சடைக்காடும், புனித வெண்புகை மருங்குசுற் றியதெனப் புனைந்தவா டையுமாகி, மனித வேதியர் வடிவுகொண் டவரெதிர் வன்னிவா னவன்வந்தான். |
(இ-ள்.) வன்னி வானவன் - அக்கினிதேவன்,- இனிய பால் முகந்து ஒழுக்கும் ஆகுதி என - இனிமையான பாலை மொண்டெடுத்து ஆகுதியாகச் சொரியுந் தாரை போல, இலங்கும் - விளங்குகிய, முப்புரி நூல்உம் - பூணூலையும், தனது வெம் சிகைகொழுந்து என - தன்னுடைய உஷ்ணமான சுவாலையின்கொழுந்து போல, புறத்தனில் தாழ்ந்த - பின்புறத்திலே தொங்குகிற, செம் சடைகாடு உம் - செந்நிறமானசடைத்தொகுதியையும், புனிதம் வெள்புகை மருங்கு சுற்றியது என - பரிசுத்தமானவெண்ணிறமுள்ள புகை இடையிற் சுற்றினாற் போல, புனைந்த ஆடைஉம் - தரித்தவஸ்திரத்தையும், ஆகி - உடையவனாய், மனித வேதியர் வடிவு கொண்டு -மானுடமுனிவர் வடிவங்கொண்டு, அவர் எதிர் வந்தான் - அந்தக் கிருஷ்ணன்அருச்சுனன் என்ற இருவரது எதிரிலேவந்தான்; அக்கினிபகவான் ஓர்இருடியின் வடிவங்கொண்டு ஸ்ரீகிருஷ்ணார்ச்சுனர்களின் முன்னிலையில் வந்தன னென்பதாம். சந்தர்ப்பத்துக்கு ஏற்ற உவமையை எடுத்துக்கூறிவருணித்தல் கவிசமத்காரமாதலால் அக்கினிதேவன் தரித்தவெள்ளிய முப்புரிநூலுக்கு -அவ்வக்கினியில் மந்திரபூர்வமாகச்சொரியும் பால்தாரையையும், அவனது முடியிற்சிவந்து விளங்குகிற சடைக்கு - அவ்வாகுதி சொரிதலால் மேலெழுந்துதோன்றுகிறசெந்நிறச்சுவாலையின் நுனியையும், அவன் இடையில் உடுத்த ஆடைக்கு -அங்ஙனஞ் சொலித்தெரிகிற அக்கினியின் வெண்புகையையுமே ஒப்பாகக் குறித்தார்;தற்குறிப்பேற்றவணி. ஓமதூமம் பரிசுத்திகர மானதால், 'புனிதவெண்புகை' எனப்பட்டது. ஆகுதி - ஓமாக்கினியிற் சொரிவது. 'சடைக்காடு' என்றது, அடர்த்திபற்றி.வேதியர் - வேதத்தை ஓதுதலோடு ஓதுவித்தற்கும் உரியவர். இதுமுதல் இருபத்தைந்துகவிகள்- முதற்சீர் மாச்சீரும் ஈற்றுச்சீர் காய்ச்சீரும், மற்றவை விளச்சீர்களுமாகிவந்த அறுசீராசிரிய விருத்தங்கள். (741) 21.- அவ்வந்தணன் தன்னைஉபசரித்த கிருஷ்ணார்ச்சுனர்களை உணவுவேண்டல். வந்தவந்தணன்வரவுகண்டிருவரும் வந்தெதிர்வணங்கித்தஞ் சிந்தையன்பொடுவேதிகையெனத்திகழ் செம்பொனின்றவிசேற்ற அந்தணாளனுங்குழிந்தபொற்கண்ணின னவிமணங்கமழ்வாயன் உந்துவெம்பசிபெரிதுவல்லேயெனக் கோதனமிடுகென்றான். |
(இ-ள்.) வந்த அந்தணன் வரவுகண்டு - வந்த அம்முனிவனுடைய வரவைப்பார்த்து, இருவர்உம் - (கிருஷ்ணன் அருச்சுனன் என்னும்) இரண்டுபேரும், எதிர் வந்து வணங்கி - எதிர்கொண்டு வந்து நமஸ்கரித்து, தம் சிந்தை அன்பொடு - தங்கள்மனத்திற் கொண்ட அன்புடனே, வேதிகை என திகழ் செம் பொனின் தவிசு ஏற்ற - வேதிகைபோல விளங்குகிற மாற்றுயர்ந்த பொன்னினாலா |