையைப்பற்றிக்கொண்டு அக்கினியை வலம்வருதல், ஒருசடங்கு. துகில்- கூறையென்றுசிறப்பித்துச்சொல்லப்படும். சாத்தி-சாத்துவித்து, 'தென்மங்கலஞ் செஞ்சுடர்தீவலஞ்சூழுவித்தார்' என்றும், 'தொன்மங்கலச் செஞ்சுடர்த்தீவலஞ்சூழுவித்தார்' என்றும்பாடம். 95. | கங்குற்பவளவனமீது கடற்றரங்கம் பொஙகித்தரளத்திரள்சிந்திப் பொழியுமாபோல் அங்கிப்புறத்துத்திருக்காப்பணி யங்கையேந்திச் செங்கட்கரியகுழலாள்பொரி சிந்தினாளே. |
(இ-ள்.) கங்குல் - இராப்பொழுதில், கடல் தரங்கம் - கடலின் அலை, பொங்கி- பொங்கியெழுந்து, பவளம் வனம்மீது-பவளக்கொடிகளின்தொகுதியின்மேல், தரளம்திரள் - முத்துக்களின் கூட்டத்தை, சிந்தி பொழியும் ஆபோல்- வீசிச்சொரியும்விதம் போல,-செம்கண்கரிய குழலாள் - சிவந்தகண்களையும் கரியகூந்தலையுமுடையளான திரௌபதி, திரு காப்பு அணி அம்கைஏந்தி - மங்கலகரமான ரக்ஷாபந்தனத்தை யணிந்த அழகிய (தன்) கைகளில் எடுத்து, அங்கிப்புறத்து பொரிசிந்தினாள் - அக்கினியில் நெற்பொரியைச்சொரிந்தாள்; (எ- று.) லாஜஹோமம் (பொரிகொண்டு ஓமஞ்செய்தல்) என்றவிவாகச்சடங்கு, இதிற் கூறப்பட்டது. கருநிறமுடைய திரௌபதிசெந்நிறமுடைய தீயில் வெண்ணிறமுடையபொரியைக்கையாற்சொரிதற்குக் கருங்கடல் பவளக்காட்டில் முத்துத்திரளை அலையாற் சொரிதலை உவமைகூறினார். திருக்காப்பு - கங்கணம். காப்பு - காவல்; பாதுகாவலுக்காக அணியப்படுவதான விவாககங்கணத்துக்கு இங்கு ஆகுபெயர். 'கங்கிற் பவளவனம்' என்றும் பாடம். (570) 96.-இவ்வாறே பின்பு திரௌபதிக்கும் வீமன் முதலிய நால்வர்க்கும் தனித்தனிநிகழ்ந்த விவாகச் சடங்குகளை இதில் கூறுகிறார். இவ்வாறுமன்றலயர்வித்தபி னீன்றகாதல் வெவ்வாரழலின்முறைமூழ்கினண் மீண்டுதோன்ற மைவாரளகவடமீனிகர் கற்பினாளை அவ்வாறுமற்றையொருநால்வரு மன்றுவேட்டார். |
(இ - ள்.) இ ஆறு - இவ்வாகையாய், மன்றல் அயர்வித்த பின்- (தருமனுக்கும் திரௌபதிக்கும்) விவாகஞ்செய்வித்தபின்பு.- |