தால்" என்றபடி, அவன் பூமியிலிறவாத வரம் பெற்றவனாதலால். தரணியிற் கொடுமைபுரிந்து என்று இயைத்துப் பொருள் கொள்ளினுமாம். மூவுலகு - சுவர்க்கம் பூமி பாதாளம். அங்குரித்து-அங்குரமென்ற வடமொழிப்பெயரினடியாப் பிறந்த வினையெச்சம்: அங்குரம் - முளை. 'நரவரி' என்றவிடத்து 'ஆளரி' என்றும் பாடமுண்டு; பொருள் அதுவே. (146) 147. | அரக்கர்தங்குலத்துக்கதிபதியாகியாண்டுபோய்மீண்டு மங்குரித்துத், தருக்குடனவர்களிருவருமுறையாற்றம்பியுந்தமையனுமானார், சிரக்குவையுடனேபுயவரைநிரையுஞ்சிந்தவச்சிந்து வினிடையே, சரக்குவைசொரிந்தானமலனவ்வுகத்துத் தசரதன்றன் வயிற்றுதித்தே. |
(இ -ள்.) மீண்டும் - மீளவும், அவர்கள் இருவரும்-அத்துவார பாலகரிரண்டுபேரும், ஆண்டு - அவ்விடத்து [நிலவுலகத்தில்], போய் அங்குரித்து - சென்று பிறந்து, அரக்கர்தம் குலத்துக்கு தருக்குடன் அதிபதி ஆகி - இராக்கதர்களுடைய கூட்டத்துக்குப் பெருமிதத்தோடு தலைவர்களாய், முறையால் தம்பியும் தமையனும் ஆனார் - உறவுமுறைமையினால் தம்பியான கும்பகர்ணனும் தமையனான இராவணனுமானார்கள்: அமலன் - பரிசுத்தமூர்த்தியான திருமால், அ உகத்து - அந்தத் திரேதாயுகத்திலே, தசரதன் தன் வயிறு உதித்து - தசரதசக்கரவர்த்தியின் வயிற்றில் தோன்றி (ஸ்ரீராமாவாதாரஞ்செய்து), அ சிந்துவின் இடையே - கடலினிடையேயுள்ளதான அவ்விலங்காபுரியிலே, சிரம் குவையுடனே புயம்வரைநிரையும்சிந்த - (அவ்விராவண கும்பகர்ணர்களுடைய) தலைகளின் குவியலுடனே மலைபோன்ற தோள்களின் வரிசையும் அற்றுவிழும்படி, சரம்குவை சொரிந்தான் - அம்புக்கூட்டங்களை மிகுதியாகப் பிரயோகித்தான்; (எ - று.) இராவணன் பத்துத்தலையும் இருபதுதோளுமுடையவனாதலால், 'சிரக்குவையுடனே புயவரைநிரையும்' எனப்பட்டது. தசரதன் என்ற வடமொழிப்பெயர் - பத்துத்திக்கிலுஞ் செல்ல வல்ல தேருடையவனென்று பொருள்படும்: தச - பத்து, ரதம் - தேர். சிந்துவினிடையே சிந்த - கடலிலே சிதறிவிழ எனினுமாம். இருவரும் அதிபதியாகி - பன்மையொருமைமயக்கம். தருக்கு - செருக்கு, அகங்காரம், களிப்பு. ஸிந்து - வடசொல். (147) 148. | இந்தநல்லுகத்திலிறைவனுக்கன்னோரிருவருங்கிளைஞரா யெய்தி, வந்தனர்வஞ்சக்கஞ்சமாமனுமிம்மைத்துனன்றானுமாய்மன்னோ, சிந்தையிலுணர்வீரென்றுகொண்டுரைத்தான்சித்தசித் துணர்ந்தருண்முனியு, மந்தமன்னவையினிருந்துளோரெல்லாமமலனைத்துதித்ததி சயித்தார். |
(இ -ள்.) அன்னோர் இருவர்உம் - அந்தத் துவாரபாலகரிரண்டு பேரும், இந்த நல் உகத்தில் - இந்தநல்ல (துவாபர) யுகத்திலே, |