பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்109

காண்க.  கொஞ்ச,பொங்க, ஆர்க்க என்னுஞ் செயவெனெச்சங்கள்,'சூழ'
என்பதனைக்கொண்டன. வெயில்வருஎன்று பிரதிபேதம்.          (148)

வேறு.

149. இவ்வாறிவ ரிருவோர்களு மிணைமாமுகிலெனவே
செவ்வாளரிகிளர்கின்றதொர் செம்பொற்றவி சிடையே
மைவ்வானக முழுதுஞ்செழுமறையோசைவி ளைக்கும்
அவ்வானவர்புடைசூழ்தர வழகெய்தியி ருந்தார்.

     (இ-ள்.)இ ஆறு - இந்தவிதமாக, இவர் இருவோர்கள்உம்-(இந்திரனும்
அருச்சுனனும் என்னும்)இந்த இருவரும், செம் வாள் அரி கிளர்கின்றது ஒர்
செம் பொன் தவிசு இடைஏ - சிவந்த ஒளியையுடைய சிங்கத்தினுருவம்
(தன்னில்விளங்கும்படி)சித்திரித்துச் செய்யப்பட்டதொரு
செம்பொன்னினாலாகியசிங்காசனத்திலே, மை வாகனம் முழுதும் செழுமறை
ஓசை விளைக்கும்அவானவர் புடை சூழ் தர-மேகங்களையுடைய
ஆகாயத்தினிடை முழுவதிலுஞ் சிறந்த வேதங்களின்கோஷத்தை
யுண்டாக்குகிற அத்தேவர்கள் பக்கங்களிற் சூழ்ந்துநிற்க, இணைமா முகில்
என-பெரிய இரண்டு மேகங்கள்போல, அழகு எய்தி இருந்தார் - அழகு
பொருந்தியிருந்தார்;(எ-று.)

     மைவ்வானகம் -எதுகை நோக்கிய விரித்தல்.  மை வானகம்
என்பதற்கு - நீலநிறமாகத்தோன்றும் ஆகாயம்எனவும் உரைக்கலாம்.

     இதுமுதற்பதினெட்டுக்கவிகள் - ஈற்றுச்சீரொன்று மாச்சீரும், மற்றை
மூன்றும் மாங்கனிச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.

150.-இருகவிகள்-ஒருதொடர்:அங்கு வந்து ஊர்வசி
நாட்டியமாடஅருச்சுனன் கண்டுகளித்தலைக்கூறும்.

இருந்தாரிவர்குளிர்சாமரை யிருபாலுமிரட்டப்
பெருந்தாரகைமதியொத்தொளி பெறுகின்றகுடைக்கீழ்
முருந்தார்நகையரமாதரின் முதன்மைப்பெயர்புனையும்
செருந்தார்குழலுடையாளரி திருவூருவின்வந்தாள்.

     (இ - ள்.)இவர் - இவ்விருவரும், இருபால்உம் குளிர் சாமரை இரட்ட
- (தமது) இரண்டுபக்கங்களிலும் குளிர்ந்த சாமரங்கள் வீசாநிற்க,-பெரு
தாரகை மதி ஒத்து ஒளி பெறுகின்ற குடைக் கீழ் - பெரிய நக்ஷத்திரங்களாற்
சூழப்பட்ட பூர்ணசந்திரனையொத்துப் பிரகாசத்தைப் பெறுகின்றதொரு
வெண்கொற்றக்குடையின் கீழ், இருந்தார் - இருந்தார்கள்;(அப்பொழுது),
முருந்து ஆர் நகை - மயிலிறகினடியையொத்த பற்களையுடைய,
அரமாதரின் - தேவமகளிர்களுள், முதன்மை பெயர் புனையும்-
தலைமையானபிரசித்தியைப்பெற்ற, செருந்து ஆர் குழல் உடையாள் -
செருந்தி மரத்தின் மலர்நிறைந்த கூந்தலையுடையவளும்,அரி திரு
ஊருவின் வந்தாள் - திருமாலினது திருத்தொடையிற் பிறந்தவளும்,-(எ-று.)