சோனை ஆகுதி அனைத்துஉம் - விடாப் பெருமழையாகிய ஆகுதிகளையெல்லாம், (அக்கினிதேவன்), நெய்கடல் சொரிந்தது என்னும் ஆறு அருந்தி - நெய்க்கடல் சொரியப் பட்டாற்போல உண்டு, நீடு வான் முகடு உற நிமிர்ந்தான் - பெரிய ஆகாயமுகட்டை யளாவ ஓங்கியெரிந்தான்; (எ -று.) கடல்களை நெய்ப்பாத்திரமாகவும், அவற்றின் நீர்முதலியவற்றை அப்பாத்திரத்தில்நிறைந்த நெய்யாகவும், கடல்களினின்று நீர்முதலியவற்றைக்கொண்ட மேகத்தை அப்பாத்திரத்தினின்றுநெய்யை முகக்குஞ் சுருவை யெனுங்கருவியாகவும், மேகம் நெருப்பில்மழைத் தாரைசொரிதலைச் சுருவைநெருப்பில் நெய்த்தாரைசொரிதலாகவும் இந்திரனைஓமஞ்செய்பவனாகவும் உருவகப்படுத்தினார். மேகம் எதிர்த்து மழைசொரிந்தவளவில் அக்கினிகோபங்கொண்டுமிக்கெரிதல், நெய் சொரிந்தவளவில் நெருப்பு மிக்கெரிதலாகக் கொள்ளப்பட்டது: உருவகவணி. 'பெருநெருப்புக்குஈரமில்லை' என்றபடி அம்மழை அந்நெருப்பைச்சிறிது தணிக்கவும்மாட்டிற்றில்லையென்பது, இப்பாட்டின் தாற்பரியம். மகவாந் - ஐசுவரியங்களை யுடையவன்; (மகம் - ஐசுவரியம்.) இச்சொல். வேள்விசெய்பவனையுங்குறிக்கும். மகவானாகியமகவான் என, இங்கு 'மகவான்' என்றது - சிலேடையுருவகம். 'தொக்கடலுருமோடு' என்றதற்குஏற்ப, உபமேயத்தில்வேதமந்திர கோஷத்தோடு எனக்கொள்க; இது ஏகதேசவுருவகம். கறுப்போடுநோக்க வெளுப்புக்கு எவ்வளவு வேறுபாடு உண்டோ, அவ்வளவு வேறுபாடு இந்திரனது கருநிறத்தோடுநோக்கக் கடலினது கருநிறத்துக்குஉள்ள தென்பது, 'மைக்கடல் வெளுக்கக் கறுத்த மெய்' என்றதன் கருத்து; பிரசித்தமான கடலின்கருமையினும் மிக்க கருமையையுடைய மெய்யென்க. (775) 55.- அருச்சுனன் அம்பெய்து மழையைத்தடுத்துச் சரக்கூடங்கட்டுதல். தொழுதகுவிசயன்றாலுவேழுடையோன் சுடர்முடிநனைந்திடுவதன் முன், எழுமுகிலினமும்பொழிதருமாரி யாவையுமேவினால்விலக்கி, முழுதுலகமுந்தன்னிடத்தடக்கியவான் முகடுறமுறைமுறையடுக்கிக், குழுமுவெங்கணையாற்கனற்கடவுளுக்குக் கொற்றவான்கவிகையுங் கொடுத்தான். |
(இ-ள்.) தொழு தகு விசயன் - (யாவராலும்) வணங்கத்தக்க [மிக்கசிறப்பையுடைய] அருச்சுனனானவன், தாலுஏழுஉடையோன் சுடர் முடி நனைந்திடுவதன் முன் - ஏழுநாக்குக்களை யுடையவனான அக்கினியினதுஒளியையுடைய முடி நனைதற்குமுன்னே, எழுமுகில் இனம்உம் பொழிதரு மாரி யாவைஉம் ஏவினால் விலக்கி - ஏழுவகை முகிற்சாதிகளுஞ் சாரிகிறமழைகளையெல்லாம் (தனது) அம்புகளால் தடுத்து,- முழுது உலகம்உம் தன் இடத்துஅடக்கிய வான் முகடு உற - பூலோகம்ழுவதையுந் தன்கீழ் அடக்கிய ஆகாயத்தினதுமேன்முகட்டை யளாவ, குழுமு வெம் கணையால் முறை முறை அடுக்கி - கூட்டமானகொடிய அம்புகளை ஒழுங்காக அமையும்படிசெலுத்தி, (அந்தஅம்புகளின் பரப்பினால்),கனல்கடவுளுக்கு |