பக்கம் எண் :

412பாரதம்ஆதி பருவம்

சிற்றிடைப்பெருங்கொங்கையுந் தம்முனைத்தியான
முற்றமுன்னினளிருவரு முன்முன்வந்துற்றார்.

     (இ-ள்.) உற்ற - பொருந்திய, கங்குலில் - அவ்விரவில், யாவர் உம்-, தணந்த
ஆறு - வேறுகாரணத்தாற் சென்றிட்டவகையை, உணர்ந்து-, பெரியோன் -
பெருமையுள்ள அருச்சுனன், பெற்ற தன்பெரும் பிதாவினை முன்னினன் -
(தன்னைப்)பெற்ற பெருமையுள்ள பிதாவாகிய இந்திரனை நினைந்தான்; சிறு இடை
பெருங்கொங்கைஉம் - சிறிய இடையையும் பெரியதனங்களையுமுடையளான
சுபத்திரையும்,தம்முனை - தன் அண்ணனாகிய க்ருஷ்ணனை, தியானம் முற்ற
முன்னினள் -தியானநிலை நிரம்ப (மனத்தினால்) தியானித்தாள்: இருவர்உம் -
(க்ருஷ்ணன் இந்திரன்என்ற) அவ்விருவரும், முன் முன்வந்து உற்றார் -
(அவ்விருவருக்கும்) முன்னாகவந்து சேர்ந்தனர்.                     (704)

74.- தேவேந்திரனைக் கண்ணபிரான் எதிர்கொள்ளுதல்.

இந்திராணியோடெய்திய விந்திரன்றன்னை
இந்திராபதியெதிர்கொளத் துவரைமாமூதூர்ச்
சந்திராதவமண்டபத் திடுபொலந்தவிசில்
வந்திராவணங்கியதிரு மகனுடன்மகிழ்ந்தான்.

     (இ-ள்.) இந்திராணியோடு எய்திய இந்திரன் தன்னை - இந்திராணியுடனே
வந்தஇந்திரனை, இந்திராபதி எதிர்கொள - இலக்குமிக்குக்கணவனான கண்ணன்
எதிர்கொள்ள, (அவன்), துவரை மா  முது ஊர் - பெரிய பழமையான
அத்துவாரகாபுரியில், சந்திர ஆதவர் மண்டபத்து இடு பொலம் தவிசில் வந்து
இரா -சந்திரசூரியர் போல விளங்குகின்ற மண்டபத்திலே யிட்ட பொன்மயமான
ஆசனத்தில்வந்து வீற்றிருந்து, வணங்கிய திருமகனுடன் மகிழ்ந்தான் - (தன்னை)
வணங்கின(தனது) சிறந்தகுமாரனான அருச்சுனனுடன் கூடி மகிழ்ந்தான்; (எ-று.)

     இந்திராணி - இந்த்ராணீ: இந்திரன்மனைவி. இந்த்ரன், இந்திரா என்ற
பெயர்கள்,ஐசுவரியமுடையவ ரென்று பொருள்படும்.                (705)

75.- இந்திரனும் இந்திராணியும் தமது ஆபரணங்களினால்
முறையே அருச்சுனனையும்சுபத்திரையையும் அலங்கரித்தல்.

பொருவரும்புருகூதனும் புலோமகன்னிகையும்
இருவருந்தமகலன்களா லிவரிருவரையும்
மருவரும்படியணிதலி னணிகெழுவனப்பால்
ஒருவரும்பிறரொப்பல ரென்னுமாறுயர்ந்தார்.

     (இ-ள்.) பொருவு அரும் புருகூதன்உம் புலோமகன்னிகைஉம் இருவர்உம் -
ஒப்பற்றவர்களான இந்திரனும் புலோமா என்பவனது மகளான இந்திராணியும்
ஆகியஇரண்டு பேரும், தம கலன்களால்- தங்கள் ஆபரணங்களினால், இவர்
இருவரைஉம் -(அருச்சுனனும் சுபத்திரையுமாகிய) இவர்கள் இரண்டுபேரையும்,
மருவரும்படிஅணிதலின் - பொருத்தமாக அலங்கரித்ததனால், (அவ்விருவரும்),
அணி கெழுவனப்பால் - (தங்கள்) இயற்கையழகின்மீது நிறைந்த