பக்கம் எண் :

காண்டவதகனச் சருக்கம்435

"தாழிவாய மறைக்குந் தண்ணென் தடம்பெருங் குவளைக் கண்ணார்" என்றார் சிந்தாமணியாரும்.பைம்புனல் என்பதில், பசுமை - புதுமையின் மேலும், குளிர்ச்சியின்மேலும் நின்றது. 'தாழினறுங்குவளை', 'நானிலத்தும்' என்றும் பாடம்.
                                                             (739)

19.- கண்ணனும் அருச்சுனனும் ஒருசேர இருத்தல்.

நீகார மழைபொழிய நித்திலவெண் குடைநிழற்ற நீல வாட்கட்
பாகாரு மொழிமடவார் மணிக்கவரி யிருமருங்கும் பயில வீசக்
கார்காலம் புகுந்துசெழுங் காளமுகி லிரண்டொருபாற் கலந்த
                                          தென்ன
ஆகார மழகெறிப்ப விருவருமாங் குடனிருந்தா ராவி
                                       போல்வார்.

     (இ-ள்.) நீகாரம் மழை பொழிய - பனிநீர்மழை சொரியவும்,- வெள் நித்திலம்
குடை நிழற்ற - வெண்ணிறமான முத்துக்குடை நிழச்செய்யவும்,- நீலம்வாள்கண் -
கருங்குவளைமலர் போன்ற பிரகாசமான கண்களையும், பாகு ஆரும் மொழி -
கருப்பஞ்சாற்றுப்பாகை யொத்த இன்சொல்லையுமுடைய, மடவார்- இளமகளிர், மணி
கவரி - அழகிய சாமரங்களை, இருமருங்குஉம் - இரண்டு பக்கத்திலும், பயில வீச-
பொருந்த வீசவும்,- ஆவி போல்வார் இருவர்உம் - (ஒருவர்க்கொருவர்)
உயிர்போன்றநண்பர்களான கிருஷ்ணார்ச்சுன ரிரண்டு பேரும், கார் காலம்
புகுந்து செழு காளம்முகில் இரண்டு ஒருபால் கலந்தது என்ன - கார்காலம் வரச்
செழுமையான காளமேகங்களிரண்டு ஓரிடத்துக் கலந்தாற் போல, ஆகாரம் அழகு
எறிப்ப - உடம்புஅழகை வீச,- ஆங்கு - அவ்விடத்தில் [அவ்யமுனைக்கரையின்
சோலையில்], உடன்இருந்தார் - ஒருங்கு இருந்தார்கள்; (எ-று.)

     நீகாரமழைபொழிதல் முதலிய மூன்றும், அக்கோடைக்காலத்து வெப்பத்தைத்
தணிக்கும் சைத்தியோபசாரமாக நிகழ்ந்தன வென்க. நீஹாரம் - வடசொல்: பனி
யென்று பொருள். 'நீகார மழை பொழிய' என்றது - பனிநீரென்னும் ஒருவகை
வாசனைநீரைச்சொரிய வென்றவாறு. பயில வீசுதல் - வெப்பந்தணித்தற்கு வேண்டிய
காற்று உண்டாகும்படி இடைவிடாது விசையோடுவீசுதல். கார் காலத்து நீர்கொண்ட
கருநிறமான மேகம் - கிருஷ்ணார்ச்சுனரது வடிவத்துக்கு நிறத்தால் உவமம்.
கார்காலம்' என்பது - ரகரம் இடையிட்டு வந்த ஆசெதுகை. 'கார்காலம்' என
வலிமிகாதது, வருமொழி வடமொழியாதலி னென்க.

     இச்சருக்கத்தில் இதுவரை கிருஷ்ணார்ச்சுனர்களுடையசெய்தி கூறும்
முகத்தால்ருதுவர்ணனை, பொழில்விளையாட்டு, நீர்விளையாட்டு, பூக்கொய்தல்
என்னும்பெருங்காப்பிய இலக்கணங்களைக் கூறினர்; இச்சருக்கத்தில் எடுத்துக்
கொண்டபொருளான காண்டவதகனவரலாறு இனிக் கூறப்படுகிறது. அதற்குத்
தோற்றுவாய்செய்தவாறாகும் இச்செய்யுள்.                        (740)

வேறு.

20.- அக்கினிதேவன் அந்தணவடிவுகொண்டு அங்குவருதல்.

இனிய பான்முகந் தொழுக்குமா குதியென விலங்குமுப் புரிநூலும்,
தனது வெஞ்சிகைக் கொழுந்தெனப் புறத்தினிற் றாழ்ந்தசெஞ்