மும் மாறுபட்டு, பொழுதுவிடிவுஅளவும்-, மதன் பூசலில்ஏ- மன் மதன் செய்யும்போரிலே, கருத்து அழிந்து -மனம்வருந்தி, பூ ஆம் வாளி உழுத- (அந்தமன்மதனுடைய) புஷ்பபாணம் (தன்னுடம்பிலே) இடைவிடாது பாய்தலாலான, கொடும் புண்வழிஏ-கொடிய புண்ணிருந்த இடத்திலே, ஊசி நுழைந்துஎன- ஊசிநுழைந்தாற் போல, தென்றல் ஊர ஊர- தென்றற்காற்று மிகவும் உட்புக, (இங்ஙன்மதனவேதனையினால்), விழி துயிலா விசயன்உம்- (அந்தச் சித்திராங்கதையைக்கூடிப்பிரிந்த அந்தநாளிரவில்) கண்துயிலாத [உறக்கம்பிடிக்காத] அருச்சுனனும், அவிபுதருடன் - அந்த அந்தணருடனே, துயில்உணர்ந்து - கண்விழித்தான்போன்று,விதிஉம் செய்தான் - காலைக்கடனையுஞ் செய்திட்டான்; (எ-று.) வடிவம் வேறாதல் - மேனிநிறம்மாறுதல். மனம்வேறாதல் - மகிழ்ந்திருந்த தன்மை நீங்கிப் பிரிவுத்துயரையுடையதாதல். பூதேவராதலால், அந்தணரை 'விபுதர்' என்றார். (666) 36-பாண்டியன் அருச்சுனனை நோக்கி 'என்மகளை உனக்கு மணஞ் செய்விப்பேன்' என்றல். பஞ்சவரினடுப்பிறந்தோன்பஞ்சவன்பே ரவையெய்திப்பஞ்சபாண, வஞ்சகன்செய்வஞ்சனையான்மதிமயங்கி யிருந்துழியம்மதுரை வேந்தன், சஞ்சரிகநறுமலர்த்தார்த்தனஞ்சயனென் றறிந்தெழுந்து தழீஇக்கொண்டாங்கண், அஞ்சலினியுனக்குரியள்யான்பயந்த கடற்பிறவாவமுதமென்றான். |
(இ-ள்.) பஞ்சவரில் நடு பிறந்தோன் - பஞ்ச பாண்டவர்களுள் (மூன்றாமவனாய்) நடுவிற் பிறந்தவனான அருச்சுனன், பஞ்சவன்பேர் அவை எய்தி -பாண்டியனுடைய பெரியசபையை அடைந்து, பஞ்ச பாண வஞ்சகன் செய் வஞ்சனையால் மதி மயங்கி இருந்த உழி- ஐந்து அம்புகளையுடையவனாய் (அனைவரையும்) மயக்கித் தன்வசப்படுத்துகிறவனான மன்மதன் செய்த மோகத்தால் அறிவுமயங்கி இருந்தபொழுது, அ மதுரை வேந்தன் - (பாண்டியநாட்டு ராஜதானியாகிய) மதுரைக்குத் தலைவனான அப்பாண்டியராஜன்,- ஆங்கண் - அவ்விடத்தில், சஞ்சரிகம் நறு மலர் தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து தழீஇக்கொண்டு - (அவனை) வண்டுகள் மொய்க்கிற வாசனை வீசும் மலர்மாலையையுடைய அருச்சுனனென்று அறிந்து எழுந்து தழுவியுபசரித்து, 'அஞ்சல்- அஞ்ச வேண்டா: யான் பயந்த கடல் பிறவா அமுதம் - யான் பெற்ற மகளும்பாற்கடலினின்று தோன்றாததோர் அமிருதம் போன்றவளுமான சித்திராங்கதை, இனிஉனக்கு உரியள் - இனி உனக்கு உரியவள்,' என்றான்- என்று சொன்னான்; (எ-று.) பஞ்சவர்-ஐவர்; ஐந்து என்னும் பொருள்தரும் 'பஞ்ச' என்னும் வடமொழி யெண்ணுப்பெயரினடியாப்பிறந்த பெயர்: இங்கே, தொகைக்குறிப்பு. மன்மதனது பஞ்சபாணம் தாமரைமலர், அசோகமலர், மாமலர், முல்லைமலர், நீலோற்பலமலர் என்பன. அவ்வம்புகளை மறைந்துநின்று மனத்திலெய்து அதனையு முட்பட |