பக்கம் எண் :

இந்திரப்பிரத்தச் சருக்கம்341

பெயர் உரியதாதலை, "மீனேறுயர்த்த கொடிவேந்தன்" என்ற சிந்தாமணியாலும்
அறிக. 'வானமீன்கொடிபோல் என்ற உவமையால், சிலவாளைமீன்களின் பின்னே
சிலவாளைமீன்களாக வரிசையாகச்சென்றமைபெறப்படும். மாலையிற்பயிலும் எனவும்
பாடம்.                                                     (604)

21.-புரிசையிற்குடுமிதொறுநிரைதொடுத்த பொற்கொடியாடை
                                     யினிழலைக்,
கிரிமிசைப்பறக்குமன்னமென்றெண்ணிக்கிடங்கில்வாழோ
                                   திமக்கிளைகள்,
விரிசிறைப்பறலின் கடுமையாலெய்திமீதெழுமஞ்செனக்
                                       கலங்கிப்,
பரிசயப்படுதண்சததளப்பொகுட்டுப் பார்ப்புறைபள்ளி
                                      விட்டகலா.

     (இ-ள்.) புரிசையின்-(அந்நகரத்து) மதில்களின், குடுமிதொறுஉம் -
சிகரங்களிலெல்லாம், நிரை தொடுத்த - வரிசையாகக் கட்டப்பட்ட, பொன் கொடி
ஆடையின்நிழலை - அழகியகொடிச்சீலைகளின் தோற்றத்தை, கிரிமிசை பறக்கும்
அன்னம் என்று எண்ணி-மலைகளின்மேற் பறக்கிற அன்னப்பறவைகளென்று கருதி,
கிடங்கில் வாழ் ஓதிமம் கிளைகள்-அகழியில்வாழ்கின்ற அன்னப்பறவைகளின்
கூட்டங்கள், விரி சிறை பறலின் கடுமையால் எய்தி-விரிந்த சிறகுகளைக்கொண்டு
பறத்தலின் விசையால் எழுந்துமேற்சென்று (அங்கு அக்கொடித்தோற்றத்தைக்
கண்டவுடனே), மீது எழும் மஞ்சு என கலங்கி - மலைமீதுஎழுகிற
வெண்ணிறமேகமென்றுஎண்ணிக் கலக்கமுற்று, பரிசயம் படு தண் சததளம்
பொகுட்டுபார்ப்பு உறை பள்ளி விட்டு அகலா - (தாம்) பழகுதல் பொருந்திய
குளிர்ந்ததாமரைமலர்களின் பொகுட்டாகிய தம்குஞ்சுகளிருக்கின்ற சயனத்தைவிட்டு
நீங்காவாயின; (எ-று.)

     அந்நகரத்துமதிற்புறத்திலுள்ள அகழியில் வசிக்கின்ற அன்னப்பறவைகள்
அம்மதிலின்சிகரங்களில் அசைந்து விளங்குங்கொடிச்சீலைகளைத் தங்களினமான
அன்னப்பறவைகளென்று மாறுபடக்கருதி அவற்றோடு கூடிக்குலாவலா
மென்றகருத்தினால் சிறகுகளை அடித்துக்கொண்டு விசையோடு மேலெழுந்தன;
அங்ஙனம் சென்று நோக்குகையில் அக்கொடிவரிசையை மேகமென்று மீண்டும்
வேறுவகையாக மாறுபடக்கருதி அச்சங்கொண்டு மீண்டு தாமரைப்பொகுட்டில்
தங்குகிற தம்குஞ்சுகளை விட்டு நீங்காது காப்பனவாயின வென்பதாம்.
வெண்ணிறமேகத்தைக் கண்டு அஞ்சி யொடுங்குதல், அன்னத்திற்கு இயல்பு.
மயக்கவணி. கொடியாடையின் நிழல் - நீரிற் காணப்படும் கொடிச்சீலையின்
பிரதிபிம்பமுமாம்; மதில்மீதுள்ளகொடிச்சீலையின்சாயையை நீரிற்கண்டு
அவற்றைமலைமீதுபறக்கும் அன்னங்களின் நிழலென்று கருதின வென்க.
பறல்-பறத்தலென்பதன் விகாரம். சிறைப்பாலின் எனவும் பாடம்.         (605)

22.கயற்றடஞ்செங்கட்கன்னியர்க்கிந்து காந்தவார்
                             சிலையினாலுயரச்,
செயற்படுபொருப்பின்சாரலிற்கங்குற் றெண்ணிலாவெறித்
                                    தலினுருகி,
வியப்பொடுகுதிக்குந்தாரைகொளருவி விழைவுடன்படிவன
                                     சகோரம்,
நயப்புடையன்னச்சேவல்பேடென்று நண்ணலாலுளமிக
                                      நாணும்.