யோர்? எனப்பட்டனர்; திருவிளையாடற்புராணத்து,வன்னியுங் கிணறு மிலிங்கமுமழைத்தபடலத்தில் "பொன்னாட்டின் மடவாரைப்புணர்வதற்கோ நம்மளகாபுரத்துவேந்த, னன்னாட்டின்மடவாரை மணப்பதற்கோ" என்றதுகொண்டும் இதனையுணர்க; பந்தனந்தாதியில், பந்தனென்ற வைசியன் "பொன்னளகைப்பந்தன்," "அளகை்கோன்," "அளகைச்சேய்" என்று கூறப்படுதலுங்காண்க; ஆதியில் அளகாபுரியினின்றுவைசியர்கள் பிறஇடங்கட்கு வந்தனரென ஒருகதைகூறுதலும்உண்டு. பதிதொறும்உழவர் விளைபயன் எடுத்தல்- "கதிர்படுவயலினுள்ள கடிகமழ்பொழிலி னுள்ள, முதிர் பலமரத்தினுள்ள, முதிரைகள் புறவினுள்ள, பதிபடுகொடியினுள்ள படிவளர்குழியினுள்ள மது வனமலரிற் கொள்ளும்வண்டெனமள்ளர்கொள்வார்" எனக் கம்பர்கூறியவாறுகாண்க. அங்ஙனம்பயன்கொள்ளுபொழுது களிப்புமிகுதல்காரணமாகப்பறைகறங்குதல் இயல்பு, நெருக்கு-நெருங்குஎன்றமுதனிலை திரிந்த தொழிற்பெயர். (600) 17. | தோரணமஞ்சத்தலந்தொறுநடிக்குந் தோகையர்நாடகமொருசார், பூரணபைம்பொற்கும்பமுமொளிகூர் புரிமணித்தீபமுமொருசார், வாரணமிவுளிதேர்முதனிரைத்த வாகமுஞ்சேனையுமொருசார், நாரணன்வனசபதயுகம்பிரியா நலம்பெறுமாதவரொருசார். |
(இ - ள்.) தோரணம் - தோரணங்களையுடைய, மஞ்சம் தலம் தொறுஉம்- மாளிகைகளின் உபரிகையிடங்களிலெல்லாம், நடிக்கும்- நாட்டியஞ்செய்கிற, தோகையர்-அழகியமகளிர்களுடைய, நாடகம் -நர்த்தனங்கள், ஒரு சார்- ஒருபக்கத்திலுள்ளன: பைம்பொன்பூரணகும்பம்உம்-பசும்பொன்னாலாகிய நிறைகுடங்களும், ஒளி கூர் புரி மணி தீபம்உம்-ஒளிமிக்க அழகியஇரத்தின தீபங்களும், ஒருசார்-ஒருபக்கத்திலுள்ளன: வாரணம் இவுளி தேர் முதல்-யானை குதிரை தேர்முதலாக, நிரைத்த-அணியணியாகத்தொகுக்கப்பட்ட, வாகம்உம் - வாகனங்களும், சேனைஉம் - காலாட்சேனையும், ஒருசார்-ஒரு பக்கத்திலுள்ளன: நாரணன்-திருமாலினுடைய, வனசம் பத யுகம்- தாமரைமலர்போன்ற திருவடியிணையை, பிரியா - இடைவிடாது தியானிக்கிற, நலம் பெறு-நன்மையைப் பெற்ற, மா தவர்-சிறந்த தவத்தையுடைய முனிவர்கள், ஒருசார்- ஒருபக்கத்திலுள்ளார்கள்; தோரணம்-கட்டுவாயில்: மங்களார்த்தமாக மாவிலைமுதலியவற்றாற் கட்டப்படுவனவுமாம். மஞ்சம் - மேனிலை. 'நாடகம்-கதை தழுவிவருங் கூத்து' என்பது சிலப்பதிகாரவுரை. பூர்ணகும்பமும், தீபமும் -அஷ்டமங்கலங்களிற் சேர்ந்தவை. நால்வகைப்படையுள்முந்தினமூன்றும்முதலிற்கூறப்பட்டதனால். பின்புசேனையென்றது- பதாதியைக்குறிக்கும்.நாராயண னென்றதிருநாமம்- நாரஅயநஎனப்பிரிந்து, சிருஷ்டிப்பொருள்களுக்கெல்லாம் இருப்பிடமான வனென்றும், சிருஷ்டிப்பொருள்களைத் தனக்குஇருப்பிடமாகவுடையவனென்றும், பிரளயப்பெருங்கடலைத் தனக்குஇடமாகக்கொண்டவனென்றும். மற்றும்பலவாறும்பொருள்படும். வநஜம்-நீரிற்பிறப்பதெனக்காரணப்பொருள் படுவது: தாமரைக்கும் காரணவிடுகுறி. (601) |