பக்கம் எண் :

64பாரதம்ஆதி பருவம்

     (இ - ள்.) வாசவன் அளித்த விமானமீது - இந்திரன் தந்த
விமானத்தின்மேல், சேதிமா மரபோன் வசு எனும்ஒருவன் - சேதி வமிசத்தில்
தோன்றியவனான வசுவென்றஒருவன், கேசரன் என - ஆகாசத்திற் சஞ்சரிக்கின்ற
தேவசாதியான்போல, போம் -செல்லுகின்ற, விசும்பிடை - ஆகாயத்தினிடத்தே,
மனையாள் கிரிகையை நினைந்து -மனையாளாகிய கிரிகையென்பாளை எண்ணி,
உடல் கெழுமி - உடம்பிற்காமவிகாரங்கொண்டு, நேசமொடு - அன்புடனே,
இதயம் உருகும்அ கணத்தில் - நெஞ்சம் உருகுகின்ற அந்த க்ஷனத்திலே,
நினைவு-, அற -இன்றிக்கேயிருக்க, [தன்னடைவே], விழுந்த-, வீரியம் -
சுக்கிலமானது, மேய் தேசவன்- தேஜோமயமான மேனியைப் படைத்த சூரியன்,
அளித்த - தந்த, நதியிடை -யமுனாநதியிலே, ஒரு பால் - ஒருபுறத்திலே, திரள்
தரளம் என - திரண்டவடிவுள்ளமுத்துப் போல, சிந்தியது-; (எ-று.)

     சேதிபனான வசுவென்பவன் நோன்பால் வானத்திற்செல்ல வல்ல
விமானத்தைத்தேவேந்திரனருளாற் பெற்றான்: அன்னான் வானத்திற்
சஞ்சரிக்கையில் ஒருகால்தன்மனைவியை நினைந்து காமவிகாரங்கொண்டதனாற்
சுக்கிலம்தோன்ற, அதனைஒருமரத்தின் இலையிலேந்தி ஒரு சியேனமென்னும்
பறவையை யழைத்துக் கொடுத்துக்கிரிகையினிடத்துச் சேர்ப்பிக்குமாறு
சொன்னான்: சொல்லவும், வேறொருசியேனப்பறவை அதனை இரையென்று
கருதிப்பொர, அந்தச்சுக்கிலம் யமுனைநதியின்புனலில் முத்தின் திரள் போல
விழுந்திட்டதென விளக்கங் காண்க.மற்றொருமனையாள் கிரீடையையென்றும்
பாடம்.                                                    (112)
 

105.ஒருமுனிமுனிவாலரமகளொருத்தி மீனமாயுற்பவித்துழல்வாள்,
இரையெனவதனைவிழுங்குமுன்கருக்கொண்டீன்முதிர்காலை
                                      யிலதனைப்,
பரதவர்வலையினகப்படுத்தரியப் பாலகனொருவனுமிவளும்,
இருவருமிந்தமீன்வயிற்றிருந்தார் யமுனையும்யமனுநேரெனவே.

     (இ-ள்.) ஒருமுனிமுனிவால் - ஒருமுனிவனுடைய வெகுளியினால், அரமகள்
ஒருத்தி - ஒருதேவமாது, மீனம் ஆய் உற்பவித்து உழல்வாள் - மீனாகித்தோன்றி
யலைபவளாய்,- அதனை - (யமுனையின் ஒருபாற் சிந்திய) அந்த (வசுவின்)
வீரியத்தை, இரை என - (தனக்கு உரிய) உணவென்று, விழுங்குமுன் -
உட்கொள்வதற்குமுன்னமே [உட்கொண்டவுடனே யென்றபடி], கரு கொண்டு -
கருப்பமடைந்து, ஈன்முதிர் காலையில் - (அந்தக்கருப்பம்) ஈனுமாறு முதிர்ச்சி
யடைந்ததருணத்தில்,- அதனை - கருக்கொண்ட அந்த மீனை, பரதவர் -
வலைஞர், வலையின்அகப்படுத்து - வலையில் அகப்படுமாறு செய்து, அரிய -
அரிந்துபார்க்க, - பாலகன்ஒருவன்உம் - ஒரு குமாரனும், இவள் உம் -
இந்தக்குமாரியும், இருவர் உம் -(ஆகிய) இருவர்களும், யமுனை உம் யமன் உம்
நேர் என-, இந்த மீன் வயிற்றுஇருந்தார்-:

     சூரியபுத்திரியாகிய யமுனைநதியின் மீன்வயிற்றிலே தோன்றிய குமார
குமாரிகட்கு, சூரியனுக்குப் புதல்வனும் புதல்வியுமான யமனையும் யமுனையையும்
உவமைகூறினார். ப்ருஹ்மசாபத்தினால் அத்திரிகையென்ற தேவமாது
மீனமாயினாளென்று கூறப்படும்: ஆகவே, ஒருமுனி யென்றது - பிரமதேவனைக்
காட்டும்.                                                      (113)