'அன்போடழல்வருபாவையை யடைவுன்னி யளித்தாய்'என்றாள். இரண்டாமடியில், வன்போடு என்றும் பிரிக்கலாம். நான்காமடியில் அன்போஎன்றுமாம். நின்போன்மரபுடையார் என்றும் பாடம். (163) 164. | எனமன்னனைநீபேடியரியல்பாகெனவிதியா நனைமென்குழன்மலர்மங்கையுநாணுந்நலமுடையாள் தனிகங்குலினிடைசென்றுயர் தன்கோயில்புகுந்தாள் அனலன்றருசிலைவீரனுமஃதெய்தினனந்தோ. |
(இ - ள்.) என-என்று சொல்லி, மன்னனை-அருச்சுனனை,நீ பேடியர் இயல்பு ஆகு என-நீ பேடிகளின் தன்மையாவாயென்று, விதியா-சாபமிட்டு, நனைமெல் குழல் மலர் மங்கைஉம் நாணும் நலம் உடையாள்- அரும்புகளைச்சூடியமென்மையான கூந்தலையும் செந்தாமரைமலரில்வீற்றிருக்கின்ற இலக்குமியும் (தான் ஒப்பாகாமல்) வெட்கமடையும்படியான அழகையுமுடைய ஊர்வசி, தனி-தனியே, கங்குலினிடை-இராத்திரியிலே, உயர் தன் கோயில் - உயர்ந்த தனது மாளிகையை, சென்று புகுந்தாள்-போய்ச் சேர்ந்தாள்;அனலன் தரு சிலை வீரன்உம்-அக்கினியினாற்கொடுக்கப்பட்ட காண்டீவ வில்லையுடைய வீரனானஅருச்சுனனும், அஃது எய்தினன்-அப்பேடித்தன்மையை யடைந்தான்;அந்தோ-ஐயோ! கோயில்-சிறந்த வீடு:கோ இல் எனப் பிரிக்க:யகரம் பெற்றது, இலக்கணப்போலி. அந்தோ - இரக்கச்சொல்:ஹந்த என்ற வடசொல்லின் விகாரம்:சிங்கள நாட்டினின்று வந்துவழங்கிய திசைச்சொ லென்பாரு முளர்: இது-கவி இரங்கிக் கூறியது. நாணுந்நலம்-செய்யுளோசை நோக்கிவந்த விரித்தல். (164) 165.-சாபமேற்றஅருச்சுனன் வருந்தி யுறங்கிக்கிடத்தல். ஆடித்திருமுகமன்னவ னனுசன்றருவிசயன் பேடிப்பெயர்நாமோபெறு வோமென்றெழில்வடிவம் வாடிப்பெரிதுளநொந்தணி மாசற்றதொர்தூசான் மூடித்துயில்கொண்டான்மணி முடிமன்னவர்திலகன். |
(இ - ள்.) மணி முடி மன்னவர் திலகன் - இரத்தினங்களைப்பதித்த கிரீடத்தையுடைய அரசர்களுக்குத் திலகம்போலச் சிறந்தவனாகிய,ஆடி திருமுகம் மன்னவன் அனுசன் தரு விசயன் - கண்ணாடிபோன்றஅழகிய முகத்தையுடைய திருதராட்டிரனது தம்பியாகிய பாண்டுமகாராஜன் பெற்ற புத்திரனாகியஅருச்சுனன், பேடி பெயர் நாம்ஓ பெறுவோம் என்று-பேடி எனும் பெயரை (வீரர்களிற்சிறந்த) நாமா பெறக்கடவோம் என்று எண்ணி, எழில் வடிவம் வாடி - அழகிய உடம்பு வாட்டமடைந்து, பெரிது உளம் நொந்து-மிகவும் மனம்வருந்தி, அணி மாசு அற்றது ஒர் தூசால் மூடி - அழகியதும் குற்றமற்றதுமான தொரு ஆடையினால்(உடம்பை) மறைத்துக் கொண்டு, துயில்கொண்டான் - உறங்கிக் கிடந்தான்;(எ - று.) |