பக்கம் எண் :

108பாரதம்ஆரணிய பருவம்

வகை பெறுவசிட்டன்-(தத்துவஞான) வகையைப்பெற்ற வசிஷ்டரும்,
(ஆதியர்)-முதலானவர்களாகிய, அரு மறை முனிவர்-அருமையான
வேதங்களில் வல்ல முனிவர்களும், ஏழ் வசுக்கள் ஆதியர்-
ஏழுவசுக்கள்முதலான தேவர்களும், அகம் மகிழ்ந்து - மனங்களித்து,
உவகை கொள் அன்பினால்-அம்மகிழ்ச்சியைக்(காரியமாகக்) கொண்ட
அன்பினால்,திரு முகம் மலர்ந்து (தமது) அழகிய முகம்மலர்ச்சியுறப்பெற்று,
வாழ்த்த-வாழ்த்தவும்,-(எ - று.)

    தவமிகுதியாலாகிய பிரமதேஜசினாலும்,தம்மை யடுத்தவரையும்
பரிசுத்தராக்கவல்ல தூய்மையாலும், சிகையனல், அகத்தியனுக்கு
உவமையாம்:இந்த அடைமொழியைப் புலத்திய வசிட்டருக்குஞ் சேர்க்க.
வஸு ஷ்டன்-ஐம்பொறிகளைவசப்படுத்தினவன்;ஜிதேந்திரியன்.
அகத்தினழகு முகத்தில் தெரியுமாதலால், 'அகமகிழ்ந்துவகைகொளன்பினாற்
றிருமுகமலர்ந்து'எனப்பட்டது.  அஷ்டவசுக்களுள் பிரபாசனென்னும்வசு
தன்மனைவியின்சொல்லைக்கேட்டுவசிட்டரிடமுள்ள காமதேனுவைக்
கொள்ளைகொள்ளமுயன்று அதனையுணர்ந்தஅம்முனிவரது சாபத்தால்
மானுட ஜந்மமெடுத்துப் பீஷ்மவடிவமாய்ப் பூமியி லிருத்தலால்,
'ஏழ்வசுக்கள்'என்றார். வசுக்கள் எண்மராவார்-அநலன், அநிலன், ஆபன்,
சோமன், அத்வரன், துருவன், பிரத்தியூஷன், பிரபாசன் என இவர்.
ஆதியர் என்றது-ஆதித்தர் பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும்,
மருத்துவ ரிருவரும் முதலியோரை.  அகஸ்த்ய னென்னுஞ் சொல்லுக்கு-
(விந்திய) பருவதத்தை வளரவொண்ணாதுதடுத்துஅடக்கியவனென்று
பொருள்:அகம்-மலை: ஸ்த்யன்-அடக்கியவன்.  தகையுள வகத்தியன்
புலத்தியன்றவ என்றும் பாடம்.                             (147)

148.செம்மணிவெயில்விரி சிலம்புகொஞ்சவே
கைம்மணிவரிவளைகலந்துபொங்கவே
பெய்ம்மணிமேகலைபிறங்கியார்க்கவே
துய்ம்மணியொளியரமாதர்சூழவே.

     (இ-ள்.) செம்-சிவந்த, மணி - இரத்தினங்களின், வெயில்-
(சூரியகாந்திபோன்ற)ஒளி, விரி - பரவுகின்ற, சிலம்பு-காற்சிலம்புகள்,
கொஞ்ச-இனிமையா யொலிக்கவும்,-கை-கைகளிலணிந்த மணி-
இரத்தினங்களைப்பதித்த,வரி-கோடுகளமைந்த, வளை-வளையல்கள்,
கலந்து-(ஒன்றோடொன்று)நெருங்கி, பொங்க-ஆரவாரிக்கவும்-பெய்-
(இடையில்)அணிந்த, மணி மேகலை-இரத்தினங்களைப்பதித்த
மேகலாபரணங்கள், பிறங்கி-பிரகாசித்து, ஆர்க்க-ஒலிக்கவும்,-துய்மணி
ஒளி-சுத்தமான இரத்தினங்களின் ஒளி (போன்றதேககாந்தி)யையுடைய,
அரமாதர்-தெய்வப்பெண்கள் சூழ-(தம்மைச்)சூழ்ந்து நிற்கவும்,-(எ-று.)

     மணி என்பதற்கு- முதலடியில் இரத்தினமென்றும், இரண்டாமடியில்
அழகு என்றும், மூன்றாமடியில்முத்து என்றும், நான்காமடியில்
மாணிக்கமென்றுங் கொள்ளலாம்.  மேகலை-மாதரியையணியுள்
எண்கோவையணி: "எண்கோவைமேகலை"என்றது