அகிறுன்றியகுழலார்பல ரரமாதரளிக்கும் நிகரம்பயிலமுதுண்டவர் நிறைவெய்தியிருந்தார். | (இ-ள்.) மகன்உம் - மகனாகியஅருச்சுனனும், புகழ் புனை தந்தைஉம் - புகழ்பூண்ட தந்தையான தேவேந்திரனும்,-மந்தாகினி ஆடி - ஆகாச கங்காநதியிலே நீராடி, (பின்பு), சிகரம் பயில் வரைபோல் உயர் திரு மண்டபம் மிசை-சிகரங்கள் பொருந்திய மலைபோலஉயர்ந்த அழகிய ஒருமண்டபத்திலே, அகில் துன்றிய குழலார் புலர் அரமாதர் அளிக்கும் நிகரம் பயில் அமுது உண்டவர்-அகிலின்புகை பொருந்திய கூந்தலையுடையவர்களாகியபல தெய்வப்பெண்கள் கொடுத்த திரளாகவுள்ள அமிருதம்போலினிய பலவகை யுணவைப் புசித்தவர்களாய், நிறைவு எய்தி- திருப்தியையடைந்து, இருந்தார்-;(எ-று.) மேலுலகத்திலுள்ள கங்காநதி மந்தாகினியென்னும் பெயருடைய தாதலை"ஓதப்புனற்பொன்னிநன்னீரரங்கருலகளந்த, பாதத்துநீர்விண்படி பிலமூன்றிலும் பால்புரைவெண், சீதத்தரங்க மந்தாகினியாகிச் செழுங்கங்கையாய், மேதக்கபோகவதியாகிநாளும் விழுகின்றதே" என்றதனாலும்அறிக. சிகரம்-உச்சி. நிகரம் -கூட்டம்: விழுங்குதலென்று பொருள் கொள்வாருமுளர். அகில்-புகைக்கு ஆகுபெயர். முதலடியில், வகை கொண்டுயர்தோளாரவர் என்ற பாடத்துக்கு, வகை கொண்டு உயர்தோளார்-அழகைக் கொண்டு உயர்ந்த தோள்களையுடையவர்களாகிய, அவர் - அவ்விந்திரனும் அருச்சுனனும் என்க. (154) 155.-அருச்சுனனுக்குத்தனியேவசிக்கும்படி மாளிகையமைத்துஈதலும் சூரியன் அத்தமித்தலும். தருக்குங்களியமுதுண்டவர் தனிவாழ்வுறுமெல்லைச் சுருக்குங்கணமணிநீள்வெயில் சுடர்மாளிகைவேறொன்று இருக்கும்படிவிசயன்பெற வீந்தான்விடையதுகண்டு அருக்கன்குடகடன்மாளிகை யணிதேரொடடைந்தான். |
(இ-ள்.) அவர்- அவ்விருவரும்,-தருக்கும்களி அமுது உண்டு- மிகுந்தகளிப்பைத் தருகின்ற அமிருதத்தைப்போலினிய உணவைப் புசித்து, தனி வாழ்வுறும் எல்லை-தனியேவாழ்கின்ற சமயத்தில்,-சுருக்கும்கணம் மணி நீள் வெயில் சுடர் மாளிகை வேறு ஒன்று-அடக்கிப் பதிக்கப்பட்டுள்ள கூட்டமான இரத்தினங்களினது நெடுந்தூரத்திலுஞ் சென்று விளங்குகின்ற சூரியனொளிபோன்ற ஒளி பிரகாசிக்கப்பெற்ற வேறொருகிருகத்தை, இருக்கும்படி-(தான்)வசிக்கும்படி, விசயன்-அருச்சுனன், பெற - பெறுமாறு, விடை ஈந்தான்-(இந்திரன் அவனுக்கு) உத்தரவு கொடுத்தனுப்பினான்; அதுகண்டு-அங்ஙனம் இந்திரன் அருச்சுனனுக்குத் தனிமாளிகை கொடுத்ததைப் பார்த்து, (தானுந் தனி மாளிகையையடைய விரும்பினான் போல), அருக்கன் - சூரியன் குடகடல் மாளிகை-மேல்கடலாகிய வீட்டை, அணி தேரொடு |