யைத்தருவது, என்று-,வண்ணம் வில் திறலினார்க்கு வாய்மலர்ந்து அருளி-அழகிய வில்லின் வலிமையையுடைய அப்பாண்டவரகட்குச் சொல்லியருளி, மீண்டு-பின்பு, பண் உடை கீதம் நாத பண்டி தன் - சுரங்களையுடைய பாட்டினிசையில் வல்லவனான நாரத முனிவன், விசும்பின் போனான்-ஆகாய மார்க்கமாகச் சென்றான்; (எ-று.) ருது - வடசொல்; இரண்டு மாதங் கொண்ட பொழுது. அது-ஆறாகும்; அவற்றிற்கு முறையே, சித்திரை முதல் இவ்விரண்டு மாதங்கொள்க. அவை முறையே இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி எனப்படும். (630) 47.-அங்ஙனம் முறைப்படி ஐவரும் மனைவியும் வாழ்தல். சொன்னநாட் டொடங்கி யைந்து சூரருந் தேவர் நாளுக்கு இன்னநா ளவதி யென்றே யெண்ணியங் கிரதி கேள்வன் அன்னநாண் மலர்ப்பைந் தாமத் தறன்மக னாதி யாக மின்னான டன்னை வேட்ட முறையினான் மேவி னாரே. |
(இ-ள்)சொன்ன நாள் தொடங்கி - (இந்த நாரத மாமுனிவன்) சொன்ன தினம் முதலாக, ஐந்து சூரர்உம்-(அந்த) ஐந்துவீரர்களும், தேவர்களுக்குஒருநாளாகிய மானுடவருஷம்ஒன்றுக்கு இன்னநாள் எல்லை யென்று அறிந்து, அங்கு - அவ்விடத்தில் (இந்திரப்பிரத்தத்தில்), இரதிகேள்வன் அன்ன நாள் மலர் பைந் தாமத்து அறன் மகன் ஆதி ஆக - ரதீ தேவிக்குக் கணவனான மன்மதன் போன்ற (மிக்கஅழகையும்) அன்றுமலர்ந்த (புதிய) மலர்களாலாகிய பசிய மாலையையு முடைய தருமபுத்திரன் முதலாக, மின் அனாள்தன்னை வேட்ட முறையினால் மேவினார் -மின்னல்போன்ற திரௌபதியை (த் தாம்) விவாகஞ்செய்த முறைப்படியே கூடிவாழ்ந்தார்கள். இந்திரப்பிரத்தச்சருக்கம் முற்றிற்று. ------ ஏழாவது அருச்சுனன் றீர்த்தயாத்திரைச் சருக்கம். அருச்சுனன்தீர்த்தயாத்திரைவரலாற்றைக் கூறுஞ்சருக்கமென்று பொருள். தீர்த்த யாத்திரை - புண்ய தீர்த்தங்களில் நீராடுதலை உத்தேசித்துப் பிரயாணஞ் செய்தல். இச்சருக்கத்திலும்* கடவுள்வாழ்த்து காணப்படவில்லை.
* "அருமாமறையுணரா தலமருசேவடியருளால் இருமாநிலமிசைதோய்வுறவியலானிரைவழிபோய்த் திருமாநிகரிடைமாதர்கடிகழ்வேல்விழிமகிழ வருமாதவன் விளையாடலைமறவா தெனதுளமே" என்ற ஒருசெய்யுள் இச்சருக்கத்துக்கடவுள்வாழ்த்தாகச் சில பிரதிகளிற் காணப்படுகிறது. |