பக்கம் எண் :

326பாரதம்ஆதி பருவம்

108.-திருதராட்டிரன் பாண்டவர்களை அத்தினாபுரிக்கு
வரவழைத்தல்.

தாதினாற்பொலி தார்வரைமார்பரைத்
தூதினாற்றங்க டொல்பதிசேர்த்தினான்
காதினாற்பய னின்றெனக்கண்கள்போற்
கோதினாற்றெரி யாமனக்கோளினான்.

     (இ-ள்.) கண்கள் போல் - (தன்) கண்கள் (இயல்பில் எவற்றையும்
உணராமை)போலவே, கோதினால் தெரியா - குற்றமுடைமையால் (நன்மை
தீமைகளைப்)பகுத்தறியாத, மனம் கோளினான் - மனத்தின்தன்மையை
யுடையவனானதிருதராட்டிரன்,-தாதினால் பொலி தார் வரை மார்பரை -
பூந்தாதினாற்பொலிகின்றமாலையை யணிந்த மலைபோன்ற மார்பையுடைய
பாண்டவர்களை, காதினால் பயன்இன்று என - கொலைசெய்ய முயலுதலாற்
பயனில்லையென்று (எந்தஉபாயத்தினாலும்வெல்லத்தக்கவரல்லரென்று) நிச்சயித்து,
(தருமபுத்திரனை அவனுக்கு உரியஅர்த்தராச்சியத்திற் பட்டாபிஷேகஞ்செய்யத்
தீர்மானித்து), தூதினால் தங்கள் தொல்பதி சேர்த்தினான் - தூதனைக்கொண்டு
தங்களுடைய பழமையான அத்தினாபுரிக்குவருவித்தான்; (எ-று.)

விதுரனையனுப்பி வரவழைத்ததாகப் பாரதங்களி லுள்ளது.

109. - பாண்டவர் அரசுபெறுமாறு அத்தினாபுரியில்
நெடுநாள் வாழ்தல்.

வீடு மற்கும் விதுரற்கு மேற்கவந்
நாடு முற்று நரபதி நல்கவே
ஆடு பொற்கொடி யந்நகர் வைகினார்
நீடு விற்றிற லோர்நெடுங் காலமே.

     (இ-ள்.) நர பதி - திருதராட்டிமகாராசன், வீடுமற்குஉம் விதுரற்குஉம்
ஏற்க -வீடுமனுக்கும் விதுரனுக்கும் இயைய, அ நாடு முற்றுஉம்நல்க -
(பாண்டவர்க்குஉரிய)அந்நாட்டின்பகுதிமுழுவதையும் (அவர்கட்குக்)
கொடுக்குமாறு,-நீடு வில் திறலோர் -நீண்ட வில்லின் வலிமையையுடைய
அவர்கள், ஆடு பொன் கொடி அ நகர்நெடுங்காலம் வைகினார்-அசைகிற
அழகிய கொடிகளையுடைய அந்தஅத்தினாபுரியில் நெடுங்காலம் இருந்தார்கள்;
(எ - று.)

     வீடுமற்கும் விதுரற்கும் ஏற்க - அவ்விருவர்மனத்திற்கும் திருப்தியாக
என்றபடி;இதனால், திருதராட்டிரன் அவர்களுடைய மனக்கருத்திற்கு ஏற்பப்
பாண்டவர்க்குஅரசு தரப்போகிறானே யன்றித் தன்மனமொப்பித் தருபவனல்ல
னென்பதுதொனிக்கும். இனி, இப்பாடலுக்கு - திருதராட்டிரன் தருமபுத்திரனுக்கு
மீண்டும்இளவரசுகொடுத்தானென்று முதலிரண்டு அடிகள் கூறும் என
உரைவகுப்பாருமுளர்.ஏகாரம் இரண்டும்-ஈற்றசை.

திரௌபதி மாலையிட்ட சருக்கம் முற்றிற்று.
------------

ஆறாவது
இந்திரப்பிரத்தச் சருக்கம்.

    பாண்டவர்கள் இந்திரப்பிரத்த மென்னும் நகரத்தை யமைத்துக்கொண்டு
அதனில் வசித்த செய்தியைக் கூறும் சருக்கமென்று