பக்கம் எண் :

சம்பவச் சருக்கம்99

மீன் என தகும் கற்பாள் - (வானத்து) வடக்கின்கண் நட்சத்திர வடிவமாக (க்
கணவனைப் பிரியாது) நிற்கும் அருந்ததியைப்போன்ற கற்பினையுடையளான
அந்தக்காந்தாரி, உளம் மகிழ்ந்தனள்-;

      'மணநேர்ந்தான்' என்று பாடமாயின் காந்தாரபதி என எழுவாய் வருவிக்க.
பெருங்கற்பினளாதலால், கண்ணிலானென்று சொல்லியும் உளம் வருந்தாது  
மகிழ்ந்தனள் காந்தாரியென்க.                                     (178)

24.- இனி யானொருவரையும் கண்ணாற்காணேனென்று
காந்தாரி தன் கண்ணைப் பட்டத்தாற் புதைக்க, தந்தை
முதலியோர் அவளைத் திருதராட்டிரனுக்கு மணஞ்செய்வித்தல்.

இமைத்தகண்ணினைமலர்ந்தினிநோக்கலேன் யானொருவரையென்று,
சமைத்தபட்டமொன்றினிற்பொதிபெதும்பையைத் தந்தை
                                       யுந்தனயோரும்,  
அமைத்தருங்குலமுனிவருமறைமுறையருங்கடிவிளைத்திட்டார்,
சுமைத்தராபதிமதியிவளுரோகிணி யென்னவேதொழத்தக்காள்.

     (இ-ள்.) 'யான்-, இனி-, இமைத்த கண் இணை மலர்ந்து -
இமைக்குந்தன்மையுள்ள (என்) இரண்டுகண்களை மலரவிழித்து, ஒருவரை- வேறொரு
புருஷரை, நோக்கலேன் - பாரேன்', என்று - என்று கருதி, சமைத்த - செய்வித்த,
பட்டம் ஒன்றினில் - பொற்பட்டத்தால், பொதி - மறைத்த, பெதும்பையை -
பெதும்பைப்பருவத்தளான காந்தாரியை, தந்தைஉம் - அவள் தந்தையான
சுபலனென்றகாந்தாரபதியும், தனயோர்உம் - (அவனது புத்திரராகிய) சகுனி
முதலியோரும்,அருங்குலம் முனிவர்உம் - சிறந்தகுலத்தில் பிறந்தவரான இருடியரும், 
அமைத்து-(கலியாணத்துக்கு) வேண்டும்பொருளைச் சித்தஞ் செய்துகொண்டு,- மறை
முறை-வேதவிதிப்படி, அருங் கடி - அருமையான விவாகத்தை, விளைத்திட்டார் -
செய்துமுடித்தார்: சுமை - (பூமியைத்) தாங்குதலையுடைய, தராபதி மதி - அரசனாகிய
சந்திரனுக்கு, இவள் -, உரோகிணி என்ன தொழ தக்காள் - உரோகிணி போலக்
கொண்டாடத்தக்கவளானாள்; (எ -று.)

     சந்திரனுக்குஅசுவினி முதலிய மற்றைப் பல நட்சத்திரங்களும்
மனைவியராகஇருப்பினும் உரோகிணி சிறத்தல்போல, திருதராட்டினுக்குப் பல
மனைவி மாரிருப்பினும்காந்தாரியே யாவரினும் மிக்கவளானாளென்க. "அகச்சத்
அந்த: புரிகாஸு  முக்யதாம்" என்று பாலபாரதத்து வருவதும் காண்க.     (179)

25.- இனிக் குந்தியைப்பற்றிய சரிதை:-
சூரன்மகளாகிய குந்தி,குந்திபோசரில்லத்து வளர்தல்.

புந்தியாலருங்கலைமகள் பொற்பினாற் பூந்திருபுனைகற்பால்
அந்திவாயருந்ததிபெரும்பொறையினா லவனிமானிகரென்னக்
குந்திபோசரிற்சூரனென்பவன்மகள் குருகுலந்தழைத்தோங்க
வந்தியாவரும்பிரதையென்றடிதொழ மதியெனவளர்கின்றாள்.

     (இ-ள்.) 'சூரன் என்பவன் மகள் - சூரனென்று ஒருபேரையுடைய யதுகுலத்தரனுடைய மகள், -புந்தியால் அருங்கலை மகள்-  புத்தியினால்
அருமையான  கலைக்குரிய மகளான சரசுவதியும், பொற்