பக்கம் எண் :

474பாரதம்ஆதி பருவம்

     (இ-ள்.) என்று கொண்டு உரைத்த மொழி-என்று (அசரீரி) சொன்ன வார்த்தை,
செவி பட்ட எல்லையின்-காதிற் பட்டவளவில்,-சுரபதி-தேவராசனான இந்திரன்,
துன்றுதன் சேனை சுர கணம் சூழ - நெருங்கிய தனது சேனையான தேவர்கள்
கூட்டம்(தன்னைச்) சூழ்ந்து வர, இரவி முன் இருள் போல்-சூரியன் முன்னிலையில்
இருள்(ஒழிதல்) போல, துறக்கம் அது அடைந்தான்-(அருச்சுன னெதிரில்நில்லாமல்
தனது)சுவர்க்கலோகத்தையடைந்தான்; (பின்பு), அருச்சுனன்-, வென்று- (இவ்வாறு
தேவர்களைச்) சயித்து, வெம் களம் கொண்டு-கொடிய போர்க்களத்தைக் கொண்டு,
தனது வெற்றி கொள் சங்கம்உம் குறித்தான்-ஜயத்தைக்கொண்ட
தன்னுடையசங்கத்தையும் ஊதிமுழக்கினான்; செம் திருமால்-செந்நிறமுள்ள
இலக்குமிக்குக்கணவனான கண்ணபிரான், அன்று அருச்சுனன் பொருத ஆண்மை
கண்டு அதிசயித்தனன் - அன்றையதினத்தில் அருச்சுனன் போர்த்திறமையைப்
பார்த்துஆச்சரியப்பட்டான்; (எ-று.)

     பகைவரை வென்றொழித்தபின்பு தமது பெருமிதந்தோன்றப்
போர்க்களங்கொண்டு தமதுவெற்றிக்கு அறிகுறியாகத் தம்சங்கத்தை முழுக்குதல்,
வீரரியல்பு.                                                    (793)

73.- தேவர்களும் இந்திரனும் முனிவர்களும் அருச்சுனனைப்
புகழ்தல்.

வடமதுரையினுந்தென்மதுரையினும்மதிகுல நிருபர்கன்னியரைக்
கடிமணம்புரிந்தோன்வின்மையின்வன்மை கண்ணுறக்கண்டவானவ[ரும்
புடவியிலொருவரொடுமினிப்பூசல்பொரேனெனப் போனவாசவனும்
முடிசடைமவுலிநாரதன்முதலா முனிவருமுடிவறப்புகழ்ந்தார்.

     (இ-ள்.) வடமதுரையின்உம் தென்மதுரையின்உம் - வடக்கிலுள்ள
மதுராபுரியிலும்தெற்கிலுள்ள மதுராபுரியிலும், மதிகுலம் நிருபர் கன்னியரை -
சந்திரகுலத்துஇராசகன்னிய ரிருவரை, கடிமணம் புரிந்தோன் - சிறப்பாக
விவாகஞ்செய்துகொண்டவனான அருச்சுனனுடைய, வின்மையின் வன்மை -
விற்றொழிலின் வலிமையை, கண் உற கண்ட - கண்ணெதிரிலே பொருந்தக்கண்ட,
வானவர்உம்-தேவர்களும், புடவியில் ஒருவரொடுஉம் இனி பூசல் பொரேன் என
போன வாசவன்உம் - பூமியில் ஒருவரோடும் இனிப் போர்செய்யயமாட்டே னென்று
சென்ற இந்திரனும், முடி சடை மவுலி நாரதன் முதல்ஆம் முனிவர்உம் - முடித்த
சடைமுடியையுடைய நாரதன் முதலான இருடிகளும், முடிவு அற புகழ்ந்தார் -
(அருச்சுனனை) அளவின்றிப் புகழ்ந்தார்கள்; ( எ-று.)

     மதிகுலநிருபர் கன்னியர் - வசுதேவர்மகளான சுபத்திரையும்,
சித்திரவாகனபாண்டியன் மகளான சித்திராங்கதையும், முதலில் மதுவென்னும்
அசுரன்கைக்கொண்டிருந்தமை பற்றியும், கண்ணுக்கு இனிமையானதுபற்றியும்,
பின்புமதுவென்னுஞ் சந்திரகுலத்து அரசனாற் சீர்திருத்தி யாளப்பட்டமை பற்றியும்,
*வடமதுரைக்கு 'மதுரா' என்று பெயர்; வடசொல்; இது, வடநாட்டில் யமுநாநதிதீரத்தி
லுள்ளது. + தென்மதுரைக்கு அப்பெயர்


Muttra                                                     +Mathurai.