பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்59

பங்கயானனந்தான்முறைமுறைகுறையும் பான்மதியெனவழகழிந்த,
சங்கையான்மைந்தன்வினவலுநிகழ்ந்த தன்மையைச்சாரதிபுகன்றான்.

     (இ-ள்.) கங்கையாளிடத்தில்-, ஆதரம் - விருப்பம், மெலிந்த - குறைவுபட்ட,
காலையில் - சமயத்திலே, களிந்தவெற்பு அளித்த மங்கை ஆம் என்ன நின்ற பூங்
கொடிமேல் - களிந்தமலைபெற்ற யமுனாநதியின் பெண்தெய்வமாவாள்போலும்
என்றுகருதுமாறு (யமுனைக்கரையிலிருந்த) பூங்கொடிபோன்ற
யோசனகந்தியினிடத்து,வைத்த-, பேர் ஆதரம் - மிக்கவிருப்பம், மலிய - மிக,-
பங்கய ஆனனம் -தாமரைமலர்போன்ற (அரசன்) முகம், முறை முறை குறையும்
பால் மதி என அழகுஅழிந்த - நாடோறும் முறையே கலை தேயப்பெற்ற
வெண்மை நிறமுள்ளசந்திரன்போல அழகுகெட்டதனாலான, சங்கையால் -
சங்கையினால், மைந்தன் -குமாரனான தேவவிரதன், வினவலும் - ( 'இங்ஙனம்
என் தந்தை முகம் அழகுகெடக்காரணம் யாது?' என்று) வினவவே, சாரதி-,
நிகழ்ந்த தன்மையை-, புகன்றான் -கூறினான்; (எ -று.)

     யமுனைக்கரையில் கருநிறமுடையவளாயிருந்த யோசனகந்தி யமுனையின்
பெண்தெய்வமேபோல்வ ளென்று தற்குறிப்பேற்றவணி படக் கூறினார். காலையில்
வேலையிற் பிறந்த என்ற பிரதிபேதம்.                               (104)

97.- அறிந்த கங்கைமகன், வலைஞர்பதியிடஞ்சென்று,
  அரசைத் தன் இளையதாயின்புத்திரனுக்கு அளிப்பதாக
உறுதிகூறி மணம்நேர வேண்டுதல்.

கேட்டவக்கணத்திற்கடற்புறத்தரசைக் கேண்மையோடடைந்
                                          திளவரசும்,
பாட்டனீயெனக்குப்பெற்றதாய்தானும் பகீரதியல்லணின்மகளே,
நாட்டமின்றுனக்கியாததுநிலையிந்த ஞாலமுமெம்பியர்ஞாலம்,
நீட்டமற்றின்றேதிருமணநேர்வாய் நீதிகூர்நிருபனுக்கென்றான்.

     (இ-ள்.) கேட்ட-, அ கணத்தில் - அந்த க்ஷணத்தில் தானே, இள
அரசுஉம் -இளவரசனான வீடுமனும்,- கடல்புறத்துஅரசை - கடலைச்சார்ந்த
நெய்தல்நிலத்துக்குஉரியவனான வலைஞாபதியை. அடைந்து - சேர்ந்து,
கேண்மையோடு -உறவுமுறைபாராட்டுதலுடனே, 'நீ எனக்கு பாட்டன்-: (எனக்கு),
பெற்ற தாய்தான் உம்-, பகீரதி அல்லள் - கங்காதேவியல்லள்: நின் மகள் ஏ -
உன்னுடைய புதல்வியே:இன்று - இப்போது, உனக்கு -, நாட்டம் யாது -
விருப்பம் எதன்மீதோ, அது-, நிலை- நிச்சயமாகப்பெறக்கூடிய பொருளேயாகும்:
இந்த ஞாலம்உம் - இந்தப்பூமியும், எம்பியர் ஞாலம் - என்னுடைய தம்பிமார்
ஆட்சிபுரிதற்கு உரிய பூமியேயாகும்: நீட்டம்அற்று - தாமதித்தலில்லாமல், இன்று
ஏ - இப்போதே, நீதி கூர் நிருபனுக்கு -நீதிமுறைமிக்க அரசனாகிய
என்தந்தைக்கு, திருமணம் நேர்வாய்- (உன்மகளை) மணஞ்செய்துகொடுத்தற்கு
இசைவாய்,' என்றான்-; (எ-று.)

     கேண்மையோடு என்றான் என இயையும். பாட்டனீயெனக்கு முதலியவற்றில்,
கேண்மைதோன்றுதல் காண்க.                                    (105)

     இங்ஙன் தேவவிரதன் கூறியதைக்கேட்ட வலைஞர்பதி வியப்புக் கொண்டு
மீண்டும் கங்கையாள் மகனைநோக்கி 'செம்மலே!  நீ உன் தந்தையினிடத்து
உறுதியானஅன்பினால்இராச்சியத்தைவிட்டிட்