பக்கம் எண் :

344பாரதம்ஆதி பருவம்

களில் இந்திரனது சம்பந்தத்தின் ஒற்றுமையும், மற்றை நகர மனைத்தினுஞ்
சிறந்திருத்தலும் இவ்விரண்டிற்கும் உள்ளதனால், 'இனத்தினாலுயர்ந்த இந்திரபுரியும்
இந்திரப்பிரத்தமுமிரண்டும்' என்றார், வசிப்பவரது உணர்வும் கேள்வியும்
நகரின்மேல்வைத்துக்கூறப்பட்டன, நிறுக்க என்றவினையைநோக்கி, மனமாகிய
துலாக்கோலினால்என்று உருவகமாகப்பெருள் காண்க. இச்செய்யுள், உருவகத்தை
அங்கமாகக்கொண்டதற்குறிப்பேற்றவணி.

25.நிறக்கவல்லிரும்பைச்செம்பொனாம்வண்ண நிகழ்த்திய
                             விரதமேநிகர்ப்பப்,
பிறக்கமும்வனமுமொழித்தவணமைத்த பெரும்பதிக்கு
                             வமையும்பெறாமல்,
மறக்கடுங்களிற்றுக்குபேரன்வாழளகை வடக்கிருத்தது
                                  நெடுவானில்,
துறக்கமுமொளித்ததிலங்கையும்வெருவித்தொடுகடற்சுழிப்
                                  புகுந்ததுவே.

     (இ-ள்.) வல் இரும்பை - வலிய இரும்பை, நிறக்க செம் பொன் ஆம்
வண்ணம்-மாற்றுயர்ந்து சிவந்ததாய் விளங்கச்சிறந்த பொன்னாகும்படி, நிகழ்த்திய-
செய்த, இரதம்ஏ நிகர்ப்ப-இரசகுளிகையே போல, வனம்உம் பிறக்கஉம் ஒழித்து
அவண் அமைத்த- (விசுவகருமன்) காண்டவவனத்தையும் அதைச்சார்ந்த
மலையையும் அழித்து அவ்விடத்தில் தகுதியாக நிருமித்த, பெரும்பதிக்கு - பெரிய
அந்தநகரத்துக்கு, உவமைஉம் பெறாமல்-(தான்) ஒரு புடையொப்பும் ஆகமாட்டாமல்,
மறம் கடு களிறு குபேரன் வாழ் அளகை-வலிமையையுடைய உக்கிரமான
மதயானையையுடைய குபேரன் வாழ்கிற அளகாபுரி, வடக்கு இருந்தது-; துறக்கம்உம்
- சுவர்க்கலோகமும், நெடுவானில் ஒளித்தது - நெடுந்தூரத்ததான ஆகாயத்தில்
மறைந்துவிட்டது; இலங்கைஉம் - இலங்காபுரியும், வெருவி - அஞ்சி, தொடு கடல்
சுழி புகுந்தது-தோண்டப்பட்ட கடலினிடை யிடத்தை யடைந்தது; (எ-று.)

     இயல்பில் வடதிசையில் நெடுந்தூரத்திலுள்ளதான அளகாபுரியையும்,
வானத்தில்நெடுந்தூரத்துக்கு அப்பாலுள்ள தாய் மனிதர் கண்ணுக்குப்புலனாகாத
அமராவதிநகரையும், தென்கடலில் நூறுயோசனைக்கு அப்பாலுள்ளதான
லங்காபுரியையும், இந்நகரத்திற்குத் தாம் ஒப்பாகமாட்டாமல் தோற்றுவெள்கி அஞ்சி
வடக்கிருத்தலும் வானத்திற்சேர்ந்துவிடுதலும் தென்கடலினி டைவிழுந்திடுதலும்
செய்தனவாக வருணித்தார்; ஏதுத்தற்குறிப்பேற்றவணி. வடக்கிருத்தல்
என்றதொடர்-வடதிசையிலேதங்குதலென்றபொருளோடு, உயிரைத்துறப்ப
தென்றதுணிவுடன் வடதிசைநோக்கித் தருப்பைப்புல்லிற் கிடத்தலாகிய
பிராயோபவேசமென்ற பேர் பூண்டஒருவிரதத்தையுங் காட்டவல்லதாதலறிக.
இரும்பைப் பொன்னாக்குதல் -இரசவாதமென்னும்வித்தை; ஸ்பர்ஸவேதி யென்னும்
மகா மூலிகையின் இரசத்தைஇரும்பின் மேற்பிழிந்தால் அதுபொன்னாகுமென்பர்.
இரசம்=ரஸம்: சாறு.இரும்பைப்பொன்னாக்கு மிரசம் போல, வனத்தை நகராக்கின
விசுவகருமனென்க.பிறக்கம்-நெடுந்தூரத்திலுள்ளாருங் காணும்படி விளங்குவது:
மலை, 'வடக்கிரிந்தது' எனவும் பாடம்.                             (609)