பக்கம் எண் :

66பாரதம்ஆதி பருவம்

இது முதல் இருபத்துநான்கு கவிகள் - பெரும்பாலும்முதற்சீர் மாச்சீரும்,
மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.                  (115)

108-கவிக்கூற்று.

காளிவந்து கலந்தனள் கங்கைவேய்த்
தோளியும்புயந் தோய்ந்தனண்முன்னமே
வாளிவெம்பரி மாநெடுந்தேருடை
மீளிதானும் விடையவனாதலால்.

     (இ-ள்.) வாளி வெம் பரி மா நெடுந்தேர் உடை மீளி தான்உம் -
நேரேசெல்லும் கதி வாய்ந்த வெவ்விய குதிரை பூண்ட நெடிய தேரையுடைய
வீரனாகிய சந்தனுவும்,- விடையவன் ஆதலால்-, காளி வந்து கலந்தனள்-; கங்கை
வேய் தோளிஉம் - கங்கையென்ற மூங்கில்போலுந் தோளையுடையாளும்,
முன்னமே,புயம்தோய்ந்தனள் - (அந்தமன்னவனை) மணந்தாள்; (எ -று.)

     விடையவன் - விடையைவாகனமாகவுடையவ னென்றும், விடை
போல்பவனென்றும்சிலேடைவகையால் இருபொருள்படும். விருஷப வாகனனாகிய
சிவபிரானைக் காளி மணத்தலும், கங்காதேவி கூடியிருத்தலும் இயல்பேயென்ற
கருத்துஇதில்விளங்குதல் காண்க. "ஸ்வீக் ருத்யகாளீம் கிரிஜாமிவேச:" என்றது,
பாலபாரதம்.காளியென்பது, யோஜநகந்திக்கு வழங்கும் பெயர்; இச்சொல்
பார்வதியினமிசமானபத்திரகாளியையும் காட்டும். விடையவன் என்பது,
இடபக்குறியையுடைய வருணனதுஅமிசமானவன் என்று சந்தனுவைக்
காட்டுமென்றாரு முளர்.(116)

109.- சந்தனு காளியின் இன்பத்தில் மகிழ்தல்.

கங்கையின்கரைக் கண்ணுறுகாரிகை
கொங்கையின்பங் குலைந்தபின்மற்றவள்
எங்கையென்ன யமுனையின்பால்வரும்
மங்கையின்ப மகிழ்ந்தனன்மன்னனே.

     (இ -ள்.) கங்கையின் கரை - கங்கையின்கரையிலே, கண்ணுறு-
காணப்பெற்ற,காரிகை - கங்கையின் பெண்தெய்வத்தின், கொங்கை இன்பம்-
தனங்களைத்தழுவுவதனாலான இன்பம், குலைந்தபின் - அழிவுற்ற பின்பு,-
மற்றவள் எங்கை என்ன- அந்தக்கங்காதேவியின் தங்கையென்னுமாறு,
யமுனையின்பால் வரும் மங்கை -யமுனாநதியின் கரையிலே வந்த பெண்ணின்,
இன்பம் - இன்பத்தை, மன்னன் -சந்தனுராசன், மகிழ்ந்தனன்-; (எ-று.)    (117)

110.- இரண்டுகவிகள் - குளகம்: வீடுமன் அரசமுறையை நடாத்த,
மன்னவன் அந்தக்காளியினிடத்துப் புதல்வரைப்
பெறுதலைக் கூறும்.

வீடுமன்கழல் வேந்தர்வணங்கிட
நாடுநன்னெறி நாளுநடத்திட
நீடுமன்னனு நேரிழைமேன்மலர்த்
தோடுமன்னு சுரும்பெனவீழவே.