வதகமலையிலே, மாதவனது ஏவலினால் - க்ருஷ்ணனுடையகட்டளையினாலே, மழைக்காலத்து வாசவற்கு விழா அயர்வான் - மழைக்காலத்திலே செய்யப்படுகிற இந்திரபூசையைச் செய்யும்பொருட்டு, வந்தகாலை - வந்தபோது,- யாதவரில் - யதுகுலத்தாரிலும், போசரில் - போசகுலத்தாரிலும், மற்றுஉள்ள வேந்தர் - மற்றுமுள்ளவேந்தரிலுமுள்ள, யாவர்உம் - எல்லோரும், சூழ்வர - சூழ்ந்திருக்க, நறுந்தார் இராமன் - நறுமணமுள்ள மாலையையணிந்த பலராமன், வந்தான்-: சூது அடர் பசு இளங் கொங்கை பச்சை மேனி சுபத்திரைஉம் - சூதாடுகருவியை வெல்லுகின்ற பசிய இளைய தனங்களையும் பசிய உடலையுமுடைய சுபத்திரையும், தோழியர்கள் சூழ - தோழிமார்கள் சூழ, வந்தாள் - (அங்கே) வந்தாள்; (எ -று.) அருச்சுனன் சுபத்திரையை மணத்தல் எளிதில் நிகழ்வதற்கு ஸ்ரீகிருஷ்ணன் இந்திரவிழா என்ற ஒருவியாஜம்வைத்து இங்ஙன் யாவரையும் கூடுமாறு ஏவினனென்க. (685) 55.- அனைவரும் அருச்சுனசன்னியாசியை வணங்கின பின்பு கண்ணன் வந்து வணங்குதல். முக்கோலுங்கமண்டலமுஞ்செங்கற்றூசு முந்நூலுஞ்சிகையும் மாய்முதிர்ந்து தோன்றும், அக்கோலமனைவருங்கைதொழுதுநோக்கியருணலம் பெற்றகன்றதற்பி னனைத்துலோகத்து, எக்கோலயோனிகட்குமுயிராய்த்தோற்ற மீரைந்தாய்ப்பாற் கடலினிடையேவைகும், மைக்கோலமுகில்வண்ணன்றானுமெய்தி மனவணக்கம் புரிவோனைவணங்கினானே. |
(இ-ள்.) முக்கோல்உம் - திரிதண்டமும், கமண்டலம்உம் - ஜலபாத்திரமும், செங்கல் தூசுஉம் - காவிவஸ்திரமும், முந்நூல்உம் - பூணூலும், சிகைஉம் - குடுமியும்,(ஆகிய வைஷ்ணவசன்னியாசிகளுக்கு உரிய ஐந்து அடையாளங்களும்), ஆய் -பொருந்தி, முதிர்ந்து தோன்றும் - பூர்ணமாய் விளங்குகிற, அ கோலம் - அந்தத்துறவிவடிவத்தை, அனைவர்உம் -(கீழ்ச்சொன்ன பலராமன் முதலியோர்) எல்லோரும்,நோக்கி - பார்த்து [தரிசித்து], கைதொழுது - கைகூப்பிநமஸ்கரித்து, அருள் நலம்பெற்று - (அச்சன்னியாசியினுடைய) கருணையாகிய நல்ல அநுக்கிரகத்தைப் பெற்று,அகன்ற தன் பின் - நீங்கின பின்பு, அனைத்து லோகத்து - சகலலோகங்களிலுமுள்ள,எக் கோலம் யோனிகட்கும்உம் - பலவகைவடிவமுள்ள எல்லாப்பிறப்புக்களிலும்வாழ்கிற உயிர்களனைத்துக்கும், உயிர் ஆய் - உயிராகி, தோற்றம் ஈர்ஐந்து ஆய் -பத்துவகைப்பிறப்புக்கள் கொண்டு, பாற்கடலின் இடையே வைகும் - திருப்பாற்கடலின் நடுவிலே (வியூகமூர்த்தியாய்) எழுந்தருளியிருக்கிற, மை கோலம் முகில்வண்ணன் தான்உம் -கருநிறமான அழகிய மேகம்போன்ற திருமேனி நிறத்தையுடையவனான ஸ்ரீகிருஷ்ணனும், எய்தி - அருகில் வந்து, மனவணக்கம் புரிவோனை வணங்கினான் -(தன்னை) மனத்தால்வணங்குதல்செய்பவபனான அருச்சுனனை (த்தான்காயத்தால் )வணங்கினான்; (எ-று.) முக்கோலும் கமண்டலமும் செங்கல்தூசும் முந்நூலும்சிகையும் என்ற இவை 'துறவிகள் பஞ்சமுத்திரை' எனப்படும்; அங்கிரா |