கொண்டு, மீன் நெறிகரந்து என - மீன்சென்றவழி ஒளித்ததுபோல (ச் சென்ற அடிச்சுவடும் தெரியாதபடி), மீள ஏகினோம் - மீண்டு (எம்மிடத்துக்குச்) சென்றிட்டோம்; (எ -று.) நீரிற் சஞ்சரிக்கும்போது மீன் சென்று மீண்ட இடம் தெரியாமற்போவதனால், அவ்வாறுசென்றுமீண்ட தம்நெறிக்கு மீனின் நெறியை உவமை கூறினார். தூநகை -பண்புத்தொகையன்மொழி. தேநு - வடசொல். வானவர் - வானத்திலுறைபவர்: தேவர்.வசிட்டன் - இந்திரியத்தை வென்றவன்: தேஜசுள்ளவனென்றுமாம். 'மீனெறிகவர்ந்தென 'எனவும்பாடம். (72) 65. | பசுக்கவர்ந்தனரெனப் பயிலுமாதவம் முசுக்குலமனையமெய்ம் முனிவர்கூறலும் சிசுக்களினறிவிலாச் சிந்தைசெய்தவர் வசுக்களென்றருந்ததி மகிழ்நனெண்ணினான். |
(இ-ள்.)பயிலும் மாதவம் - பழகுகின்ற பெருந்தவத்தையுடையரான, முசு குலம்அனைய - முசுவென்னும்வானரசாதியை யொத்த மெய் - உடம்பையுடைய, முனிவர் -முனிவர்கள், 'பசு கவர்ந்தனர் - பசுவை (யாவரோ) திருடிக்கொண்டு போய்விட்டார்கள்,' என - என்று, கூறலும் - சொன்னவளவில்,- அருந்ததி மகிழ்நன்-அருந்ததிக்குக்கணவனான வசிஷ்டமாமுனிவன், 'சிசுக்களின் - சிறு குழந்தைகள்போல, அறிவுஇலா- ஆராய்ச்சியில்லாமல், சிந்தை செய்தவர் - (திருடுமாறு) எண்ணியவர், வசுக்கள் - வசுக்களாவர்,' என்று-, எண்ணினான் - ஞானதிருஷ்டியினாலறிந்தான்;(எ-று.) மயிர்வளர்ந்திருத்தலும் உடம்பு ஒட்டியிருத்தலும்பற்றியும், குந்தியிருக்கும் தன்மைபற்றியும், முசுக்குலம், முனிவர்க்கு உவமை. முனிவர்கள்மீதுள்ள வெகுளியால் 'முசுக்குலமனைய ' என்றனர். முசு - குரங்கன்சாதிபேதம். இலா - இல்லாமல்: ஈறுகெட்ட எதிர்மறைக் குறிப்புவினையெச்சம்: இது சிந்தைசெய்தவர் என்ற விடத்திலுள்ளசெய்தவரென்பதில் செய்என்ற வினையுடன் தொடரும். அருந்ததி -வசிஷ்டமுனிவரின்மனைவி. (73) 66. | உம்பதமிழந்துநீ ருததிமண்ணுளோர் தம்பதம்பெறுகெனச் சாபங்கூறலும் எம்பதம்பெறுவதென் றினியெனாவவன் செம்பதமெமதுபூஞ் சென்னியேந்தினேம். |
(இ - ள்.) (தனது ஞானதிருஷ்டியினால் வசுக்கள் தேனுவைக் களவாடியதை யறிந்த வசிட்டமுனிவன்),- 'நீர்-, உம்பதம் - உமது பதவியை [வசுக்களாயிருப்பதை], இழந்து-, உததி மண் உளோர் தம் - சமுத்திரத்தினாற் சூழப்பட்ட பூமியிலேயிருப்பவருடைய, பதம் - நிலையை, பெறுக - அடைவீராக,' என-, சாபம் கூறலும்-,- 'எம்பதம் - எமக்குஉரிய பதவியை [வசுக்களாயிருப்பதை], பெறுவது - (நாங்கள்)மீண்டும் அடைவது, இனி - இனி மேல், என்று - எப்போது? ' எனா - என்றுவினவி,அவன் செம் பதம் - அந்தவசிஷ்ட முனிவனின் அழகிய திருவடிகளை, எமது பூ |