புடைகள் தோறுஉம் பூட்டிய - பக்கங்களிலெல்லாம் அமைத்து வைக்கப்பெற்ற, சிகிரி- மேலுறுப்பு, சால்-பொருந்திய, அ புரிசையின்-அந்த மதிலின், புதுமை- அதிசயத்தை,நோக்கி-பார்த்து,- '(இது), கோட்டிய நகரி என்னும் குலம் கொடி - அலங்கரிக்கப்பட்டஅந்நகமாகிய ஓர் உயர்குலமங்கை, மன்றல் எய்த- விவாகமடைய, சூட்டிய-(கோலஞ்செய்வார் அம்மகளின்நெற்றியிற்) சூட்டிய, சூட்டுபோல-சூட்டென்னும்நெற்றிமாலை போல, துலங்கும்-விளங்குகிற, ஆ(று) - தன்மையை, காண்மின்-பாருங்கள்,' என்பார்-என்று (தம்மிற்) சொல்லிக் கொள்வார்கள்; (எ-று.) அந்நகரத்துமதிலின் மேலுள்ளசிகரியென்னும்உறுப்பு, பொன்மயமாய் இரத்தினங்கள் பதிக்கப்பெற்றுவிளங்குவதை, அந்நகரமாகியபெண் அரசனாகிய தலைமகனை மணஞ்செய்துகொள்ளுஞ் சமயமாதலால், அதற்கு ஏற்ப, அம்மகளின் நெற்றியின் மேற்பகுதியிற் கோலஞ்செய்வார் சூட்டிய நூதலணிமாலை போலுமென்றார்;தற்குறிப்பேற்றவணி. யிகரீ-வடசொல். (620) 37. | பணையினம்பலவுமார்ப்பப் பைங்கொடிநிரைத்தசெல்வத் துணைமணிமாடமன்னுந் தோரணவீதியாவும் புணைவனநெருங்கநீடிப் பொழிபுயல்கிழிக்குஞ்சாரல் இணைவரைநடுவட்போதும் யாறுபோலிலங்குமென்பார். |
(இ-ள்,) 'பணை இனம் பலஉம் ஆர்ப்ப-வாத்தியவகைகள் பலவும் ஒலிக்க, பைங் கொடி நிரைத்த - செழுமையான துவசங்கள் அணியணியாக நாட்டப்பெற்ற, செல்வம் - செல்வவளத்தையுடைய, துணை-(வேறுஒப்புமையில்லாமையால்) தமக்குத்தாமே நிகரான, மணி மாடம் - இரத்தினங்கள் பதித்த [அழகிய] மாளிகைகள்,மன்னும் - (இருபாலும்) அமையப்பெற்ற, தோரணம் வீதி யாஉம் தோரணங்களையுடைய வீதிகளெல்லாம்- புணை வனம்நெருங்கநீடி-மூங்கிற்காடுகள் அடர்த்தியாகவளர்ந்து, பொழி புயல்கிழிக்கும்-மழை பொழிகிற மேகங்களைக் கிழிக்கின்ற, சாரல் - சாரலையுடைய, இணைவரை - இரண்டுமலைகளின், நடுவண் - நடுவிலே, போதும்-பாய்ந்து வருகிற, யாறுபோல் - நதிபோல, இலங்கும்-விளங்கும். என்பார்-; இருமருங்குமுள்ள ஓங்கியமாளிகைகளுக்கு -இரண்டுமலைகளையும், அம்மாளிகைவரிசையின் நடுவிலுள்ள வீதிக்கு -அம்மலைகளின் இடையே வருகிற நதியையும் ஒப்புமை குறித்தார்; தற்குறிப்பேற்றவணி. மாடங்களின் மீதுள்ள கொடிவரிசைகளுக்கு ஏற்ப மலைக்குமூங்கிற்காடு கூறினார். 'பணையினம் பலவுமார்ப்ப' என்றது - செல்வ வளத்தைவிளக்கும். மூன்றாம் அடி - அதிசயோக்தி. (621) 38.- தருமன் விசுவகருமனுக்கு விடையளித்தல். கண்ணுறுபொருள்கள்யாவுங் கண்டுகண்டுவகைகூர எண்ணுறுகிளைஞரோடும் யாதவகுமரரோடும் பண்ணுறுவேதவாழ்நர் பலரொடும் வைகியாங்கண் விண்ணுறுதபதிக்கம்ம விடைகொடுத்தருளினானே. |
|