துகிர் கொத்துஒளிர் தளிருடன் குலாவு - சிவந்த பவழக்கொத்துப்போல விளங்குகின்ற துளிர்களுடனே செழித்திருக்கின்ற, கற்பகம் - கற்பக விருக்ஷமானது,-சித்திரம் விசயம் வில் விசயன் சென்னிமேல் - அழகிய வெற்றியைத்தருகின்ற வில்லையுடையஅருச்சுனனது முடியின்மேல், முருகு அவிழ் வாசம் மாலை- தேன் சொரிகிற வாசனையுடையபூமாலையை, வைத்தது-;(எ-று.) நவமணிகளாவன-கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன;முதலிரண்டடி - கற்பமரத்தின் இயற்கையை வருணித்தது. கற்பக மரத்தின் கீழ்த் தங்கியிருக்கையில் அந்தக் கற்பகமரத்தின் மலர் வரிசை அருச்சுனன் முடிமேல் தொங்குவது, கற்பகமலர் விசயன் சென்னிமேல் வாசமாலைவைத்ததுபோலுமென இச்செய்யுளுக்குக் கருத்துக் காணலாம்.(145) 146.-இதுமுதல்நான்குகவிகள் - ஒருதொடர்: தேவேந்திரனும்அருச்சுனனும் சிறப்புற வீற்றிருந்தமை கூறும். கிளரிசைத்தும்புரு கிளருங்கற்பகத் தளையவிழ்நாண்மலர்சாத்துநாரதன் அளிபயிலமுதமுண் டகமகிழ்ந்துளக் களியொடுகின்னரர் கானம்பாடவே. |
(இ - ள்.)கிளர் - விளங்குகின்ற, இசை-சங்கீதத்தையுடைய, தும்புரு - தும்புருவும் கிளரும் - உயர்ந்து விளங்குகிற, கற்பகம் - கல்பக விருக்ஷத்தினது, தளைஅவிழ் நாள் மலர் - முறுக்குவிரிந்த புதிய பூக்களினாலாகியமாலையை,சாத்தும் - தரித்துள்ள, நாரதன் - நாரதனும், கின்னரர் - கிந்நரரென்னுஞ் தேவசாதியாரும், அளி பயில் அமுதம் உண்டு - இனிமைமிகுந்த அமிருதத்தைக்குடித்து, அகம் மகிழ்ந்து - (அதனால்) மனம் மகிழ்ந்து, உளம் களியொடு - (இயற்கையான) உள்ளக்களிப்புடனே, கானம் பாட - இசையைப் பாடவும்,-(எ - று.) இச்செய்யுளில்'பாட'என்பது,மேல் 149-ஆவது கவியில் 'இருந்தார்' என்பதனோடுமுடியும். அடுத்த இரண்டுகவிகளிலுள்ள 'வாழ்த்த','சூழ' என்ற செயவெனெச்சங்களுக்கும் முடிபு அதுவேயாம். அளி பயில்- (இனிமை மிகுதியால்) வண்டுகள் மொய்க்கின்ற, அமுதம் எனினுமாம். மலர்-மாலைக்குக்கருவியாகுபெயர். (146) 147. | சிகையனனிகரகத் தியன்புலத்தியன் வகைபெறுவசிட்டனேழ்வசுக்களாதியர் அகமகிழ்ந்துவகைகொளன்பினாற்றிரு முகமலர்ந்தருமறைமுனிவர்வாழ்த்தவே. |
(இ - ள்.)சிகை அனல் நிகர் அகத்தியன்-சுவாலையையுடைய அக்கினியையொத்த அகஸ்தியரும், புலத்தியன் - புலஸ்தியரும், |