மாறு, அவண் வைகினன் - அவ்விந்திரப்பிரத்தநகரத்திலே இருந்தான்; (எ-று.)- தாலத்துவசன் - வடமொழிப்பெயர். (716) 86.- சுபத்திரையினிடமாக அபிமந்யு பிறத்தல். பன்னாளிவரிப்பதிசேர்ந்தபின் பங்கசாத மின்னாளுமார்பற்குயிர்போலும்விசயனென்பான் நன்னாளினன்மைதருமோரையி னல்கவஞ்சி அன்னாளிடத்திலபிமன்னு வவதரித்தான். |
(இ-ள்.) இவர் பல் நாள் இ பதி சேர்ந்த பின் - இந்தக்கிருஷ்ணார்ச்சுனர்கள் பலநாள் இவ்விந்திரப்பிரத்தத்திலேசேர்ந்து இருந்த பின்பு,- பங்கசாதம் மின் ஆளும்மார்பற்கு உயிர் போலும்விசயன் என்பான் - தாமரைமலரில் வாழ்கிற மின்னல்போன்றஇலக்குமி இடமாகக்கொண்டுவீற்றிருக்கப்பெற்ற திருமார்பை யுடையனான கண்ணனுக்கு உயிர்போன்றவனான அருச்சுனன், நல்க - கர்ப்பாதானஞ் செய்ய, நல்நாளில் - சுபதினத்திலே, நன்மை தரும் ஓரையில் - நன்மைவிளைக்குஞ்சுபமுகூர்த்தத்திலே, வஞ்சி அன்னாள் இடத்தில் அபிமன்னு அவதரித்தான் - வஞ்சிக்கொடி போன்றவளான சுபத்திரையினிடத்தில் அபிமந்யு என்னுங்குமாரன் தோன்றினான்; பங்கஜாதம் - வடசொல்; சேற்றி லுண்டாவது. ஓரை - ஹோரா என்ற வடசொல்லின் விகாரம். அபிமந்யு என்றவட மொழிப்பெயர்க்கு, பயமில்லாதவனும் கோபமுடையவனு மாயிருப்பவ னென்று முதனூலிற் காரணப்பொருள் கூறப்பட்டிருக்கிறது. (717) 87.- உபபாண்டவ ருற்பத்தி. வேதஞ்சிறக்கமனுநீதி விளங்கவிப்பார் ஆதங்கமாறவருமைவரி னைவர்மைந்தர் பூதங்களைந்துங்குணமைந்திற் பொலிந்தவாபோல் ஓதங்கியிலுற்பவித்தாள்வயி னுற்பவித்தார். |
(இ-ள்.) வேதம் சிறக்க - வேதங்கள் சிறப்படையவும், மனுநீதி விளங்க - மநுதர்மசாஸ்திரத்திற்கூறிய நீதிகள்விளக்கமடையவும், இ பார் ஆதங்கம் ஆற - இந்தப்பூமியினது துன்பம் நீங்கவும், வரும் - பிறந்த, ஐவரின் - பஞ்சபாண்டவர்களினின்று, ஐவர் மைந்தர் - ஐந்துபுத்திரர்கள், பூதங்கள் ஐந்துஉம்குணம் ஐந்தின் பொலிந்த ஆ போல் - பஞ்சபூதங்களும் ஐந்துகுணங்களாற்சிறத்தல்போல, ஓது அங்கியில் உற்பவித்தாள்வயின் உற்பவித்தார் -சிறப்பித்துச் சொல்லப்படுகிற யாகாக்கினியினின்று பிறந்த திரௌபதியினிடமாகப்பிறந்தார்கள்; (எ-று.) வைதிககிரியைகள் தவறாதுநடைபெறுதலால் வேதம் சிறப்புறும். தருமன் முதலியபாண்டவரைவர்க்கும் முறையேபிரதிவிந்தியன், சுதசோமன், சுருதகர்மா, சதாநீகன்,சுருதஸேநன்என்றஐவர் வருஷத்திற்கு ஒருவராய்ப் பிறந்தனரென்று முதனூலினா லறிக.இவர்கள், உபபாண்டவரென்றும், பஞ்ச திரௌபதேயரென்றுங் கூறப்படுவர்.பிருதிவிக்கு மணமும், அப்புக்குச் சுவையும், தேயுவுக்கு ஒளியும், வாயுவுக்கு ஊறுவும்,ஆகாயத்துக்கு ஒலியும் குண |