வந்து-, இரட்டை வரி சிலையால் பஞ்சவண்ணம் மகரதோரணம் நாட்டி - இரட்டையாகவிளங்குகிறநீண்ட இந்திரவில்லின்தோற்றத்தால் ஐவகை நிறங்களையுடையமகரதோரணங்களைக்கட்டி நிறுத்தி, வயங்கும் மின்னால் முந்துற தீபம்உம் எடுத்து -விளங்குகிற மின்னல்களினால் முற்பட விளக்குகளையும் ஏந்தி, தாரை முத்தால்முழுபொரி சிந்தின - தாரையாகச்சொரியும் மழைத்துளிகளினால் முழுப்பொரிகளையுஞ்சிந்தின; அம்மா - ஆச்சரியம்! (எ-று.) நீலநிறமான மேகங்கள் வானத்தில் இடைவிடாதுபரவி அவ்விடத்தை மறைத்ததையே 'நீலத்தால் விதானமாக்கி' என்றார். பஞ்சவர்ணம் - வெண்மை, கருமை,செம்மை, பொன்மை, பசுமை என்பன. மகரதோரணம் - சுறாமீன்வடிவமையத்தூக்குந்தோரணம். இந்திரவில்லில் பலவகைநிறங்களும் இருத்தல்பற்றி, 'சிலையாற் பஞ்சவண்ணமகர தோரணம் நாட்டி' என்றார். தீபமேந்துதல்- அஷ்டமங்கலத்துள் ஒன்று. நெற்பொரி சிந்துதலும், மணத்துக்கு உரியது. முழுப்பொரி- முரிவில்லாதபொரி. உருவகத்தை யங்கமாகக் கொண்டுவந்த தற்குறிப்பேற்றவணி. (682) 52.- அருச்சுனன் கண்ணனை நினைக்க, அப்பெருமான் அங்குத் தோன்றுதல். யாங்கருதிவருங்கருமமுடிப்பானெண்ணிலிராமன்முதல்யதுகுலத் தோரிசையாரென்று, பாங்குடனேதனக்குயிராந்துளபமௌலிப்பரந்தாமன்றனை நினைத்தான் பார்த்தனாகப், பூங்கமலமலரோடையனையான்றானும்பொன்னெடுந்தேர்ப்பாகனு மேயாகப்போந்து, நீங்கரியநண்பினனாய்நெடுநாணீங்குநேயத்தோனினைவின் வழிநேர்பட்டானே. |
(இ -ள்.) 'எண்ணில் - ஆலோசிக்குமிடத்து, யாம் கருதி வரும் கருமம் முடிப்பான் - நாம் நினைத்துவந்த காரியத்தை நிறைவேற்றுதற்கு, இராமன் முதல் யதுகுலத்தோர் இசையார் - பலராமன் முதலிய யதுவமிசத்தரசர்கள் உடன்படார்', என்று- என்று ஆலோசித்து, பார்த்தன் - அருச்சுனன், பாங்குடனே -உரிமையுடனே, தனக்கு உயிர் ஆம் துளபம் மௌலி பரந்தாமன் தனை நினைந்தான்ஆக - தனக்கு உயிர்போன்றவனான திருத்துழாய்மாலையைத்தரித்த முடியையுடையஸ்ரீகிருஷ்ணனை நினைத்தானாக, பூ கமலம் மலர் ஓடை அனையான்-பொலிவுள்ளதாமரைமலரோடையைப் போன்றவனான அப்பெருமான், தான்உம் பொன் நெடுந் தேர்பாகன் உம் ஏ ஆக போந்து - தானும்பொன்மயமானபெரிய (தனது) தேரைச்செலுத்துகிற சாரதியுமேயாக (ஏகாந்தமாய்ப்) புறப்பட்டு, நீங்கு அரிய நண்பினன் ஆய்நெடு நாள் நீங்கும் நேயத்தோன் நினைவின்வழிநேர்பட்டான் - பிரிதற்கு அரியநண்பனாய் பலநாளாக (த் தன்னை)ப்பிரிந்திருந்த அன்புடையோனான அருச்சுனன் நினைத்தபடியே அவனெதிரில் வந்து தோன்றினான்; (எ-று.) பரந்தாமன் - எல்லா ஒளிகளிலும் மேம்பட்டஒளியையுடையவ னென்றும், எல்லாஇடங்களிலும் மேலான இடத்தை யுடையவனென்றும் பொருள்படும். திருக்கண்கள் திருக்கைகள் திருவடிகள் |