(இ - ள்.)அவன் - அக்கந்தருவன், திரு தாள் மலர் போற்றி - (இந்திரனது) திருவடித்தாமரைமலர்களைவணங்கி, (விடைபெற்றுக்கொண்டு), அ கொற்றவன் திரு முன்னர் குறுகி-வெற்றியையுடைய அவ்வருச்சுனனது திருமுன்பே வந்து அடைந்து, ஆங்கு உற்ற யாஉம் உணர்ந்தனன் - அங்கே நடந்த செய்திகள் எல்லாவற்றையும் அறிந்துகொண்டு, மீண்டுபோய் - திரும்பிப்போய், சுரர் கோ முன் - தேவராஜனானஇந்திரனது எதிரில், தொழுது - வணங்கி, சொற்றனன்-(அவற்றைச்) சொன்னான்; மற்று - அசை. அவன்என்பதற்கு - இந்திரனுடைய என்று உரைத்து, கந்தருவன் எனத் தோன்றாவெழுவாய்வருவித்தலுமாம். திருத்தாண்மலர் - ஸ்ரீபாதாரவிந்தம்:திருமுன்னர் - சன்னிதானம். (169) 170.-இந்திரன்தேவர்சூழ்ந்துவர அருச்சுனனை யணுகுதல். சொன்னவாசகங் கேட்டசுரபதி கன்னம்வெந்து கண்ணாயிரமும்புனல் துன்னவானவர் சூழ்வரத்தானும்போய் அந்நராதிபன் றன்னையணுகினான். |
(இ-ள்.)சொன்ன வாசகம் கேட்ட - (கந்தருவன்) சொன்ன அவ்வார்த்தையைச் செவியுற்ற, சுரபதி - தேவேந்திரன்-கன்னம் வெந்து - காதுகள் வெதும்பி, கண் ஆயிரம்உம் புனல் துன்ன-ஆயிரங்கண்களிலும் நீர்நிறையவும், வானவர் சூழ்வர - தேவர்கள் சுற்றிலும் வரவும், தான்உம் போய் - தானும் சென்று, அ நரஅதிபன்தன்னைஅணுகினான்- மனிதர்களுக்கு அரசனானஅவ்வருச்சுனனைஅடைந்தான்;(எ - று.) கன்னம் -கர்ணம் என்ற வடமொழித் திரிபு. கண்ணாயிரமும்- இனைத்தென்றறிபொருளில்வந்த முற்றுமை. வெந்து=வேவ:எச்சத்திரிபு. (170) 171.-தேவேந்திரன்சாபம்விரைவில் நீங்குமென்று சொல்லி, அருச்சுனனைத்தேற்றுதல். அணுகிமைந்தனையன்பொடுறத்தழீஇக் கணிகையிட்ட கடுங்கொடுஞ்சாபநீ தணிதியஞ்சலென் றானொருதையலால் பிணியுழந்துமுன் பேர்பெறும்பெற்றியான். |
(இ - ள்.)அணுகி - (தனது குமாரனுள்ள இடத்தை) அடைந்து, மைந்தனை- குமாரனானஅவ்வருச்சுனனை,அன்பொடு உற தழீஇ - அன்புடனே நன்றாகத்தழுவிக்கொண்டு, 'நீ-,கணிகை இட்ட கடு கொடு சாபம்-தேவவேசியான ஊர்வசிகொடுத்த மிகவும் கொடிய சாபத்தை, தணிதி - (விரைவில்) நீங்குவாய்; |