பக்கம் எண் :

10பாரதம்ஆரணிய பருவம்

     (இ - ள்.) கேட்டு இருந்தருள் - (அவற்றைக்) கேட்டுக்கொண்டிருந்
தருளிய, கேசவன் - கண்ணபிரான், வாசவன் காடு இருந்தனன் என்ன -
இந்திரன் வனத்தில் வந்திருந்தாற்போல, கவின் பெறும் தோடு இருந்து அளி
தேன் நுகர் சோலையின் மாடு இருந்து - அழகுபெற்ற பூவிதழ்களில் தங்கி
வண்டுகள் மதுவைக் குடிக்கப்பெற்ற காமியவனத்திலே வந்திருந்து, அ
மகீபர்க்கு - அந்த அரசர்களுக்கு, உரைசெய்வான் - சொல்வானானான்; 
(எ-று.) - அது, மேல் நான்கு கவிகளாற் கூறுகின்றார். 

     கேசவன் என்பதற்கு - பிரமனையும் உருத்திரனையும் தன் அங்கத்திற்
கொண்டவ னென்றும், அழகிய தலைமயிர்களையுடையவனென்றும்,
கேசியென்னும் அசுரனைக் கொன்றவ னென்றும் பொருள்கள் கூறப்படும்.
வாசவன்=வாஸவன்: அஷ்டவசுக்களுக்குத் தலைவன்; அன்றிக்கே எல்லா
ஐசுவரியமுடையவன்.  காடு-கற்பகச் சோலையுமாம்.  இருந்த மகீபர்க்கு
என்று பிரித்து, வாசவன் காட்டில் வந்திருந்தாற்போலக் கவின் பெறத்
தோன்றுகின்றனர் மகீபர் என்று உரைப்பாரு முளர்.                 (13)

14.-இரண்டுகவிகள் - சினந்துகூறிய அரசர்களை
ஸ்ரீக்ருஷ்ணன்சமாதானப்படுத்தியது கூறும்.

விடுகவிந்த வெகுளியைப்பின்புற
அடுகநுந்திற லாண்மைகடோன்றவே
வடுமனங்கொடு வஞ்சகஞ்செய்பவர்
கெடுவரென்பது கேட்டறியீர்கொலோ.

          நான்கு கவிகள் - ஒரு தொடர்: கண்ணன் வார்த்தை.

     (இ - ள்.) இந்தவெகுளியை - இக்கோபத்தை, விடுக - (இப்பொழுது)
விடுவீர்களாக; பின்பு உற - (வனவாச அஜ்ஞாதவாசங்களின்) பின்பாக, நும்
திறல் ஆண்மைகள் தோன்ற - உம்முடைய பலபராக்கிரமங்கள்
வெளிப்படும்படி, அடுக - (பகைவர்களைக்) கொல்லுவீராக; 'வடுமனம்
கொடு - குற்றத்தையுடைய மனத்தையுடையவர்களாய், வஞ்சகம் செய்பவர் -
வஞ்சனை செய்பவர்கள், கெடுவர் - கெட்டே விடுவர்,'என்பது - என்னும்
வார்த்தையை, கேட்டு அறியீர்கொல்ஓ - (நீவிர்) கேட்டும்
அறிந்தீரில்லையோ? 

    மனக்குற்றங்கொண்டு பிறர்க்குத் தீமைசெய்பவர் கெடுவராதலால்,
இப்போதுசீற்றங்கொண்டு துரியோதனாதியரைச் செறலாகாதென்பதாம்.  இனி
'கெடுவான் கேடு நினைப்பான்' என்ற பழமொழிக்கு ஏற்ப, துரியோதனாதியர்
கேடுநினைத்தலால் தாமேகெடுவார்: அவரைக் கெடுக்கவேணுமென்று
இப்போது வெகுளி கொள்ளவேண்டா என்றுமாம். "பிறர்க்கின்னா
முற்பகல்செய்யின் தமக்கின்னா, பிற்பகல்தாமேவரும்" என்றார்,
திருவள்ளுவரும். 'கேட்டு' என்பதன்பின் செய்யுள்விகாரத்தால் தொக்குநின்ற
இறந்ததுதழுவிய இழிவுசிறப்பும்மை 'கற்றறியீரோ?' என்னும்
பொருளையுணர்த்தும்.                                          (14)