முற்றிய சந்தனு தன்மனைவியையும், குமாரன் இப்போது எவ்வாறு வளர்ந்துள்ளான்என்பதையும் காணக்கருதி, மீண்டும் கங்கைக் கரையை அடைந்தன னென்க. 'கங்கைக்கரையைச் சேர்ந்தால் ஒருகால் கங்கையாளையும் வளர்ந்த தன்புதல்வனையும் காண நேருங்கொல்லோ? என்று அங்கு மன்னவன் சென்றானென்றவாறு. சானவி-ஜாஹ்நவீயென்ற வடசொல்லின் திரிபு: பகீரதசக்கரவர்த்தியின்பின்னேசென்ற கங்கை வழியிடையே ஜஹ்நுமுனிவரின் வேள்வியை யழிக்க,அவர்பருகி அந்தப்பகீரதனது வேண்டுகோளினால் தமது காதியின்வழியாகவிட்டதனால், கங்கைக்குச் சானவியென்று பெயர். அமைச்சர் - அமாத்யரென்றவடசொல்லின் திரிபென்பர். (88) 81.- முன்பு கங்கையாளைக் கண்ட சோலைமுதலியவற்றைக் கண்டு மன்னவன் மனமுருகுதல். பண்டுதானவளையெதிர்ப்படுங்கனகம் பைங்கொடிப்பந்தர் வானிழலும், வண்டறாநறைப்பூஞ்சோலையுந்தடமு மருங்கலைமலயமாருதமும், புண்டரீகமுஞ்செங்காவியுங்கமழும் புளினமும்புளினமென்றுறையும், கண்டுகாரிகையையிம்மையிலின்னுங் காண்குமோவெனமனங்கசிந்தான். |
(இ - ள்.) பண்டு - முன்பு, தான்-, அவளை - அந்தக் கங்கையாளை, எதிர்ப்படும் - எதிர்ப்பட்ட, கனகம் பைங்கொடி பந்தர் வான் நிழல் உம் - பொன்போலருமையான பசிய பூங்கொடிப் பந்தரின் சிறந்த நிழலும், வண்டு அறா நறைபூஞ் சோலைஉம் - வண்டுகள் நீங்காத வாசனையுள்ள பூஞ்சோலையும், தடம்உம் -கங்கைக்கரையும், மருங்கு அலை மலயமாருதம்உம் பக்கத்திலே வீசுகின்ற தென்றற்காற்றும், புண்டரீகம்உம் செங் காவிஉம் கமழும் புளினம்உம் - தாமரையும்செந்நிறக்காவியும் நறுமணம்வீசுகின்ற மணற்குன்றும், புள் இனம் மெல் துறைஉம் -பறவைக்கூட்டங்கள் தங்குகின்ற மெல்லிய நீர்த்துறையும், கண்டு-, காரிகையை -பெண்ணை, இம்மையில் - இப்பிறப்பில், இன்னும் காண்கும் ஓ என - இன்னும்காண்போமா! என்று, மனம் கசிந்தான் - மனமுருகினான்; (எ-று.) இதனால், மன்னவன் வேறொன்றிலும் மனஞ்செல்லாது கங்கையாளிடத்துத்தானேமனம்பற்றியிருந்தமை வெளியாம். மலயமாருதம் - மலய மலையினின்று வீசுங்காற்று:தென்றல். 'எதிர்ப்படும்' என்றது - இயல்பினால்வந்த காலவழுவமைதி. செங்காவி -செங்கழு நீர் மலர். (89) 82.- சந்தனு அங்குமனம்வாடி நின்றபோது, அவன்முன்னே கங்கையினின்று ஒருவீரன் வருதல். பிரிந்தநாளெண்ணிப்பகீரதிப்பெருக்கைப் பேதுறுங்குறிப்பொடு நோக்கிக், கரிந்தபாதவம் போனின்றவப்பொழுதிற் கால்பொரக்குனித் தகார்முகமும், தெரிந்தமேன்மேலுந்தொடுத்தசாயகமுஞ்சிலம்பெனத்திரண்ட தோளிணையும், விரிந்தநூன்மார்புமாகிமுன்னடந்தான் விழிகளித்திடவொருவீரன். |
(இ - ள்.) பிரிந்த நாள் எண்ணி - (கங்கையாளைப்) பிரிந்த நாளைக் கணக்கிட்டு,- பகீரதி பெருக்கை - கங்கையின் வெள்ளத்தை, பேது |