பக்கம் எண் :

110பாரதம்ஆரணிய பருவம்

     குளிர் சாமரையென்றது - வீசுகின்ற காற்றின் குளிர்ச்சியையும்
கண்ணுக்கு இனிமையையுங் கருதி.  நக்ஷத்திரங்கள் - குடையின்
சுற்றிலுந்தொங்கவிடப்பட்டுள்ள சரங்களுக்கும், மதி-குடைக்கும், வடிவமும்
நிறமும் ஒளியும்பற்றிவந்த உவமை.  இனி, மதியொத்து இருந்தார்என
இயைத்து, நட்சத்திரங்கள் சூழ்ந்த பூர்ணசந்திரன்-தேவர்கள்சூழ்ந்த
இந்திரார்ச்சுனர்க்கு உவமை யென்றலுமொன்று.  செருந்து -
பூவிதழ்என்றாருமுளர். செருந்தார்க்குழல் என்ற பாடத்துக்கு, செரும் -
சூடியுள்ள, தார் - மாலையையுடைய,குழல் என்க: செரும்=செருகும்,
(அல்லது)சேரும்.  திரு - கண்டாரால் விரும்பப்படுந்தன்மை: என்றது,
அழகை.                                            (150)

151.மானேதருவிழியாடிரு மாதேநிகரெழிலாள்
தேனேதிகழ்மொழியாள்பொரு சிலையேதருநுதலாள்
தானேதனைநிகர்வாள்பெயர்தருநாடகமெல்லாம்
கானேசெறிதொடையானிரு கண்கண்டுகளித்தான்.

     (இ-ள்.)மான்ஏ தரு விழியாள் - மான்விழியையேயொத்த
கண்களையுடையவளும்,திரு மாதுஏ நிகர் எழிலாள் - இலக்குமியையே
யொத்த அழகையுடையவளும், தேன்ஏ திகழ் மொழியாள்-
தேனையேயொத்துவிளங்குகிற இன்சொல்லையுடையவளும்,பொருசிலைஏ
தரு நுதலாள் - போர்செய்கின்ற வில்லையேயொத்த [வளைவான]
புருவங்களையுடையவளும்,தான்ஏ தனைநிகர்வாள் - (வேறுஎவரும்
தன்னையொப்பவரில்லாமையால்)தன்னைத்தானேஒப்பவளுமாகிய
ஊர்வசி, பெயர்தரு - (அடிகளைப்)பெயர்த்து வைத்து ஆடுகின்ற, நாடகம்
எல்லாம் - நர்த்தனம் முழுவதையும், கான்ஏ செறி தொடையான் -
வாசனையேமிகுந்தகற்பகப்பூமாலையையுடையஅருச்சுனன், இரு கண்
கண்டு - (தனது)இரண்டு கண்களாலும் பார்த்து, களித்தான் - மிக
மகிழ்ந்தான்;(எ-று.)

     இந்திரன்நாடோறுங் கண்டுகளித்து வருவதனால்அதனைக்கூறாமல்,
அருச்சுனன் புதுமையாகக் கண்டுகளித்ததை இங்குக் கூறினார். தரு, நிகர் -
உவமையுருபுகள்.  மானேர்தரு என்றும், சிலையேய்தரு,சிலையேபொரு
என்றும்,தொடையாரிருகண்கண்டு களித்தார்என்றும் பாடம்.        (151)

152.-அருச்சுனன்ஊர்வசியின் நடனத்தை வியந்து
புகழ்தல்.

இந்நாடகவிதம்யாவையும் யாரேதனிபுரிவார்
மின்னாரிடைமின்னேரிழைமென்கொம்பையலாதார்
என்னாவிழிகளியாமனமுருகாவிசையெழுதும்
பொன்னாடுடையவன்மைந்தன்வியப்போடுபுகழ்ந்தான்.

     (இ-ள்.) இசை எழுதும் - கீர்த்தியை (எவ்வுலகத்தும்)எழுதிவைத்த,
பொன் நாடு உடையவன் மைந்தன் - பொன்னுலகமான
சுவர்க்கலோகத்தையுடைய இந்திரனது குமாரனானஅருச்சுனன்,-
விழிகளியா- (அந்நாடகத்தைக்)கண்களாற் (கண்டு)