பக்கம் எண் :

354பாரதம்ஆதி பருவம்

இருசெவிபடைவீடாக வெம்பிரானளிக்கப்பெற்ற
பெருமுனியவர்க்கோர்காதை பெட்புறப்பேசுவானே.

     (இ-ள்.) (இங்ஙனம் வணங்கிவழிபட்ட பாண்டவர்களுடனே), வரம்
மிகுகற்பினாள்உம் - மேன்மைமிக்கபதிவிரதா தருமத்தையுடையவளான
திரௌபதியும்,மாமிஉம் - (இவளுக்கு) மாமியாரான குந்திதேவியும்,
வணங்கிநிற்ப -(அம்முனிவனை) நமஸ்கரித்துநிற்க,- சரிகமபதநி பாடல் தண்டு
தைவரு செம்கையோன் - சரிகமபதநி என்னும் ஏழுசுரங்களையும்
அமைத்துப்பாடுதற்கு உரியவீணாதண்டத்தைத் தடவி இயக்குகின்ற சிவந்த
கைகளை யுடையவனும். எம்பிரான்இரு செவி படை வீடு ஆக அளிக்கப்பெற்ற
பெருமுனி - நமக்கெல்லாந்தலைவனான திருமால் (தமது) இரண்டு
திருச்செவிகளையும் (தனது) இசைப்பாட்டிற்குத் தங்குமிடமாகக்கொடுக்கப்பெற்ற
பெருமையுடைய முனிவனுமானநாரதன், அவர்க்கு ஓர் காதை பெட்புஉற
பேசுவான் - அவர்கட்கு ஒருகதையைவிருப்பமிகக் கூறுபவனானான்; (எ-று.)-
அதனை, மேலிரண்டுகவிகளிற் காண்க. 'ஓர்வார்த்தை' என்றும் பாடம்.

     ஸரிகமபதநி என்பன-ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம்,
தைவதம், நிஷாதம் என்ற ஏழுசுரங்களுக்கும் முறையே உரிய அக்ஷரங்களாம்.
தண்டு- தண்டமென்ற வடசொல்லின் விகாரம். படைவீடு - சேனை தங்குமிடம்;
இங்கு,தங்குமிடமென்ற மாத்திரமாய் நின்றது. 'எம்பிரான்' - சிவபிரானெனினுமாம்.
                                                              (626)

43.-இதுவும் அடுத்த கவியும் - சுந்தோபசுந்தர் வரலாறு.   

முராரியைமுராரிநாபி முளரிவாழ்முனியைமுக்கட்
புராரியைநோக்கிமுன்னாட் புரிபெருந்தவத்தின்மிக்கார்
சுராரிகடம்பிற்சுந்தோ பசுந்தரென்றிருவர்தங்கள்
திராரியேவலினால்வந்த திலோத்தமைதன்னைக்கண்டார்.

     (இ-ள்.) முராரியை - திருமாலையும், முராரி நாபி முளரி வாழ்முனியை -
அத்திருமாலின் திருநாபித்தாமரைமலரில் வாழ்கிற பிரமனையும், முக்கண்
புராரியை -மூன்றுகண்களையுடையவனான சிவபிரானையும், நோக்கி - குறித்து,
முன் நாள் -முற்காலத்தில் [இளமையில்], புரி-செய்த, பெரு தவத்தில் - பெரிய
தவத்தில், மிக்கார்-சிறந்தவர்களான, சுராரிகள் தம்மில் சுந்தஉபசுந்தர் என்ற
இருவர் - அசுரர்களுள்சுந்தனும் உபசுந்தனு மென்றஇரண்டுபேர்,- தங்கள் திர
அரி ஏவலினால்வந்ததிலோத்தமைதன்னை கண்டார் - தங்களுக்குவழிப்பகையாகிய
இந்திரனதுகட்டளையினால் (தங்களெதிரில்) வந்த திலோத்தமை யென்பாளை
(ஒருசமயத்தில்)பார்த்தார்கள்; (எ-று.)

     முராரி, புராரி,  ஸு ராரி, ஸ்திராரி - தீர்க்கசந்திபெற்ற வட சொற்கள்.
சுந்தோபசுந்தர் - குணசந்திபெற்ற வடமொழித் தொடர்; பன்மைவிகுதிபெற்ற
உயர்திணையும்மைத்தொகை. என்றிருவர் - விகாரம். திலோத்தமை=திலோத்தமா;
உலகத்தில்