பக்கம் எண் :

84பாரதம்ஆதி பருவம்

அழகையும், வரிகொள் கூர் அம்பை மானும் விழி - செவ்வரிபரந்த கூரிய
அம்பையொத்த கண்களையுமுடையவளான, அம்பை என்பவளும்-, அரிய
மாதவம் -அருமையான பெருந்தவத்தை, இயற்றினாள் - செய்தாள்; (எ-று.)

     விஹங்கராஜன் - வடசொற்றொடர். வம்புஎன்பது வெவ்வேறு பொருளில்
வந்தது- சொற்பின்வருநிலை. அரவம்வீடுமனுக்கும், விகங்கராசன் அம்பைக்கும்
உவமை.தும்பை - பொரச்செல்வோர் தரிக்கும் மாலை.                (152)

145.- அம்பையின் பெருந்தவம்.

தாளிரண்டினிலொர்தாண்மடக்கியொரு தாளில்வைத்தமை
                                       சமைத்தபொன்,
தோளிரண்டினையுமீதெடுத்துநனி தொழுதியக்கி துணையடியிலே,
வாளிரண்டனையவிழிமலர்த்திநிறை வாவிநீரினிடை வானுளோர்,
நாளிரண்டதனொடையிரண்டுமொரு  நாளெனும்படி நடக்கவே.

இரண்டுகவிகள் - ஒருதொடர்.

     (இ - ள்.) தாள் இரண்டினில் - இரண்டுபாதங்களுள், ஒர் தாள் மடக்கி -
ஒருதாளைமடக்கி, ஒரு தாளில் வைத்து - மற்றொருதாளின் மேல்
வைத்துக்கொண்டு,அமை சமைத்த பொன் தோள் இரண்டினைஉம் -
மூங்கிலையொத்த அழகியதோள்கள்இரண்டையும், மீது எடுத்து -
மேலேதூக்கியவண்ணம். நனிதொழுது- நன்குகுவித்து,இயக்கி துணை அடியிலே -
தருமதேவதைபோன்ற தன் இரண்டு பாதங்களிலே, வாள்இரண்டு அனைய விழி
மலர்த்தி - இரண்டு வாட்படை போன்ற (தன்) இரண்டுகண்களையும் மலரவைத்து,
நிறை வாவிநீரின் இடை - நிறைந்துள்ள வாவியின் நீரிலே,வான் உளோர்
இரண்டு நாள் அதனொடு ஐ இரண்டுஉம் - தேவர்களின்பன்னிரண்டுநாள்கள்
[பன்னிரண்டுவருஷங்கள்], ஒருநாள் எனும்படி நடக்க -ஒருநாள்போலக் கழிய,-
(எ-று.)- "அருந்தவ முயன்றபின்" (146) என்றுதொடரும்.(152)

     அம்பை பெருந்தவமுயன்ற தன்மை கூறியது, இது. மானிடவர்க்கு
ஒருவருடம்தேவர்கட்கு ஒருநாளெனப்படும். இயக்கி-ஆகுபெயர். இயக்கி-
தருமதேவதை அல்லதுகாளி என்பாருமுளர். இச்செய்யுளிலுள்ள
வினையெச்சங்களுக்கெல்லாம் அடுத்தசெய்யுளில் அம்பையைக் குறிக்குஞ்
சொற்றொடர் எழுவாயாகும்.                                    (153)

146.- அம்பை சிகண்டியாதல்.

முயலிலாமதிமுகத்தினாளொருவர் முயலருந்தவமுயன்றபின்
புயலிலாதமினலொத்தமெய்யிலொளி புரியியக்கிதனதருளினான்
மயிலனாடனதுவடிவகற்றியிகல் யாகசேனனதுவயினிடைச்
செயலிலாறுமுகனிகரெனத்தகுசி கண்டியாயினள்சிறக்கவே.

     (இ-ள்.) ஒருவர் முயல் அருந் தவம் - ஒருத்தர் முயன்று செய்வதற்கு
அருமையான பெருந்தவத்தை, முயன்றபின் - முயற்சியோடு செய்தபின்பு, - முயல்
இலா மதிமுகத்தினாள் - முயற்கறை யில்லாத சந்திரன் போன்ற முகத்தையுடைய,
மயில் அனாள் - மயில்