பக்கம் எண் :

384பாரதம்ஆதி பருவம்

     (இ-ள்.) அங்கு- அவ்விடத்தில், உயிர்போல்-, இரு மருங்கு உம் -
இரண்டுபக்கத்திலும், ஆயம் மட மகளிர்- தோழியராகிய இளம் பெண்கள்,
இருந்து-,ஆற்றஆற்ற- (தங்கள்செய்யும்சைத்திய உபசாரங்களினால் தாபத்தைத்)
தணிக்கத்தணிக்க, (சித்திராங்கதை), கங்குல் எனும் பெருங் கடலை கரை
கண்டாள் - இராத்திரிகாலமாகிய பெரியகடலைக் கரைகண்டவளாய் [இரவை
அரிதிற் கழித்து], கடல்புறத்தே கதிர்உம் கண்டாள் - கீழ் கடலின். மீதே
சூரியனையும் (உதிக்கக்) கண்டாள்:இங்கு-இவ்வாறு, இவள் - இச்சித்திராங்கதை,
போய்-, மலர் காவின் -பூஞ்சோலையிலே, எழில் விசயற்கு - அழகிய
அருச்சுனனுக்கு, ஈடு அழிந்த -மனவலிமை யழிந்த, இன்னல் எல்லாம் - துன்பம்
முழுவதையும், சங்கு எறியும் தடபொருநை துறைவனுக்கு - சங்குகளை வீசுகிற
பெரிய பொருநையாற்றின்துறையையுடையவனான அப்பாண்டியராசனுக்கு,
செவிலியர் ஆம் தாயர்-(அச்சித்திராங்கதையினது) செவிலித்தாய்மார், சொன்னார்-
சொன்னார்கள்; (எ-று.)

     விரகிகளுக்கு இராப்பொழுது நீட்டித்ததாய்த்தோன்றிக் கழித்தற்கு
அரிதாதல்பற்றி, 'கங்குலெனும் பெருங்கடல்' எனப்பட்டது. பெருநை -
தாமிரபரணி.கண்டாள் என்ற சொல் இரண்டில்முந்தினது முற்றெச்சம்.
செவிலியர்-வளர்த்த தாயர். ஆயம் - தோழியர் கூட்டம்.               (664)

34.-அருச்சுனனது வரவையறிந்து பாண்டியன் மகிழ்தல்.

ஐந்தருவினீழலின்வாழரியுடனே யோரரியாசனத்தில்வைகிப்
புந்தியுறவொருவருமுன்பூணாத மணியாரம்பூண்டகோமான்,
அந்தவுரைசெவிப்படலுமதிதூரம் விழைவுடன்சென்றாடுதீர்த்தம்,
வந்ததுநந்தவப்பயனென்றுட்கொண்டான்மகோததியும்
                                  வணங்குந்தாளான்.

     (இ-ள்.) ஐந் தருவின் - பஞ்சகற்பக தருக்களின், நீழலின் - நிழலில், வாழ் -
வாழ்கின்ற, அரியுடனே-இந்திரனுடனே, ஓர் அரி ஆசனத்தில்வைகி -
ஒருசிங்காதனத்திலே உடன்வீற்றிருந்து, முன் ஒருவர்உம் பூணாத மணி ஆரம்
புந்திஉற பூண்ட - முன்பு ஒருவரும் அணிந்திராத இரத்தினவாரத்தை
மனம்மகிழஅணிந்துகொண்ட, கோமான்-தலைவனும், மகா உத்திஉம் வணங்கும்
தாளான்-பெருங் கடலும் வணங்கும் பாதங்களை யுடையவனுமான
அப்பாண்டியராசன்,- அந்தஉரைசெவி படலும்-(செவிலித்தாயர் சொன்ன)
அவ்வார்த்தை (தன்) காதிற்பட்டவுடனே, அதிதூரம் விழைவுடன் சென்று ஆடு
தீர்த்தம் வந்தது நம் தவம்பயன்என்று உள்கொண்டான் -
வெகுதூரம்விருப்பத்தோடுசென்றுஸ்நானஞ்செய்யுந் தீர்த்த யாத்திரையைக் கருதி
(அருச்சுனன் இங்கு) வந்தது நமது தவத்தின்பயனே என்று எண்ணி மகிழ்ந்தான்;
(எ-று.)

     ஐந்தரு-ஸந்தாநம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம், அரிசந்தநம் என்பன.
அதிதூரம், மஹோததி - வடமொழித்தொடர்கள்.

     முருகக்கடவுளின் அமிசமான உக்கிரகுமாரபாண்டியன் அரசாளும் நாளில்,
தமிழ்நாடுமுழுவதும் பன்னீராண்டு மழைபொழியாது