பக்கம் எண் :

450பாரதம்ஆதி பருவம்

யென்பது, மானின் ஆண்பாற்பெயர், 'இரலை' என வந்ததனால் 'உழை' என்பது -
அதன் பெண்பாலின்மேல் நின்றது. இனி, இரலை உழை யென்பவற்றை மானின்சாதி
பேதமெனலுமாம்.                                                (759)

39.காழுடைப்புறக்கழைகளின்துளைதொறுங் கால்பரந்
                                  திசைக்கின்ற,
ஏழிசைக்குளமுருகிமெய்புளகெழ விரைகொளுமசுணங்கள்,
தாழழற்சுடர்சுடச்சுடவெடித்தெழுசடுலவோசையின்மாய்ந்த,
ஊழியிற்புயலுருமினான்மடிந்திடு முரகர்தங்குலம்போன்ற.

     (இ-ள்.) காழ் உடை புறம் - வயிரமுள்ள புறத்தையுடைய கழைகளின் -
மூங்கில்களின், துளை தொறும் - துவாரங்களிலெல்லாம், கால் பரந்து - காற்றுப்
பரவுதலால், இசைக்கின்ற - ஒலித்தெழுகிற, ஏழ் இசைக்கு -
ஏழுவகைச்சுரங்களையுங்கேட்டு அவற்றிற்கு, உளம் உருகி - மனம் கரைந்து,
(அவ்வானந்தத்தால்), மெய் புளகு எழ - உடம்பில் மயிர்ச்சிலிர்ப்பு உண்டாக,
(அந்தஇசையைக்கேட்டதனாலான ஆனந்தத்தாற்பரவசப்பட்டு அங்கு நின்று
புடைபெயராமல்), இரை கொளும் - (அந்தஇசையையே) உணவாகக்கொள்ளுகிற,
அசுணங்கள் - அசுணமென்னும்பறவைகளானவை -, தாழ் அழல் சுடர் - மிகுகிற
அக்கினிச்சுவாலைகள், சுட சுட - மேன்மேற் சுடுதலால், வெடித்து எழு -
(அம்மூங்கில்கள்) வெடித்ததனால் ஒலித்தெழுகிற, சடுலம் ஓசையின் - பயங்கரமான
ஓசையினாலேயே, மாய்ந்த - இறந்தன; (அங்ஙனம் ஒலியின்கடுமைபற்றியே யிறந்த
அவை), ஊழியில் - கற்பாந்த காலத்தில் தோன்றுகிற, புயல் மேகங்களின்,
உருமினால்- இடியோசையினால், மடிந்திடும் - இறந்திடுகிற, உரகர்தம் குலம் -
நாகசாதியாரின்கூட்டங்களை, போன்ற - ஒத்தன; (எ-று.)

     இனியஇசையொலிகளைக்கேட்டவளவில் மகிழ்ந்துகளித்தலும், கடுமையான
பறையொலிபோன்ற ஒலிகளைக் கேட்டவளவிலே பொறாமல் வருந்தியிறத்தலும்,
அசுணமென்னும் பறவைச்சாதியின் இயல்பு; காண்டவவனத்திலுள்மூங்கிற்காட்டில்
துளையுள்ள மூங்கில்களின்மீது காற்று அடிக்கும்போது இயல்பாகவுண்டாகிற ஒலி
இன்னிசையா யமைய, அதனை யறிந்து அசுணப் பறவைகள்
அம்மூங்கில்களினருகில்வந்துகூடி அவ்வொலியைக்கேட்டு ஆனந்தங்
கொண்டிருந்தன; அச்சமயத்தில்அம்மூங்கில்களைத்தீப்பற்றி யெரித்தலால் அவை
வெடிக்கையிலுண்டான கடியஓசையைக் கேட்டு அம்மாத்திரத்திலே அதனாலேயே
அப்பறைவைகள் இறந்தன:தம்மேல் தீப்பற்றியெரிக்குமளவும் உயிர்வாழ்ந்து பின்பு
தீயெரித்தலா லிறந்தனவல்ல;இங்ஙனம் அவை, வேறோர்ஊறும் படாதிருக்கையிலே
இறந்துபடுதற்கு,கற்பாந்தகாலத்திற் பெருமழை பொழிந்து உலகங்களை யழித்தற்கு
வானத்திலெழுகிறமேகங்களின் இடியோசையைக் கேட்டமாத்திரத்திலே கீழுலகில்
இருந்தபடியேயிறந்தொழிகிற நாகசாதியாரை உவமைகூறினார்.
(காற்றடித்தலாலொலிக்கிற மூங்கில்கள்,வடமொழியில் 'கீசகம்' எனப்படும்.)

     மேல்வைரமாத்திரமேயுடையவை - பனை, தெங்கு, மூங்கில் முதலிய: அவை -
புறக்காழன புன்மரம் பெண்மரம்என்று கூறப்