136.-இருவரும் செய்தபோர்த்திறம். வேலி னால்வடி வாளி னால்வரிவில்லி னாலுரை பெற்றவெங் கோலி னாலிரு வருமு னைந்திருகுன்ற மொத்தன தேரினார் மாலி னால்வரு மத்த யானைகண்மலைவ தொத்தும தித்தபோர் நூலி னால்வழு வறம லைந்தனர்நுண்மை யாவினுநுண்ணியார். |
(இ -ள்.) நுண்மை யாவின்உம் நுண்ணியார் இருவர்உம் - நுண்ணிய பொருள்க ளெல்லாவற்றினும் நுண்ணிய தமது அறிவு நுட்பத்தை யுடையவர்களான கண்ணனும் சிசுபாலனுமாகிய இருவரும்,-இரு குன்றம் ஒத்தன தேரினார் - இரண்டு மலைகளைப் போன்றனவான தேர்களின் மேலிருந்தவர்களாய்,- வேலினால் - வேலாயுதத்தைக் கொண்டும், வடிவாளினால் - கூரிய வாளாயுதத்தைக்கொண்டும், வரி வில்லினால் உரைபெற்றவெம் கோலினால் - கட்டமைந்த வில்லினா லெய்யப்படுகிற புகழ்பெற்ற கொடிய அம்புகளைக்கொண்டும், மாலினால் வரு மத்த யானைகள் மலைவது ஒத்து - மயக்கத்துடனே வருகிற மதங்கொண்ட யானைகளிரண்டு தம்மிற் போர் செய்வது போன்று, மதித்த போர் நூலினால் வழுஅற - நன்கு மதிக்கப்பட்ட யுத்த சாஸ்திரமுறைப்படி தவறாமல், முனைந்து மலைந்தனர் - ஊக்கங்கொண்டு போர்செய்தார்கள்; நுண்மையாவினும் நுண்ணியார் - நுண்ணிய பொருள்களனைத்தையும் நுட்பமாக உணரும் அதிசூக்ஷ்மபுத்தியுடையோர். நுண்மை-பண்பாகுபெயராய், நுண்ணியபொருளின்மேல் நின்றது. 'நுண்ணியார்' என்றவிடத்து, அறிவினது நுண்மை அதனையுடையார்மே லேற்றிக் கூறப்பட்டது, வடிவாள் - வடிக்கப்பட்ட வாள்; வடித்தல் - நெருப்பிற் காய்ச்சியடித்துக் கூராக்குதல்: தேர்ந்தெடுக்கப்பட்ட வாள் எனினுமாம். தேர்க்குக் குன்றம் - வலிமை பருமை உயர்வுகளில் உவமம். தேரினார் - குறிப்பு முற்றெச்சம். 'குன்றமொத்துயர் தேரினார்' என்பதும் பாடம். 'மாலினால்' என்றதில் 'ஆல்' என்ற மூன்றனுருபு அடைமொழிப்பொருளது. உரை பெற்ற - சிறந்ததென்று கொண்டாடப்பெற்ற. (136) வேறு. 137.-இருவரும் சிலநேரம்சமமாகப் பொருதபின்பு, கண்ணன் சிசுபாலன்மேல் தனது சக்கராயுதத்தைப் பிரயோகித்தல். வெஞ்சின முடுக வொருவருக்கொருவர் வெல்லலுந் தோற்றலுமின்றி, வஞ்சின முரைசெய் துள்ளமு மெய்யும் வாகுபூதரங்களும் பூரித், தெஞ்சினர் தமைப்போ லிளைத்தபி னினிவானேற்றுதல் கடனெனக் கருதிக், கஞ்சனை முனிந்தோ னிவன்முடித்தலைமேற்கதிர்மணித் திகிரியே வினனே. |
(இ-ள்.) வெம் சினம் முடுக - கடுங்கோபம் மேல்மேல் மூள, ஒருவருக்கு ஒருவர் வெல்லல்உம் தோற்றல்உம் இன்றி-ஒருவரை |