பக்கம் எண் :

காண்டவதகனச் சருக்கம்459

எம்மையவித்தற்கு இன்றியமையாத துணையாகக்கொள்ளப்பட்ட முகில்கள்
எம்மாலழிந்தால் இந்திரன் நம்மை வெல்லுமாறு வேறில்லையென்று கருதி அக்கினி
செருக்கினனென்பதாம். பூதங்கள் தோன்றும் முறையால் அக்கினியினின்று
நீர்தோன்றிற்று என்று வேதங் கூறுகின்றது; அதுபற்றியே 'அத்தோயமும் எமதே'
என்றான். இச்செய்யுளின் தன்மைப்பன்மைகள், செருக்குப் பற்றியன. முதலிலுள்ள
உம்மைகள் நான்கும், எச்சப்பொருளன. ஐந்தாவது உம்மை - முற்று. ஆறாவது
உம்மை- உயர்வுசிறப்பு.                                     (772)

52.- மேகங்கள் செருக்கி மழைபொழிதல்.

மூண்டவெங்கனலையுருமின்வெங்கனலான் முருக்கியெங்கால்கை
                                       யானெருக்கி,
ஆண்டவன்களிற்றின்கரநிகர்தாரை யருவியின்கணங்
                                     களாலவித்துப்,
பாண்டவன்பகழிதொடுக்கினுங்கண்ணன் பருப்பத
                                 மெடுக்கினமெங்கள்,
காண்டவம்புரத்துமென்றுகொண்டிழிந்து பொழிந்தன
                                   கணம்படுகனங்கள்.

     (இ-ள்.) கணம் படு கனங்கள் - கூட்டமாகக் கூடிய மேகங்களானவை,- 'மூண்ட
வெம் கனலை - மூண்டெரிகிற வெவ்விய அக்கினயை, உருமின் வெம் கனலால்
முருக்கி- (எங்களது) இடியிலுண்டாகும் வெவ்விய அக்கினியால் அழித்து, எம்கால்
கையால் நெருக்கி - எங்கள் கால்களாலும் கைகளாலும் அடர்த்து, ஆண்டவன்
களிற்றின் கரம் நிகர் தாரை அருவியின் கணங்களால் அவித்து - (எங்கள்)
தலைவனான இந்திரனுடைய (ஐராவத) யானையின் துதிக்கையை யொத்த
பெருந்தாரையாகிய மழைநீரருவியின் தொகுதிகளால் தணித்து, பாண்டவன் பகழி
தொடுக்கின்உம் கண்ணன் பருப்பதம் எடுக்கின்உம் எங்கள் காண்டவம் புரத்தும் -
பாண்டு குமாரனான அருச்சுனன் அம்புகளைத் தொடுத்துத் தடுத்தாலும் கிருஷ்ணன்
(முன்புகோவர்த்தனமலையைஎடுத்ததுபோல) மலையை யெடுத்து (க் குடையாகப்
பிடித்து)த் தடுத்தாலும் (தடுக்கமாட்டாதபடி முனைந்து) எங்களுடைய
காண்டவவனத்தைப் பாதுகாப்போம்,' என்று கொண்டு - என்று உட்கொண்டு,
இழிந்து -(செருக்கோடு) இறங்கி, பொழிந்தன - மழைபொழிந்தன;

     "உஷ்ணம் உஷ்ணேந ஸாம்யதி= வெப்பம் வெப்பத்தால் தணிகிறது"
'என்ற நியாயத்தால், மூண்ட வெங்கனலை யுருமின் வெங்கனலான் முருக்கி'
எனப்பட்டது. 'கால்கையால்' என்பது - மேல்நோக்கில் தொடர்மொழியாகக்
கால்கைகளால் என்று பொருள் பட்டாலும், உள்நோக்கில் தனிமொழியாக
'காலுதலால்' என்று பொருள்படும்; கால்கை - கைவிகுதிபெற்ற தொழிற்பெயர்:
பொழிதலென்றுபொருள். தமதுதலைவனாகிய இந்திரனாற் காக்கப்படும்
உரிமையைப்பாராட்டி, 'எங்கள்காண்டவம்' என்றது.

53.- மேகங்கள் சொரிந்த மழைஅவ்வளவும் கனலை
அவிக்கமாட்டாமை.

காலைவாயருக்கன்பனிநுகர்ந்தென்னக்கட்டறக்காண்டவமென்னும்,
பாலைவாயுள்ளசராசரமனைத்து நுகர்தலிற்பைம்புனல்வேட்