பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்105

     (இ - ள்.)உன்ன அரு தவம் பயன் உற்ற மைந்தன்உம்-
எண்ணுதற்கும் அருமையான தவத்தினது பலனைஅடைந்த குமாரனான
அருச்சுனனும்,-அன்னையை-(தனக்குத்)தாயும், மின் இடை அரிய
பாவையை-மின்னல்போல நுண்ணியதாய்விளங்குகிற இடையையுடைய
அருமையான பாவைபோன்றவளும், கன்னலைஅமுதொடு கலந்த
சொல்லியை-கரும்புரசத்தைத் தேவாமிருதத்தோடு கலந்ததுபோல மிக இனிய
சொற்களையுடையவளும்ஆகிய இந்திராணியை. (கண்டு), சென்னியை
அவள் பதம் சேர்த்து - (தனது) முடியை அவளது அடிகளிற் சேரவைத்து
[சாஷ்டாங்கமாகநமஸ்கரித்து], நின்றனன்-எழுந்து நின்றான்;(எ - று.)

     பாவை -சித்திரப்பதுமையும் கண்மணிப்பாவையுமாம்.  கன்னல் -
சாற்றுக்கு முதலாகுபெயர்.  கண்டு என்று ஒரு சொல் வருவிக்க.       (141)

142.-இந்திராணிஅருச்சுனனைவாழ்த்துதல்.

நின்றவக்குமரனைத்தழுவிநேயமோடு
ஒன்றியவுவகைய ளுரைவழுத்தினாள்
வென்றிகொளையநீவிபுதர்தம்பிரான்
தன்றிருச்செல்வமுந் தாங்குவாயெனா.

     (இ - ள்.)(இந்திராணி),-நின்ற அ குமரனை- நமஸ்கரித்து நின்ற
குமாரனானஅவ்வருச்சுனனை,நேயமோடு - அன்புடனே, தழுவி -
அணைத்துக்கொண்டு,ஒன்றிய உவகையள் - பொருந்திய
களிப்புடையவளாய், (அவனைநோக்கி), 'வென்றிகொள் ஐய -
ஜயத்தைக்கொண்ட ஐயனே! நீ-, விபுதர்தம் பிரான் தன் திரு செல்வம்உம் -
தேவராஜனானஇந்திரனது மேலான ஐசுவரியத்தையும், தாங்குவாய்-
பரிப்பாயாக',எனா- என்று, உரை வழுத்தினாள்- வார்த்தை சொன்னாள்; 
(எ - று.)

     வணங்கினவனைநோக்கித்தேவேந்திரனது ஐசுவரியத்தையும் பெறுவா
யென்றது வாழ்த்துஆதல் காண்க.                          (142)

143.-இந்திராணிவாழ்த்திவிட்டுத் தன்னிருப்பிடம்
சேர்தல்.

ஆயிரம்பதின்மடங் காகவன்னையும்
மாயிரும்புதல்வனைவாழ்த்திவாழ்த்தியே
தூயசெம்பருமணி சுடருமாளிகை
ஏயினளிந்திர னிதயம்போன்றுளாள்.

     (இ - ள்.)இந்திரன் இதயம் போன்று உளாள் - இந்திரனது மனத்தை
யொத்து உள்ளவளாகிய, அன்னைஉம்- அருச்சுனன் தாயாகிய
இந்திராணியும்,-மா இரு புதல்வனை- மிக்க பெருமையுடைய (தன்)
மகனானஅருச்சுனனை,ஆயிரம் பதின்மடங்கு ஆக-(தாய் மகனை
வாழ்த்து மளவினும்) பதினாயிரம்பங்குஅதிகமாக,