பக்கம் எண் :

100பாரதம்கன்ன பருவம்

92.- மீண்டும் பொரத்தொடங்கிய தருமன்
கர்ணனால் சோர்ந்து முதுகுகொடுத்தல்.

உறுதியுடன்மற்றொரதமிசைகொளுமுதிட்டிரனு மொருகையில்
              வயச்சிலையுமொருகையில்வடிக்கணையும்,
விறலினொடெடுத்தெதிர்செல்பொழுதருண்மிகுத்தமொழி
           வெயிலவனளித்தருளும்விதரணகுணக்குரிசின்,
மறமுறவிடுத்தகணைபொடியுறவியற்றியவன் மதுமல
                    ருரத்தைவழிவழிதுளைபடுத்துதலி,
னெறிபடைவிடுத்திரதமிசையுறவிளைத்துமுதுகிடவறன்மகற்கிரவி
                            மகனிவையுரைத்தனனே.

     (இ-ள்.) உறுதியுடன் - வலிமையோடு, மற்று ஒர் ரதம் மிசை கொளும் -
வேறொரு தேரின்மேல் ஏறிக்கொண்ட, உதிட்டிரன்உம் - தருமனும், ஒருகையில் -
இடக்கையில், வயம் சிலைஉம் - வெற்றியைத்தருகிற வில்லையும், ஒரு கையில் -
வலக்கையில், வடி கணை உம் - கூர்மையான அம்புகளையும், விறலினொடு
எடுத்து- பராக்கிரமத்தோடு எடுத்துக்கொண்டு, எதிர் செல்பொழுது - எதிரிற்
செல்கிறபொழுதில், அருள் மிகுத்த மொழி - கருணை மிகுந்து தோன்றுகிற
இன்சொற்களையுடைய, வெயிலவன் அளித்தருளும் - சூரியபகவான் பெற்றருளிய,
விதரணம் குணம் குரிசில் - தானகுணத்தையுடைய வீரனான கர்ணன், மறம்உற
விடுத்த - (அத்தருமன்) வலிமைபொருந்த விட்ட, கணை- அம்புகளை, பொடி உற
இயற்றி - (தன்கணைகளாற்) பொடியாம்படி செய்து, அவன் மது மலர் உரத்தை -
அத்தருமனது தேனையுடைய பூமாலைகளைத் தரித்த மார்பை,  வழி வழி
துளைபடுத்துதலின் - இடந்தோறும் துளைதுளையாகச்செய்ததனால், (தருமன்), உற
இளைத்து - மிகச்சோர்ந்து, இரதமிசை - தேரின் மேல், எறி படை (பகைவர்மேல்)
எறிகிற ஆயுதங்களை, விடுத்து - போகட்டுவிட்டு, முதுகு இட - முதுகு கொடுக்க,
(அப்பொழுது), அறன் மகற்கு - தருமபுத்திரனுக்கு . இரவி மகன் - கர்ணன், இவை
உரைத்தனன் - இவ்வார்த்தைகளைச் செல்வானானான்; (எ -று.) அது மேற்கவியிற்
கூறுகின்றார்.

     ஒருரதம் - ஒரதம் எனத் தொகுத்தல் விகாரம். தானத்துக்கு இன்சொல்
முக்கியமாக வேண்டுவதாதலின், 'அருண்மிகுத்தமொழி விதரண குணக்குரிசில்'
என்றார்; "இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக" என்பர்.           (183)

93.- கர்ணன் நீ புறமிடுதல் தகாதெனல்.

உரையுடையைகற்றகலையுணர்வுடையைதக்கமதி யுளமுடையை
                     மிக்ககிளையுறவுடையைசத்யகுண,
வரையுடையையெத்திசையும்வழுவறவளர்த்தபுகழ்வரிசைகொளறத்
                      திளைஞர்வழிபடு மதிப்புடையை,
தரைமுழுதுமுத்தநிலவுமிழ்குடைநிழற்றவொருதனிநனிபுரக்குமுயர்
                           தலைமைபெறுகிற்றிபகை,
கரையழியவுற்றபொழுதுயிர்கொடுபுறக்கிடுதல்கடனலவுனக்குநிலை
                              கருதியணிநிற்றியெனா.

இதுவும் மேற்கவியும் - ஒருதொடர்.

     (இ - ள்.) 'உரை உடையை - புகழை யுடையவனாயிருக்கிறாய்; கலை கற்ற
உணர்வு உடையை - (படிக்கத்தக்க) நூல்களைப் படித்ததனாலுண்டாகிய நல்லறிவை
யுடையாய்; தக்க மதி உளம் உடையை - தகுந்த இயற்கையறிவோடுகூடிய
மனத்தையுடையாய்; மிக்க