பக்கம் எண் :

421

எ ட் டா வ து
காண்டவதகனச் சருக்கம்.

     தேவேந்திரனுக்குஉரியதாய்ப் பூலோகத்திலுள்ள காண்டவ மென்னும்
வனத்தைக்கிருஷ்ணார்ச்சுனர்களது அநுமதிப்படி அக்கினிதேவன் எரித்திட்ட
செய்தியைக்கூறுகின்ற சருக்க மென்று பொருள்; காண்டவதஹந மென்ற
வடமொழித்தொடர் -ஆறாம் வேற்றுமைத்தொகை: தகனச்சருக்கமென்றதொடர் -
இரண்டனுருபும் பயனும்தொக்கதொகை: ஒருசாரார் இந்தச்சருக்கத்தின்
முதற்பத்தொன்பது பாடலைஇளவேனிற்சருக்கம் என்று தனியே
ஒருசருக்கமாகக்கொண்டு, பின்ஐம்பத்தெட்டுப்பாடல்களைக் காண்டவதகனச்
சருக்கம்
என்று கொள்கின்றனர்:பதினான்காம்பாடல்முதல்முது வேனிற்பருவம்
கூறப்படுவதாலும், சருக்கத்தின்பெயர்கதைக்குச் சம்பந்தப்படவே இதுவரையில்
வைத்திருத்தலாலும் அங்ஙன்கொள்ளவேண்டியதில்லை.

1.-சூரியன் தட்சிணாயனத்தைவிட்டு உத்தராயணத்தில்
வருதல்.

நனியாட லனற்கடவுண் யமனிருதி நண்ணுதிசை நாள்க டோறும்,
முனியாம னடந்திளைத்து முன்னையினும் பரிதாபமுதிர்ந்ததென்று,
தனியாழித் தனிநெடுந்தேர்த் தனிப்பச்சை நிறப்பரியைச்
                                         சயிலராசன்,
பனியாலவ் விடாய்தணிப்பான் பனிப்பகைவன் பனிசெய்வோன்
                                   பக்கஞ்சேர்ந்தான்.

     (இ-ள்.) பனி பகைவன் - பனிக்குப் பகைவனாகிய சூரியனானவன்,- நனி
ஆடல்- மிக்ககொடுமையையுடைய, அனல் கடவுள் - அக்கினியும், யமன் -
யமனும், நிருதி- நிருருதியும், (என்னும் இவர்கள்), நண்ணா - பொருந்திய, திசை -
(தெற்குத்) திக்கில்,நாள்கள் தோறுஉம் - தினந்தோறும், முனியாமல்நடந்து -
வெறுப்புக்கொள்ளாமல்நடந்ததனால், (தனதுதேர்க்குதிரை),முன்னையின்உம்
இளைத்து பரிதாபம் முதிர்ந்தது -வெப்பம் அதிகப்பட்டு முன்பு இருந்த
நிலையினின்று மாறிச்சோர்வடைந்து விட்டது,என்று - என்று எண்ணி, - தனி
ஆழி தனி நெடு தேர் தனி பச்சை நிறம் பரியை -ஒற்றைச் சக்கரத்தையுடைய
ஒப்பற்ற பெரிய (தனது) தேரிற்பூட்டியதனித்தபசுமைநிறத்தையுடைய
அக்குதிரையை, சயிலராசன் பனியால் அ விடாய் தணிப்பான் -மலையரசனாகிய
இமயமலையிலுள்ளபனியினால் அந்தத் தாபந்தணியச்செய்தற்பொருட்டு, பனி
செய்வோன்பக்கம் சேர்ந்தான் - பணியைச்செய்பவனானஅவ்விமய
மலையிருக்கிறவடக்குப்பக்கத்தை யடைந்தான்; (எ-று.)

     ஆடிமாசமுதல் மார்கழிமாசம் வரையில் ஆறுமாசம் தக்ஷிணாயனமும்,
தைமாசம்முதல் ஆனிமாசம்வரையில் ஆறுமாசம் உத்தராயணமுமாம். சூரியன்
தென்புறமாகச்சஞ்சரிக்கும் காலம், தக்ஷிணாயனம். அவன் வடபுறமாகச்சஞ்சரிக்கும்
காலம், உத்தராயணம். ஆயினும், வடக்கினின்றுமீண்டு தென்புறமாகவும்
தெற்கினின்றுமீண்டு வடபுறமாகவும் வரும்போது தெற்குத்திசைப்பாகமாகவேனும்
வடக்குத்திசைப்பாகமாகவேனும் ஒதுங்காமல் இடையில் நிற்குங்காலம் விஷு வ
மெனப்படும். சித்திரைமாதத்திற்கு  உரிய