பக்கம் எண் :

இந்திரப்பிரத்தச் சருக்கம்345

26.வாவியும்புறவுஞ்சோலையுமலர்ந்த மலர்களுமணிகளின்
                                       குழாமும்,
மேவியெங்கெங்குமயங்கலிற்றத்தம் வேரியும்வாமுந்தூதாப்,
பூவினஞ்சுரும்பையழைக்கும்வண்பழனப்புதுவளஞ்சுரக்கு
                                   நாடனைத்தும்,
ஓவியங்குறித்துப்பூமகள்வடிவை யொப்பனைசெய்தவா
                                       றொக்கும்.

     (இ-ள்.)  பூ இனம் - பலவகை மலர்களாகிய மகளிர், தம்தம் வேரிஉம்
வாசம்உம்தூது ஆ - தம்தமது தேனையும் நறுமணத்தையும் தூதாகக்கொண்டு,
(அவற்றால்),சுரும்பை அழைக்கும் - வண்டுகளாகிய தம்கணவரை அழைக்கப்பெற்ற,
வண்பழனம்- வளப்பமுள்ள மருதநிலத்தின், புது வளம் - புதுமையான
வளப்பங்கள், சுரக்கும் -மேன்மேல் மிகப்பெற்ற, நாடு அனைத்துஉம்
அந்நாடுமுழுவதிலும்,-வாவிஉம் -குளங்களும், புறவுஉம் - கொல்லைகளும்,
சோலைஉம் - சோலைகளும், மலர்ந்தமலர்கள்உம்- மலர்ந்த பூக்களையும்,
மணிகளின் குழாம்உம் - இரத்தினங்களின்கூட்டத்தையும், மேவி - பொருந்தி,
எங்கு எங்குஉம் மயங்கலின் -எல்லாவிடங்களிலுஞ் செறிந்திருத்தலால், (அச்செறிவு),
பூமகள்வடிவை ஓவியம்குறித்து ஒப்பனை செய்த ஆறு ஒக்கும்-பூமிதேவியின்
வடிவைச் சித்திரமெழுதிஅலங்கரித்த தன்மையைப் போலும்;

     அந்நாடுமுழுவதிலும், குளங்களும் கொல்லைகளும் சோலைகளும்,
பலவகைமலர்களையும் பலவகையிரத்தினங்களையும் உடையனவாயிருத்தல்,
பூமிதேவியின்வடிவத்தைச் சித்திரமெழுதி அலங்கரித்தாற்போலுமென்பதாம்:
தற்குறிப்பேற்றவணி. மணிகள், மலையருவியாற் கொணர்ந்து கொழிக்கப்பட்டவை.
தூதா அழைக்கும் என்ற சொற்களின்குறிப்பால், பூவினத்தினிடத்து மகளிரினத்தின்
தன்மையும், சுரும்பினிடத்து நாயகரின் தன்மையும் ஏற்பட்டன; இது, குறிப்புருவகம்.
தூதுபோலத் தேனும் மணமும் நெடுந்தூரமளவுஞ் செல்கின்ற வியல்பை யறிக. (610)

27.- பாண்டவர் நகரப்பிரவேசஞ் செய்தல்.

பரிமள மதுப முரல்பசுந் தொடையற் பாண்டவ ரைவருங் கடவுள்
எரிவலம் புரிந்து முறைமுறை வேட்ட வின்னெழி லிளமயிலன்றி
வரிசையி னணுகி யுரிமையா லவனி மயிலையு மன்றலெய்தினர்போற்
புரிவளை தரளஞ் சொரிபுன லகழிப் புரிசைசூழ் புரங்குடி புகுந்தார்.

     (இ-ள்.) பரிமளம்-வாசனையையுடையனவும், மதுபம் முரல் - வண்டுகள்
ஒலிக்கப்பெறுவனவும் ஆகிய, பசுந் தொடையல்-பசியபூமாலைகளையணிந்த,
பாண்டவர் ஐவர்உம் - பாண்டவர்கள் ஐந்து பேரும், கடவுள் எரி வலம் புரிந்து
முறை முறை வேட்ட இன்எழில் இள மயில் அன்றி - தெய்வத்தன்மையையுடைய
அக்கினியைப் பிரதட்சிணஞ்செய்து (அக்கினிசாட்சியாக) முறையே தாங்கள்
மணஞ்செய்துகொண்ட இனிய அழகையுடைய இளமையானமயில்போலுஞ் சாயலுள்ள
திரௌபதியையே யல்லாமல், உரிமையால் அவனி மயிலைஉம் வரிசையின் அணுகி
மன்றல் எய்தினர்போல் - உரிமையினால் பூமிதேவியையும் முறையே அடைந்து
மணஞ்செய்துகொண்டவர்போல்,-புரி வளை தரளம் சொரி புனல் அகழி புரிசை
சூழ்புரம் குடி புகுந்தார் - உட்சுழிதலை