பக்கம் எண் :

408பாரதம்ஆதி பருவம்

அம்முனிவனுடைய தாமரைமலர்போன்ற பாதங்களை நமஸ்கரித்து, வண் புனல்
ஆடுதற்கு எங்குஉம் ஏகினீர் எனின்உம் - சிறந்த புண்ணியதீர்த்தங்களில் நீராடுதற்கு
எல்லாவிடங்களிலும் சென்றீராயினும், தங்கும் மா நகர் யாது - தேவரீர் எழுந்தருளி
யிருக்கும் சிறந்தநகரம் எது? என - என்றுவினாவ,-தபோதனன் தான்உம் -
அம்முனிவனும், எங்கள் மா நகர் இந்திரப்பிரத்தம் என்ற இசைத்தான் - எமது
சிறந்தநகரம் இந்திரப்பிரத்த மென்று விடைகூறினான்; (எ-று.)

     மங்கைப்பருவத்திற்கு வயதெல்லை- பன்னிரண்டு பதின் மூன்று பிராயங்கள்.
தபோதநன் - வடசொல்; தவத்தை தனமாக வுடையவன்; அனைவரும் செல்வத்தை
விரும்பி ஈட்டிப் பாதுகாத்தல் போலத் தவத்தை விரும்பியீட்டிப் பாதுகாப்பவன்.
                                                            (695)

65.என்றகாலையிலிந்திரன் மதலையையொழிய
நின்றபேரையந்நெடுங்கணாள் வினவலுநிருபன்
வென்றிமன்னவர்யாரையும் வினவினைமின்னே
மன்றலந்தொடைவிசயனை மறந்ததென்னென்றான்.

     (இ-ள்.) என்றகாலையில் - என்று (முனிவன்) விடைகூறிய பொழுது,- அ
நெடுங்கணாள் - நீண்டகண்களையுடையளான அச்சுபத்திரை, இந்திரன் மதலையை
ஒழியநின்ற பேரை வினவலும் - அருச்சுனனைத்தவிர மற்றைத்தருமன்
முதலியோரைக்குறித்து (யோகக்ஷேமம்) விசாரித்தவளவிலே,- நிருபன் -
அருச்சுனன்.- (அவளை நோக்கி), 'மின்னே -மின்னல்போன்றவளே! வென்றி
மன்னவர்யாரைஉம் வினவினை - வெற்றியையுடைய அரசரெல்லோரையுங் குறித்து
வினாவினாய்; மன்றல் அம் தொடைவிசயனை மறந்ததுஎன் - வாசனையுள்ள
அழகியமலர்மாலையையுடைய அருச்சுனனை (நீ) மறந்ததுயாதுகாரணத்தால்?'
என்றான்- என்றுவினாவினான்.                                   (696)

           66.- இதுவும் அடுத்த கவியும் - தோழிவார்த்தை.

யாழின்மென்மொழியெங்கணா யகியிவளவனுக்கு
ஊழினன்புடைமன்றலுக் குரியளாதலினால்
வாழிவெஞ்சிலைவிசயனை மறைத்தனளென்னாத்
தோழிநின்றவளொருத்திகை தொழுதனள்சொன்னாள்.

   (இ-ள்.) நின்றவள் தோழி ஒருத்தி - (அப்பொழுது அங்கு) நின்ற
சுபத்திரையின் தோழியொருத்தி, கை தொழுதனள் - (துறவியைக்) கைகூப்பி
வணங்கி,- 'யாழின் மொல்மொழி எங்கள் நாயகி இவள் - வீணையினிசைபோல
மெல்லிய [இனிய]சொற்களையுடைய எங்கள் தலைவியாகிய இவள், அவனுக்கு -
அவ்வருச்சுனனக்கு,ஊழின் அன்பு உடை மன்றலுக்கு உரியள் ஆதலினால் -
முறைப்படி யமைந்தஅன்புடைய விவாகத்துக்கு உரியவளாதலால், வெம் சிலை
விசயனை மறைத்தனள் -கொடியவில்லையுடைய அருச்சுனனைக்குறித்து
(வினவாமல்) மறைத்தாள்,' என்னா -என்று, சோன்னாள்-; (எ-று.)

     இவள் அருச்சுனனை மணஞ்செய்துகொள்ளும் விருப்புடைய ளாதலால்,
நாணம்பற்றி, அவனை வினாவில ளென்றனளென்பதாம். வாழி - அசை.    (697)