பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 158

கடக்கும் கருத்து யாதுகொல் என்றான் - 'கோபித்த முனிவன்
(உங்களைச்சபித்த) சாபத்தை நீங்கள் நிவிருத்தி செய்துகொள்ளும்
ஆலோசனை (இவ்விரண்டில்) எது?' என்று வினவினான்; (எ - று.) மற்று -
அசை; வினைமாற்றுமாம்.

     எழுமுறை அன்பராய்ப் பிறந்து சாபந் தொலையக் கருதுகின்றீரோ?
மும்முறை பகைவராய்ப்பிறந்து சாபந் தொலையக் கருதுகின்றீரோ? இவ்
விருவகையில் நுமது விருப்பம் யாது? என்று வினவினான்.  'பரிந்து' என்றது,
அவன் கொண்ட கழிவிரக்கத்தைக் காட்டிற்று. 'அன்றி' என்றது -
விகற்பப்பொருளில் வந்தது.  'துளவமோலியாய்' என்றும் பாடமுண்டு.
மலர்மகள் மகிழ் நன் - மலர்மகளோடு கூடிமகிழ்பவன்.  மகிழ்நன் என்ற
பெயரில், மகிழ் - பகுதி;  ந் - பெயரிடைநிலை.  கருத்துமக்கியாது கொல்'
என்றும் பாடமுண்டு.  'முனிவன் பரிந்து' என்றவிடத்து 'முனியுந்தொழுது'
என்றும், 'மும்மடங்கு பகைவராய்' என்றவிடத்து 'மும்மடங்குன் பகைவராய்'
என்றும் சிலபிரதிகளிற் காணப்படுகின்றன.                     (144)

145.மற்றவரிறைவன்மலரடிவணங்கிவான்பிறப்பேழுறமாட்டே,
முற்றுமுப்பவமுமுனக்குவெம்பகையாயுற்பவித்துன்பதமுறுவேம்,
வெற்றிகொண்முதிர்போர்நேமியாயென்றார்விமலனுங்
                                   கொடியவெஞ்சாப,
மற்றிடும்வகையவ்வரமவர்க்களித்தானசுரராயவரும்வந்துதித்தார

     (இ -ள்.) மற்று - பின்பு, அவர் - அத்துவாரபாலகர், இறைவன் மலர்
அடி வணங்கி - திருமாலினது தாமரைமலர் போன்ற திருவடிகளை
நமஸ்கரித்து, 'வெற்றி கொள் முதிர் போர் நேமியாய் - ஜயங்கொள்ளும்
பெரும் போரைச் செய்கின்ற சக்ராயுதத்தையுடையவனே! வான் பிறப்பு ஏழ் உற
மாட்டேம் - அதிகமான ஏழுபிறப்புக்களை (நாங்கள்) விரும்பமாட்டோம்;  முப்
பவம்உம் உற்று உனக்கு வெம் பகை ஆய் உற்பவித்து உன் பதம் உறுவேம் -
(குறைவான) மூன்று பிறப்புக்களையே ஏற்றுக்கொண்டு உனக்குக் கொடிய
பகைவராய்த்தோன்றி(ப் பின்பு) உனது திருவடியைச் சேர்வோம்,' என்றார்-
என்று (தமது கருத்தை) விண்ணப்பஞ் செய்தார்கள்; (அது கேட்டு),
விமலன்உம் - குற்றமற்றவனான திருமாலும், கொடிய வெம்சாபம் அற்றிடும்
வகை அ வரம் அவர்க்கு அளித்தான் - அவ்வாறே (மும்முறை
பகைவராய்ப்பிறந்து) மிகக்கொடிய அச்சாபந் தீரும்படி அவர்கட்கு
வரங்கொடுத்தருளினான்;  அவரும் அசுரர் ஆய் வந்து உதித்தார் -
(அங்ஙனமே) அவர்களும் (முதலில்) அசுரர்களாய்(ப் பூமியில்)வந்து
பிறந்தார்கள்; (எ - று.)

    அன்பராய்ப் பிறப்பதானால் ஏழுபிறப்பு எடுக்கவேண்டியதனாலும்,
அன்பராய்ப் பிறந்தால் விரைவில் அழிவுநேராதாதலின் காலம் நீட்டிக்கு
மாதலாலும், அவர்கள் அன்பராய்ப் பிறத்தற்கு உடன்பட்டிலர்.  மும்முறை
பகைவராய்ப் பிறந்து அப்பிறப்புத்