பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்111

களித்து, மனம் உருகா- மனமுருகி, 'மின்ஆர் இடை - மின்னலையொத்த
இடையையும், மின் நேர் இழை - மின்னலையொத்து விளங்குகின்ற
ஆபரணங்களையுமுடைய,மெல் கொம்பை - மென்மையான பூங்கொம்பு
போன்ற இவ்வூர்வசியை, அலாதார் - அல்லாதமகளிர்களுள், இ நாடகம்
விதம் யாவைஉம் - இந்த நர்த்தனத்தின் வகைகளையெல்லாம்,யார்ஏ தனி
புரிவார் - எவர்தாம் தனியே செய்யவல்லவர்?  [எவருமிலர்]',என்னா-
என்று, வியப்போடு புகழ்ந்தான் - ஆச்சரியத்தோடு சிறப்பித்துக் கூறினான்;

     'தனிபுரிவார்'என்றதனால்,ஒவ்வொரு விதத்தை  ஒவ்வொருவர்
செய்தாலுஞ் செய்யக்கூடுமே யன்றி, இவ்விதங்களையெல்லாம்வேறே
ஒருவராற் செய்யாமுடியாதென்றான். இழை - இரத்தினங்களிழைத்துச்
செய்யப்படுவது. கொம்பு - உவமவாகுபெயர்.  இசையெழுதுதல் - கீர்த்தியை
யாவருங்கொண்டாடும்படி பரவச் செய்தல்.                       (152)

153.-இந்திரன்யாவர்க்கும் விடைகொடுத்து அனுப்புதல்.

திகழ்கின்றனவுரைதந்தை செவிப்போதுறுமுன்னே
இகல்கொண்டுயர்தோளாய்புதி திந்நாடகமென்னா
மகவான்பெருமிதவாழ்வுறை வானோர்முதல்யாரும்
மிகுகுங்குமமுலையாருடன்விடைகொண்டிடவிட்டான்.

     (இ-ள்.)திகழ்கின்றன உரை - (இங்ஙனம்)விளங்குவனவாகிய
(அருச்சுனனது)சொற்கள், தந்தை செவி போதுறும் முன்ஏ - தந்தையாகிய
இந்திரனது காதிற் செல்லும்முன்னே,-மகவான்- அவ்விந்திரன்,
'இகல்கொண்டுஉயர் தோளாய் - வலிமையைக் கொண்டு உயர்ந்த
தோள்களையுடையவனே! இ நாடகம்-இன்றைக்குச்செய்த நர்த்தனம்,
புதிது-நூதனமாயும் ஆச்சரியகரமாயு முள்ளது',என்னா- என்று சொல்லி,
பெருமிதம் வாழ்வு உறை - பெருந்தன்மையையுடைய வாழ்வைக்கொண்டு
வசிக்கின்ற, வானோர்முதல் யார்உம்-தேவர்கள் முதலிய எல்லாரும், மிகு
குங்குமம் முலையாருடன்- மிகுந்த குங்குமக்குழம்பையணிந்த
தனங்களையுடையதேவமாதர்களுடனே, விடை கொண்டிட -
உத்தரவுபெற்றுக்கொண்டு செல்லும்படி, விட்டான் - (யாவரையும்)
அனுப்பினான்;(எ-று.)

    இரட்டுறமொழிதலால், 'புதிது'என்பதற்கு இங்ஙனம் பொருள்
உரைக்கப்பட்டது. மகவான் - நூறு அசுவமேதயாகங்களைச்செய்தவன்.
பெருமிதவாழ்வுரை என்ற பாடத்துக்கு - பெருந்தன்மையுடைய
வாழ்த்துக்களைச்சொல்லுகின்ற என்று பொருளாம்.  செவிப்போதுற மகிழா
என்றும் பாடம்.                                          (153)

154.-தேவேந்திரனும்அருச்சுனனும் அமுதுண்டவராய்
இனிதிருத்தல்.

மகனும்புகழ்புனைதந்தையும்மந்தாகினியாடிச்
சிகரம்பயில்வரைபோலுயர் திருமண்டபமிசையே