பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்57

93.- மன்னவனேவலின்படி தேர்ப்பாகன் அம்மன்னவன்
கருத்தை வலைஞனிடம் தெரிவித்தல்.

பாகனையரசன்குறிப்பினாலேவப் பாகனும்பரதவர்பதியை
ஓகையோடிருத்திநின்னுழைவதுவை யுலகுடைநாயகனயந்தான்
தோகைசெய்தவமோநின்பெருந்தவமோ தொல்குலத்தவர்புரிதவமோ
ஆகுமிவ்வாழ்வென்றுரைத்தனனவனு மாகுமாறவனுடனுரைப்பான்.

     (இ -ள்.) அரசன் - சந்தனு, பாகனை - (தன்னுடைய) தேர்ப்பாகனை,
குறிப்பினால் ஏவ - சாடைகாட்டி (மணம்பேசுமாறு) தூண்ட, பாகனும்-, பரதவர்
பதியை- வலைஞர் தலைவனை, ஓகையோடு - மிக்க மகிழ்ச்சியோடு, இருத்தி -
இருக்கச்செய்து,- 'உலகு உடைநாயகன் - உலகுக்குத் தலைவனாகிய சந்தனுராசன்,
நின்னுழை - உன்னிடத்து, வதுவைநயந்தான் - மணத்தை விரும்பினான்
[உன்மகளைமணந்துகொள்ளுமாறு எம்முடைய சந்தனு மன்னவன்
விரும்பியுள்ளான்]: இ வாழ்வு - இங்கனம் (அரசன் வதுவைவிரும்பிய) இந்த
வாழ்ச்சி, தோகை செய்தவம் ஓ - (உன்னுடைய மகளான) மயில்போலுஞ்
சாயலையுடையாள் செய்துள்ளதவப்பயனாலோ, நின் பெருந்தவம் ஓ - நீ
செய்துள்ள மிக்கதவத்தினாலோ, தொல்குலத்தவர் புரி தவம் ஓ - பழமையான
பரதகுலத்தவர்செய்த தவத்தினாலோ, ஆகும் -உண்டானதாகும், ' என்று-,
உரைத்தனன் - சொன்னான்: அவன்உம் - அந்தப்பரதவர்பதியும், ஆகும் ஆறு -
(அந்த அரசன்நினைவு) முற்றுதற்குரியவகையை, அவனுடன்- அந்தப்பாகனோடு,
உரைப்பான் - சொல்பவனானான்;

     பரதவர்பதிகூறுவதை மேற்செய்யுளிற் காண்க. மன்னவன் பரதவர்பதியிடத்து
மகளை நேரேகேட்கநாணிப் பாகன் மூலமாகக் கேட்டானென்க.            (101)

94.- என்மகளிடம்பிறக்கும் புத்திரனுக்கு அரசுஅளிப்பதானால் வதுவைக்கு
இசைவேனென்று அந்தப்பரதவர்பதி குறிப்பினாலுணர்த்தல்.

பூருவின்மரபிற்பிறந்தகோமகனென் புன்குலமகள்குயம்பொருந்தல்,
மேருவுமணுவுநிறுக்குமாறொக்கு மேலினியிவைபுகன்றென்கொல்,
பாருவகையினாலாளுதற்கிருந்தான் பகீரதிமகனிவள்பயந்த,
சீருடைமகன்மற்றென்செய்வானிசைமின் செய்கைதான்றிருவுளங்
                                           குறித்தே.

இரண்டுகவிகள் - ஒருதொடர்.

     (இ -ள்.) ' பூருவின் மரபில் - பூருவின்வமிசத்திலே, பிறந்த - தோன்றிய,
கோமகன் - இராசகுமாரன், என் புன்குலம் மகள் குயம் பொருந்தல் -
என்னுடையதாழ்மையான குலத்திற்பிறந்தபெண்ணின் தனங்களைத் தழுவுதல்
[என் பெண்ணைமணந்துகொள்ளுதல்], மேருஉம் அணுஉம் நிறுக்கும்
ஆறுஒக்கும் - மேருவை ஒருதட்டிலும் அணுவை மற்றொருதட்டிலும் வைத்து
நிறுக்கின்ற தன்மைக்குச்சமானமாகும்: மேல் இனி இவை புகன்று என் கொல் -
இப்போது இவற்றைப்பற்றிப்பேசி என்னபயன்? பகீரதி மகன் - கங்காதேவியின்
புத்திரனான தேவவிரதன், பார் -(சந்தனு